பெண்களுக்கு எதிரான வன்கொடுமை வழக்குகளில் விரைவான விசாரணை-மோடி வலியுறுத்தல்

கோல்கட்டா பயிற்சி பெண்டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்ட விவகாரம் தீவிரமடைந்துள்ளநிலையில், “பெண்களுக்கு எதிரானவன்முறை வழக்குகளில் மிக விரைவான விசாரணை நடத்தி, உத்தரவுகள் பிறப்பிக்கவேண்டும்,” என, பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.

மேற்கு வங்கமாநிலம் கோல்கட்டாவில், பயிற்சி பெண் டாக்டர் பாலியல்பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்ட விவகாரம், நாடு முழுதும் பெரும்கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதைத் தவிர, பெண்களுக்கு எதிரானவன்முறை சம்பவங்களும் அதிகரித்துள்ளன. பெண்களின் பாதுகாப்பு தொடர்பாக பெரும்விவாதம் நடந்து வருகிறது.

‘பாலியல் பலாத்கார வழக்குகளை விரைவாகவிசாரித்து, கடுமையான தண்டனை வழங்க உரிய சட்டம் இயற்ற வேண்டும்’ என, மேற்கு வங்கமுதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி தொடர்ந்து கூறி வருகிறார். இதுதொடர்பாக பிரதமருக்கு அவர் கடிதம் அனுப்பியுள்ளார்.

ஏற்கனவே உள்ள சட்டங்களே, இந்தப்பிரச்னையில் மிகவும் கடுமையாக உள்ளதாகவும், அந்தச் சட்டங்களை மாநில அரசுகள் முறையாக பின்பற்றவேண்டும் என்றும், மத்திய அரசு தரப்பில் பதில் மனு அனுப்பப்பட்டது.

பெண்கள் பாதுகாப்புவிவகாரம் தொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்மு, சமீபத்தில் வேதனை தெரிவித்திருந்தார். பிரதமர் மோடியும், சிலநிகழ்ச்சிகளில் பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக பேசினார். இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின், 75வது ஆண்டையொட்டி, மாவட்டநீதித்துறை மாநாடு நடத்தப்படுகிறது. இதை டில்லியில் நேற்று துவக்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது:

நீதித்துறையின் வளர்ச்சி மற்றும் வசதிக்காக பலதிட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. நவீன தொழில்நுட்பங்கள் நீதித்துறையின் விரைவானவிசாரணைக்கு பெரிதும் உதவுகின்றன.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடு ...

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்தால் தான் வேலை நடக்கிறது -நிதின் கட்கரி '' அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்தால் தான் வேலை ...

காஷ்மீரை அழிக்க காங்கிரஸ் திட் ...

காஷ்மீரை அழிக்க காங்கிரஸ் திட்டம் அமித் ஷா குற்றச்சாட்டு ஸ்ரீநகர்: ''காங்கிரஸ் கட்சியும், ராகுலும், ஜம்மு காஷ்மீரை மீண்டும் ...

NPS வாத்சலயா திட்டத்தை நிர்மலா சீ ...

NPS வாத்சலயா திட்டத்தை நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார் மத்திய பட்ஜெட் 2024-25 அறிவிப்பைத்தொடர்ந்து, மத்திய நிதி பெருநிறுவனங்கள் ...

ஜார்கண்டில் ஒட்டு வங்கி அரசியல ...

ஜார்கண்டில் ஒட்டு வங்கி அரசியலால் பழங்குடியினருக்கு அச்சுறுத்தல் -மோடி  பேச்சு ஜாம்ஷெட்பூர்: ''ஜார்க்கண்டில் ஓட்டு வங்கி அரசியலுக்காக, வங்கதேசம் மற்றும் ...

ஒரே நாடு ஒரே தேர்தல் மத்திய அரச ...

ஒரே நாடு ஒரே தேர்தல் மத்திய அரசு தீவிரம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மூன்றாவது ஆட்சி காலத்தில், ...

பிரதமர் வீட்டில் உள்ள பசு ஈன்ற ...

பிரதமர் வீட்டில் உள்ள பசு ஈன்ற கன்றுக்கு பிரதமர் தீபஜோதி என பெயரிட்டு மகிழ்ச்சி பிரதமர் மோடியின் இல்லம், டில்லியில் எண் 7 லோக் ...

மருத்துவ செய்திகள்

எள்ளுச் செடியின் மருத்துவக் குணம்

கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ...

சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும் வெள்ளரி காய்

வெள்ளரி காய் சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும். தாகம் தணிக்கும், நரம்புகளுக்கு வலிமை ...

தியானம் செய்யத் தேவையானவை

நல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் மந்திரம் குறியீடு (அடையாளம்) குரு.தியானம் ...