குஜராத் லோகாயுக்தா நியமனம் மோடிக்கு பின்னடைவா?

 குஜராத் லோகாயுக்தா நியமனம் மோடிக்கு பின்னடைவா? குஜராத் மாநிலத்தில் லோகாயுக்தா நீதிபதியை நியமிப்பது தொடர்பாக உச்சநீதிமன்றம் கொடுத்திருக்கும் தீர்ப்பு இரண்டு பிரச்னைகளை நம்முன் வைத்துள்ளது. குஜராத் மாநில உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி, லோகாயுக்தா நீதிபதியை நியமிக்கும் விவகாரத்தில் அனைத்து பிற அரசியல் சாசன பொறுப்பாளிகளையும் செயலற்றதாக்கிய

அதிகாரம் குறித்தது ஒன்று. மற்றொன்று லோகாயுக்தா நீதிபதி நியமனத்தில் ஆளுநரின் பங்கு. இந்தியாவின் மேலவை உறுப்பினர்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அதிகாரங்களை அத்துமீறுவதற்கு எதிராக எனது விமர்சனங்களை முன்வைக்கிறேன்.

1986 ஆம் ஆண்டின் லோகாயுக்தா சட்டங்களை பல மாநிலங்கள் அமல்படுத்தியுள்ளன. மத்திய அரசால் சுற்றுக்கு விடப்படும் சட்ட வரைவின் அடிப்படையில்தான் மாநில அரசின் சட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. லோகாயுக்தா நியமனம் குறித்த அம்சங்கள் பெரும்பாலான மாநிலங்களில் ஒன்றாகவே உள்ளது. குஜராத் சட்டத்தின் 3(1) இன்படி:

"இச்சட்டத்தின் அம்சங்களின் படி புலனாய்வு விசாரணைகளை நடத்துவதற்காக, மாநில ஆளுநர், தனது உத்தரவாதத்தின் கீழ் லோகாயுக்தா என்ற நபரை நியமிக்கலாம். உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியின் ஆலோசனையுடன் லோகாயுக்தாவை நியமிக்க வேண்டியது அவசியம். குஜராத் மாநில அரசு 356 ஆவது சட்டப்பிரிவின் கீழ் கலைக்கப்பட்டிருந்தால் லோகாயுக்தா நியமனம் குறித்து அப்போது சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக இருப்பவரிடம் ஆலோசிக்கப்படவேண்டும். அப்படியான எதிர்க்கட்சி தலைவர் இல்லையெனில் எதிர்க்கட்சி உறுப்பினர்களாலும் தேர்ந்தெடுக்கப்பட்ட சபாநாயகர் போன்றவரிடம் ஆலோசிக்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.
இதன் அம்சங்கள் தெளிவான மொழியில் கொடுக்கப்பட்டுள்ளன. எந்தக் குழப்பமும் இல்லை.

இப்படியாக தெளிவாக கூறப்பட்டிருக்கும் நிலையில் அதை சரியாக விளக்குவதும் நடைமுறைப்படுத்துவதும் அவசியம். இந்தப் பிரிவின் படி ஆளுநரால் நியமிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. நமது அரசியல் சாசன முறைமையின் படி மந்திரிகள் சபையின் உதவி மற்றும் ஆலோசனையின் கீழ் ஆளுநர் செயல்படுகிறார். ஆளுநரின் பங்கு என்பது செயல்பூர்வமானது அல்ல. ஆளுநரின் பெயரில் அமைச்சரவை, முதலமைச்சரின் வழியாக இந்த ஆலோசனை செயல்படுகிறது. இந்த நடவடிக்கையில் நான்கு அரசியல் சாசனரீதியான பொறுப்பாளர்கள் பங்கேற்கின்றனர்.

முதலமைச்சர் தலைமை நீதிபதியிடம் ஆலோசிக்க வேண்டும். அவர் எதிர்கட்சித் தலைவரிடமும் ஆலோசிக்க வேண்டும். அடுத்தகட்டமாக தனது பரிந்துரையை ஆளுநருக்கு அனுப்ப வேண்டும். அவர் அமைச்சரவையின் உதவி மற்றும் ஆலோசனையுடன் செயல்பட வேண்டும். இதில் ஆளுநரின் பங்கு என்பது மிகவும் சிறியது. தலைமை நீதிபதியும், எதிர்கட்சித் தலைவரும் முதலமைச்சருடன் ஆலோசனையில் ஈடுபடுவதால் இதன் அங்கமாகிறார்கள்

