நீதித்துறையின் பணியை, எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன

‘நீதித்துறையின் பணியை, எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன’ என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி சமீபத்தில் தெரிவித்த கருத்துக்கு, முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பதிலளிக்கையில், ‘நாடாளுமன்றத்திலோ அல்லது மாநில சட்டமன்றத்திலோ எதிர்க் கட்சியின் பங்கை நீதித்துறை நிறைவேற்றும் என்று மக்கள் கருதக் கூடாது’ என்று கூறினார்.

முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட் அளித்த பேட்டியில், “ எதிர்க்கட்சிகளுக்கு ஜனநாயகத்தில் தனிஇடம் உள்ளது. எதிர்க்கட்சி தலைவருடன் நான் இப்பிரச்சினையில் உடன்டவில்லை, ஏனென்றால் நாங்கள் இங்கு பேசுவது இதுவல்ல. ஆனால் நான் சொல்லவிரும்புவது இதுதான், நீதித்துறை எதிர்க் கட்சிகளின் பணியை செய்ய வேண்டும் என்று மக்கள் கருதக்கூடாது. நாடாளுமன்றத்திலோ அல்லது சட்டசபையிலோ எதிர்க்கட்சியின் பங்கை நீதித்துறை வகிக்க வேண்டும் என்ற தவறான கருத்து உள்ளது ” என்றார்.

மேலும், “நிர்வாக நடவடிக்கை சட்டத்திற்கு இசைவானதா, அது அரசியலமைப்புக்கு இசைவானதா என்பதை ஆராயும்கடமை எங்களுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. அரசியல் எதிர்க்கட்சிக்கு ஜனநாயகத்தில் வேறுஇடம் உள்ளது. எதிர்க்கட்சிகளின் தோள்களில் இருந்து மாற்றி, நீதிமன்றத்தை அரசியல் எதிர்ப்பிற்கான இடமாக மாற்றமுயற்சிக்கிறார்கள்”என்றார்

பிரதமர் நரேந்திர மோடி தனது இல்லத்தில் நடந்த கணபதி பூஜையில் கலந்துகொண்ட பிறகு எழுந்த சர்ச்சைக்கு பதிலளித்த அவர், இது தனித்துவமானது அல்ல என்றும், இதற்கு முன்பும் பிரதமர்கள் சமூக நிகழ்வுகளில் நீதிபதிகளின் வீடுகளுக்குச் சென்றுள்ளனர் என்றும் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை எ ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி 'அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால், ஆகாஷ், ரத்தீஷ் ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக � ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக பாஜக நிலைப்பாடு: நயினார் நாகேந்திரன் விளக்கம் “மாநிலங்களவைத் தேர்தல் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுந ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் பீகார் பயணம் இந்தியா- நேபாளம் எல்லையில் பீகார் பகுதியில் இந்திய வான் ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற� ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் மோடி சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதம� ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதமர் மோடி வழங்கிய தகவல்களும் அறிவுரை முக்கியமான ஒரு ஆய்வு சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்� ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்கரவாதம்: பிரதமர் மோடி பயங்கரவாதத்தை மறைமுகப் போா் என்பதையும் கடந்து, நன்கு திட்டமிட்ட ...

மருத்துவ செய்திகள்

வயிற்றில் உள்ள பூச்சிகள் கிருமிகள் அகல வேண்டுமானால்

குப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும்.

எலும்பு மஜ்ஜை குறைபாடு நீங்க

நோய் எதிர்ப்புச்  சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது  எலும்பு மஜ்ஜை ...

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ...