உயிரே போகும்நிலை வந்தாலும் தைரியத்தை விடாதே

 உயிரே போகும்நிலை வந்தாலும் தைரியத்தை விடாதே ஒருசமயம் சுவாமி விவேகானந்தர் லண்டன் மாநகரில் அவரது நண்பர் ஒருவரது பண்ணை வீட்டில் தங்கியிருந்தார். அந்த பண்ணைவீடு மிகப்பெரிய நிலப்பரப்பில், இயற்கை எழில்சூழ்ந்த இடத்தில் இருந்தது. அங்கே எராளமான மாடுகள் வளர்க்கப்பட்டன.

ஒருநாள் மாலை, பண்ணை மைதானத்தில் விவேகானந்தர் வாக்கிங் சென்றுகொண்டிருந்தார். அவருடன் நண்பரும், நண்பரின் மனைவியும் நடந்துசென்று கொண்டிருந்தனர்.

அப்போது— சற்றும் எதிர் பாராத விதமாக ஒருமாடு அவர்களை நோக்கி சீறிப்பாய்ந்து வந்தது. அதன் மூர்க்கத் தனமான ஓட்டத்தை பார்த்து பயந்துபோன நண்பரின் மனைவி, அப்படியே மயங்கிவிழுந்து விட்டார்.

அதை கண்டதும் விவேகானந்தரும், அவரது நண்பரும் துணுக் குற்றனர்.

மனைவியை தூக்க நண்பர்முயன்றார். அப்போது மாடு அவர்களை நெருங்கிவிட்டது. நண்பருக்கு கையும் காலும் ஓடவில்லை.

இன்னும் சிலநொடிகள் அங்கே இருந்தால் மாட்டின் கொம்புகளுக்கு இரையாகநேரிடும் என்பதை உணர்ந்த நண்பர், தன் உயிரை காப்பாற்றிக்கொள்ள எழுந்து வேறுதிசையில் ஓடினார். ஆனால், விவேகானந்தர் அப்படி இப்படி அசையாமல் ஆணி அடித்ததுபோல் அந்த இடத்திலேயே நின்று விட்டார்.

பாய்ந்துவந்த மாடு, கீழே விழுந்துகிடந்த நண்பரின் மனைவியையும் விவேகானந்தரையும் விட்டுவிட்டு, ஓடிக்கொண்டிருந்த நண்பரை துரத்தியது.

அதைக்கண்ட நண்பர் பின்னங்கால் பிடறியில் அடிக்க, உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஓடினார். மாடும் விடாமல் அவரைத்துரத்தியது.

அதிர்ஷ்டவசமாக ஒரு கட்டடத் திற்குள் புகுந்து தப்பினார் நண்பர். அதன்பிறகே பண்ணை ஊழியர்கள் ஓடிவந்து மாட்டைப் பிடித்து கட்டிப்போட்டனர்.

விவேகானந்தர் அதன்பிறகே அந்த இடத்தைவிட்டு அசைந்தார்.

அங்குவந்த நண்பருக்கோ ஒரே ஆச்சரியம். அப்போது நண்பரின் மனைவியும் மயக்கம்தெளிந்து எழுந்தார்.

""சிறிதுகூட பயமே இல்லாமல் அந்த ஆபத்தான நேரத்திலும் ஒரேஇடத்தில் உறுதியாக உங்களால் எப்படி நிற்கமுடிந்தது?" என்று கேட்டார் நண்பர்.

அதைக் கேட்டு மெல்லப்புன்னகைத்த விவேகானந்தர், ""நான் வித்தியாசமாக எதையும் செய்துவிடவில்லை. வருவது வரட்டும்; சமாளிப்போம் என ஒருவித மனஉறுதியுடன் நின்று விட்டேன். ஓடுபவரை கண்டால் துரத்திச்செல்வது மிருகங்களுக்கு உரியகுணம். அதனால் தான் மாடு என்னை விட்டுவிட்டு, ஓடிக்கொண்டிருக்கும் உங்களை துரத்தியது," என முடித்தார்.

உயிருக்கு ஆபத்தான நேரத்தில்கூட, அதைக்கண்டு பயந்து ஓடாமல், வருவது வரட்டும் என மனஉறுதி பெற்றிருந்த சுவாமி விவேகானந்தரை பார்த்து பெரிதும்வியந்தார் நண்பர்.

உயிரே போகும்நிலை வந்தாலும் தைரியத்தை விடாதே ! நீ சாதிக்கபிறந்தவன் துணிந்து நில் , எதையும்வெல்.

–சுவாமி விவேகானந்தா ..

விவேகானந்தரின் வாழ்வும் வாக்கும்

One response to “உயிரே போகும்நிலை வந்தாலும் தைரியத்தை விடாதே”

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

எலும்பு மஜ்ஜை குறைபாடு நீங்க

நோய் எதிர்ப்புச்  சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது  எலும்பு மஜ்ஜை ...

மஞ்சள்காமாலை சித்த மருத்துவ சிகிச்சை

குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ...

நித்தியகல்யாணியின் மருத்துவ குணம்

நித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, தண்ணீர் விட்டுச் ...