லோகாயுக்தா திட்டமே ஆளுநர், எதிர்கட்சித் தலைவர் மற்றும் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஆகியோர் சேர்ந்து செயல்படும் அரசியல்சாசனப் பணியாகத் தான் உருவாக்கப்பட்டது. இந்த ஆலோசனை நடவடிக்கையில் முக்கியக் கருவியாக இருப்பவர் முதலமைச்சர். அவரை இந்த ஆலோசனையில் ஈடுபடுத்த வேண்டியது அவசியம். அமைச்சரவையின் ஆலோசனை மற்றும் உதவியின் அடிபடையில் உத்தரவிட வேண்டிய ஆளுநர் இதில் நான்காவது அங்கம். அரசின் பல்வேறு அங்கங்களுக்குள் அரசியல்சாசன ரீதியான சமநிலை இருக்க வேண்டும் என்பதால்தான் அதிகராத்தைப் பகிர்ந்தளிக்கும் அரசியல் சாசனத்தின் கட்டாயம் உருவாகிறது. தலைமை நீதிபதியுடன் "ஆலோசனை" செய்யவேண்டும் என்று இச்சட்டப் பிரிவில் கூறப்பட்டிருப்பதன் பொருள், தலைமை நீதிபதியின் கருத்துதான் முதன்மையானது என்று உச்ச நீதிமன்ன்றம் விளக்கமளிக்கிறது.

உச்ச நீதிமன்றம் தன் தீர்ப்பில் தலைமை நீதிபதியின் கருத்துக்கு முதன்மை அந்தஸ்து வழங்குவதோடு, அதைப்பிரத்யேகமானதாகவூம் ஆக்குகிறது. இதன் மூலம் முதலமைச்சர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரின் பங்கேற்பை வெறும் சம்பிரதாயமான்னதாக ஆக்குகிறது. "உயர்நீதிமன்ற நீதிபதியின் கருத்துக்கு முன்னுரிமை கொடுத்திருப்பதற்கு காரணம் அவர் தன்னிச்சையான அந்தஸ்தை வகிக்கிறார் என்பதுதான். அத்துடன் உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதிகளிலிருந்து லோகாயுக்தா நீதிபதி தேர்ந்தெடுக்கப்படுவதால் அவரே லோகாயுக்தாவாக நியமனம் ஆவதற்கும் முழுத் தகுதியானவர். … … … அதனால் தலைமை நீதிபதி என்பவர் இந்த விஷயத்தில் முடிவெடுப்பதற்கான முழுமையான அதிகாரத்தைக் கொண்டிருப்பவர். இந்தப் பரிந்துரையை முதலமைச்சர் ஏற்காதது முக்கியத்துவம் வாய்ந்ததல்ல. 1986இல் 3ஆவது சட்டப் பிரிவின்படி அமைச்சரவையின் உதவி மற்றும் ஆலோசனையின் கீழ்தான் ஆளுநர் இந்த முடிவை எடுத்திருக்கிறார். இச்சட்டத்தின் 3ஆவது பிரிவின்படி ஆலோசனை நடவடிக்கை இல்லாமல் முடிவெடுத்திருப்பதாக இதைக் கருத முடியாது" என்று உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவின் சட்ட உருவாக்கம் மற்றும் அரசியல் செயல்முறைகள் குறித்து உச்சநீதிமன்றம் தெரிவித்திருக்கும் கருத்துகளுடன் நான் தீவிரமாக முரண்படுகிறேன். நாடாளுமன்ற உறுப்பினர்களால் இந்தச் சட்டம் உருவாக்கப்படும்போது உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் முடிவுக்கு முழு அதிகாரம் கொடுத்து எந்த அம்சமும் எழுதப்படவில்லை. அரசியல் சாசன ரீதியான சுயேச்சையான அதிகாரியாக உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி இருப்பது உண்மைதான் ஆனால் அதற்காக, முக்கியமான முடிவுகளை எடுபதில் முதலமைச்சருக்கோ, எதிர்க்கட்சித் தலைவருக்கோ பங்கு இல்லை என்று சொல்ல முடியாது. ஓய்வுபெற்ற நீதிபதிகளின் செயல்திறனை எடைபோட்டு முடிவெடுப்பதில் தலைமை நீதிபதிக்குத்தான் தகுதி இருக்கிறது என்று சொல்லிவிட முடியாது. நீதிபதிகள் குழு ஒன்றே நீதிபதியைத் தேர்ந்தெடுப்பதும், ஒரு நீதிபதி குறித்து பிற நீதிபதிகளே முடிவெடுப்பதும் இந்தியாவில் திருப்திகரமான செயல்முறையாக இல்லை. இது தோல்விகரமானது என்று பலரும் கூறுகின்றனர். பரந்த அளவிலான தேசிய நீதித்துறை ஆணையம் தற்போதைய தேவையாகவும் நியாயமான கோரிக்கையாகவும் உள்ளது.

நீதிபதிகளே நிதிபதிகளை நியமிக்கும் தற்போதைய நடைமுறை அவ்வளவு சரியானதல்ல என்பது அனுபவமாகியுள்ளது. அரசியல் சாசன ரீதியான பொறுப்புள்ளவர்கள் பொருத்தமான கருத்துகளை முன்வைக்கலாம். சட்டத்தை உருவாக்குபவரைப் பொருத்தவரை அரசியல் சாசன ரீதியானவர்கள் ஆலோசனை நடைமுறையில் அங்கம் வகிக்க வேண்டும். அவர்களின் பங்களிப்பு என்பது சமமானது. முக்கியத்துவம் அற்றதல்ல. ஆனால் உச்ச நீதிமன்றத் தீர்ப்போ உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியின் பங்கைத் தனித்த அதிகாரம் கொண்டது என்றும் ஆலோசனை நடைமுறைகளிலிருந்து துண்டிக்கப்பட்டதாகவும் மற்ற அரசியல் சாசன பொறுப்பாளர்களின் பங்கு முக்கியத்துவமற்றது என்ன்றும் கருதுகிறது. தீர்ப்பு அத்துடன் நிற்கவில்லை. தலைமை நீதிபதி, அமைச்சரவையின் ஆலோசனை மற்றும் உதவியின்றி நேரடியாக ஆளுநருக்கு எழுதியுள்ள கடிதமே தற்போது அமைச்சரவையின் ஆலோசனை மற்றும் உதவியாகக் கருதப்படுகிறது. இதனால் அமைச்சரவையின் ஆலோசனை அதிருப்தியே அதன் உதவி மற்றும் ஆலோசனையாகக் கருதப்படுகிறது. அந்த அளவுக்கு ஆமைச்சரவையின் பங்குமுக்கியத்துவம் அற்றதாக ஆக்கப்பட்டிருக்கிறது.

உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியின் கருத்தே முக்கியமானது என்பதே உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு கூறும் காரணங்களின் ஒட்டுமொத்தமானதும் தவிர்க்க முடியாததுமான விளைவு. அதாவது அரசியல் சாசன ரீதியாக அதிகாரம்பெற்ற முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரின் கருத்துகள் முக்கியமாவையல்ல. ஓய்வு பெற்ற நீதிபதிகள் பற்றிக்கருத்துக் கூற அவர்கள் பொருத்தமற்றவர்கள் அல்ல. நீதிபதிகள் மட்டுமே நீதிபதிகள் பற்றிக் கருத்துக் கூறலாம். அதிகாரத்தைப் பகிர்ந்தளிப்பதில் உள்ள சமநிலையை இந்தத் தீர்ப்பு குலைக்கிறது. லோகாயுக்தா நீதிபதியை நியமிப்பது உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியையும் உள்ளடக்கிய ஒரு நிர்வாக நடைமுறை. அது உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியின் தனி அதிகாரத்துக்குட்பட்ட ஒன்றாக மாற்றப்பட்டுள்ளது.

அரசியல் சாசன ரீதியிலான நடைமுறையின் மையமாக விளங்கும் முதல்வரின் பாங்கு ரத்துசெய்யப்பட்டுள்ளது. ஆளுநருக்குத் தலைமை நீதிபதி எழுதும் கடிதமே அமைச்சரவையின் ஆலோசனை மற்றும் உதவிக்குப் பதிலீடாகக் கருதப்படுகிறது. அரசியல் சாசன ரீதியிலான இந்த நடைமுறையில் எதிர்க் கட்சித் தலைவரின் கருத்துக்கும் இதே கதிதான்.

இந்தத் தீர்ப்பு லோக்பால் சட்டத்தின் மீது நேரடியான தாக்கத்தைச் செலுத்தும். பிரதமர், மக்களவைச் சபாநாயகர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர், இந்தியத் தலைமை நீதிபதி அல்லது அவரால் நியமிக்கப்படுபவர், புகழ்பெற்ற ஜூரிஸ்ட் ஆகியோர் அடங்கிய குழு லோக்பால் தலைவரையும் உறுப்பினர்களையும் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று மாநிலங்களவையின் தேர்வுக் குழு பரிந்துரைத்தது. உச்ச நீதிமன்றம் தற்போது தெரிவித்துள்ள கருத்து சரியானது என்றால், பிரதமர், மக்களவைச் சபாநாயகர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர், புகழ்பெற்ற ஜூரிஸ்ட் ஆகியோர் இந்தக் குழுவில் மௌனப் பார்வையாளர்களாக இருப்பார்கள். ஏனென்றால், லோக்பால் தலைவரையும் உறுப்பினர்களையும் நியமிக்கும் விஷயத்தில் இந்தியத் தலைமை நீதிபதிக்கே முதன்மைப் பங்கும் பிரத்யேக அதிகாரமும் இருக்கும்.

சட்டத்தை இயற்றியவர்களின் நோக்கம் இதுவல்ல என்பது வெளிப்படை. இந்தப் பிரிவை நாடாளுமன்றம் மறு பரிசீலனை செய்ய வேண்டும். ஏனெனின் இதன் அடிப்படையில் செயல்பட்டால் லோக்பால் நியமனம் பரந்துபட்ட முறையில் அமையாது. நீதிமன்றங்கள் அரசியல் சாசன ரீதியிலான அதிகாரங்கள் கொண்ட பிறரது பங்கேற்பினை நீக்கிவிட்டு, தங்களுக்கு நிர்வாக அதிகாரத்தை வழங்கிக்கொள்ளும் நிலை வரக்கூடும் என்று இதற்கு விளக்கம் அளிக்கலாம். நீதித்துறை என்னும் அமைப்பின் முக்கியத்துவத்தைக் குறைப்பதில் எனக்கு விருப்பம் இல்லை. அதே சமயத்தில், நிர்வாக விஷயங்களில் சட்டமன்றத்தின் பங்கினையோ தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் பங்கினையோ குறைப்பதை அனுமதிப்பதையும் நான் விரும்பவில்லை. சட்டத்திற்கு விளக்கம் அளித்து வழக்குகளில் முடிவினை எட்டுவதுதான் நீதித்துறையின் பங்கு. நிர்வாக ரீதியிலான நியமனங்களில் சட்டமன்றங்கள் மற்றும் ஆட்சியாளர்களின் பங்கை நீக்கிவிட்டுத் தங்கள் அதிகார எல்லைகளை அவை விஸ்தரித்துக்கொள்ள முடியாது.

ஆளுநர்

குஜராத் ஆளுநர் அரசியல் சாசனத்துக்கு விரோதமான முறையில் செயல்பட்டிருக்கிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அதிகாரத்தில் குறுக்கிட அவர் விரும்பினார். ஆளுநரைப் பற்றி உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் இப்படிக் குறிப்பிடப்பட்டிருக்கிறது:

 "அமைச்சரவையின் உதவி அல்லது ஆலோசனையால் தான் கட்டுப்படுத்தப்படவில்லை என்றும் லோகாயுக்தாவின் நீதிபதியை நியமிக்கத் தனக்குப் பிரத்யேக அதிகாரம் உள்ளது என்றும் ஆளுநர் 3.3.2010 அன்று எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். இது அரசியல் சாசனத்தின் உணர்வுக்கு முரணானது. முறையற்ற சட்ட ஆலோசனையின் விளைவாகவே இது தெரிகிறது. தெரிவிக்கப்பட்ட கருத்து சட்டத்தின் ஆட்சிக்கு இசைவானதாக இல்லை.  ஆளுநரின் கண்ணோட்டம் தேவையற்றது, தர்க்கத்துக்குப் பொருந்தாதது….. ….. முறையற்ற ஆலோசனை ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அட்டர்னி ஜெனரலின் ஆலோசனை மேலே குறிப்பிடப்பட்டுள்ள வழக்கில் இந்த நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் அமைந்தது. இது தொடர்பான எல்லா விவரங்களும் முதல்வருக்குத் தெரியும்."

ஆளுநர் தன் சொந்த விருப்பத்தின் அடிப்படையில் செயல்பட முடிவெடுத்தார். லோகாயுக்தா நீதிபதியாகக் குறிப்பிட்ட நபரை நியமிப்பது தொடர்பாக அமைச்சரவையிடமிருந்து அவருக்கு எந்த ஆலோசனையோ உதவியோ வழங்கப்படவில்லை. அமைச்சரவையின் அதிருப்தியே  அவருக்கு உதவியாகவும் ஆலோசனையாகவும் அமைந்தது. இந்த முரண்பாட்டின் அடிப்படையில்தான் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள் பரிந்துரைக்காத ஒருவர் குஜராத்தின் லோகாயுக்தா நீதிபதியாக இருப்பார். அரசியல் சாசன ரீதியிலான குறுக்கு வழிகளால் நல்ல ஆளுகை கிடைத்துவிடாது. நல்ல முன்னுதாரணங்களும் ஏற்படாது.

நன்றி ஸ்ரீ அருண் ஜேட்லி மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆப்பிளின் மருத்துவக் குணம்

ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ...

கெட்ட கொழுப்பை குறைக்கும் ஓட்ஸ்

உடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் முதன்மையாக இடம் ...

கருஞ்செம்பையின் மருத்துவ குணம்

கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ...