போபர்ஸ் ஆயுத பேர ஊழல் சட்டவிரோதமாகப் பல கோடி ரூபா தரகு பணம்

போபர்ஸ் ஆயுத பேர ஊழல் விவகாரத்தில் இத்தாலிய தொழில் அதிபர் குவாத்ரோச்சிக்கு சட்டவிரோதமாகப் பல கோடி ரூபா தரகுப்பணம் வழங்கப்பட்டிருப்பதாக வருமானவரி மேன்முறையீடு தீர்ப்பாய நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

இந்திய இராணுவத்துக்கு போபர்ஸ் நிறுவனத்திடம் இருந்து பீரங்கி வாங்கப்பட்டதில் ரூ.1500 கோடி அளவில் ஊழல் நடந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. கடந்த 1989 ஆம் ஆண்டில் வெளிச்சத்துக்கு வந்த ஊழல் விவகாரத்தால் அப்போதைய பிரதமர் ராஜீவ்காந்தி பதவியிழந்து புதிய பிரதமராக வி.பி.சிங் பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விவகாரத்தில் இடைத்தரகராகச் செயற்பட்ட வின்சத்தாவும் இத்தாலியத் தொழில் அதிபர் ஒட்டாவா குவாத்ரோச்சியும் ஏறத்தாள ரூ.64 கோடி தரகுப்பணம் பெற்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கை விசாரித்து சி.பி.ஐ. குவாத்ரோச்சிக்கு இந்த ஊழலில் எந்தத் தொடர்பும் இல்லை என்று நற்சான்று வழங்கியிருந்தது. ,

குவாத்ரோச்சியின் வங்கிக்கணக்கு முடக்கத்தையும் சி.பி.ஐ. நீக்கிவிட்டது. இதற்கிடையில் வின்சத்தா மரணமடைந்ததைத் தொடர்ந்து அவருக்கு எதிரான வழக்கும் கைவிடப்பட்டது. குவாத்ரோச்சிக்கு எதிரான வழக்கையும் கைவிடுவதற்காக டில்லி மெட்ரோபொலிட்டன் கோர்ட்டில் சி.பி.ஐ. சார்பில் ஏற்கனவே மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளத,

இந்த நிலையில், கடந்த 1987,88 ஆம் ஆண்டுக்கான வருமானவரி பாக்கியைச் செலுத்தும்படி வருமானவரித்துறை உத்தரவிட்டு இருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து வின்சத்தாவின் மகன் ஹெர்ஷ் என்பவர் வருமானவரி மேன்முறையீடு தீர்ப்பாயத்தில் (டிரிபியூனல்) வழக்குத் தொடர்ந்திருந்தார்.=========== நீதிபதிகள் ஆர்.சி.சர்மா,ஆர்.பி.துலானி ஆகியோரைக் கொண்ட பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்து கடந்த 31 ஆம் திகதியன்று தீர்ப்புக் கூறியது. மேன்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள் இடைத்தரகர் வின்சத்தா,தொழிலதிபர் குவாத்ரோச்சி ஆகியோருக்கு ரூ.41 கோடி தரகாக வழங்கப்பட்டிருப்பதாகத் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர.

இந்தியாவில் அந்தத் தொகை வழங்கப்பட்டிருப்பதால் அதற்கான வருமான வரியைச் செலுத்த வேண்டும் என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. (இராணுவத்துக்கு ஆயுதங்கள் வாங்குவதில் தரகு பெறுவது சட்டவிரோதம் என்பது குறிப்பிடத்தக்கது) இந்தத் தீர்ப்பின் மூலம் போபர்ஸ் ஆயுதபேர ஊழல் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஸ்பெக்ட்ரம் உள்ளிட்ட பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ள நிலையில், இந்தத் தீர்ப்பு மத்திய அரசுக்கும் காங்கிரஸ் கூட்டணிக்கும் மேலும் ஒரு பின்னடைவாகக் கருதப்படுகிறது. இந்தத் தீர்ப்பை தொடர்ந்து போபர்ஸ் ஆணைக்குழு குறித்து சிறப்பு விசாரணைக்குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டுமென்று பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அருண்ஜெட்லி வற்புறுத்தியிருக்கிறார். .

இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்திவரும் சி.பி.ஐ. எந்தவிதக் கமிஷனும் வழங்கப்படவில்லை என்று கூறி வந்தது. தற்போது மத்திய அரசின் வருமானவரித்துறை டிரிபியூனல் வழங்கியுள்ள இந்தத் தீர்ப்பில் ஆணைக்குழு வழங்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள விசித்திரமான சூழ்நிலையில் இந்த விசாரணை அவசியமென்று அவர் விளக்கமளித்தார். .

சமீபத்தில் டில்லியில் நடைபெற்ற அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டி மாநாட்டில் ஊழலை ஒழிக்க 5 அம்சத் திட்டமொன்றை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அறிவித்திருந்தார.

அதைச் சுட்டிக்காட்டிய அருண்ஜெட்லி,ஊழலுக்கு எதிராக 5 அம்சத் திட்டம் தேவையில்லை. குற்றவாளிகளைச் சிறைக்கு அனுப்பும் ஒரு அம்சத் திட்டத்தைத் தொடங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதை நினைவுபடுத்தும் விதத்தில் இந்தத் தீர்ப்பு அமைந்துள்ளதாக அருண்ஜெட்லி குறிப்பிட்டிருக்கிறார். ,

இதற்கிடையில் இந்தத் தீர்ப்புக் குறித்து உடனடியாகக் கருத்து எதுவும் தெரிவிக்க காங்கிரஸ் கட்சி மறுத்துவிட்டத,

டில்லியில் நிருபர்களைச் சந்தித்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரிடம் இது குறித்துக் கேட்கப்பட்டது.

அதற்குப் பதிலளித்த அவர் ஒரு மணிநேரத்திற்கு முன்புதான் அது குறித்து அறிந்தோம். தீர்ப்பு விபரங்களை முழுமையாகப் படித்துப் பார்த்த பிறகுதான் அதுபற்றி கருத்துச் சொல்ல முடியும் என்று தெரிவித்தார்.

{qtube vid:=sovx4XPb6Sg}

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

உறக்கத்தின் முக்கியத்துவம்

மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ...

பித்த நீர்ப்பை நோய் (பித்தநீர்ப்பை அழற்சி)

பித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று நோய்களின் பாதிப்பு ...

காக்கை வலிப்பு குணமாக

சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ...