பெண்களுக்கு அதிகாரம், மரியாதை , பாதுகாப்பு வழங்குவதும் ஆர்.எஸ்.எஸ்.சின் சித்தாந்தம்

பெண்களுக்கு அதிகாரம், மரியாதை , பாதுகாப்பு வழங்குவதும் ஆர்.எஸ்.எஸ்.சின்  சித்தாந்தம் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத், நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், சமூகத்தில் மேற்கத்திய கலாசாரத்தை பின் பற்றுவதன் விளைவாகவே பாலியல் பலாத்கார சம்பவங்கள் நடப்பதாக தெரிவித்திருந்தார். இதற்க்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட ஒருசில கட்சிகள் அடிப்படை காரணமே இல்லாமல் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ராம்மாதவ் ; “”ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பாகவத்தின் கருத்துக்களை சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

பெண்களின் மீதான தாக்குதல் , பாலியல் பலாத்காரம் எனும் இழிவான குற்றங்களை அவர் கண்டித்துள்ளார். இந்த செயலில் ஈடுபடுவோர் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும் என அவர் கூறியுள்ளார்” என்றார்.

இது குறித்து பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்ததாவது,

“”ஆர்எஸ்எஸ். தலைவர் பாகவத்தின் சிலகருத்துக்கள் தொடர்பாக இப்போது எழுந்துள்ள சர்ச்சை தேவையற்றது. அவரது கருத்தை முழுமையாக புரிந்துகொள்ள வேண்டும். பெண்களுக்கு உயர்கௌரவம் வழங்கும் இந்தியாவின் கலாசாரம் மற்றும் பாரம்பரியம் பற்றியே பாகவத் குறிப்பிட்டுள்ளார்.

குற்றவாளிகளுக்கு கடும்தண்டனை வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார். பெண்களுக்கு அதிகாரம், மரியாதை மற்றும் பாதுகாப்பு வழங்குவதும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சித்தாந்தம் ஆகும்” என்று தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆஷ்த்துமாவுக்கான உணவு முறைகள்

"ஆஸ்துமா" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச சிறுகுழல்கள் சுருங்குவதால் ...

உலகமயமாகும் இந்திய மூலிகைகள்!!!

உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ...

உளுந்தின் மருத்துவக் குணம்

இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ...