பாகிஸ்தானுடன் உறவை நீட்டிப்பதில் இனி எந்த அர்த்தமும் இல்லை

 பாகிஸ்தானுடன்  உறவை நீட்டிப்பதில் இனி எந்த அர்த்தமும் இல்லை இரண்டு இந்திய ராணுவ வீரர்களை கொடூரமாக கொலை செய்த பிறகு , பாகிஸ்தானுடன் இயல்பான உறவு வைத்து கொள்வதற்கு, இனி என்னவேலை இருக்கிறது. பாகிஸ்தான் ராணுவத்தின் நடவடிக்கை, காட்டு மிராண்டி தனமானது, என்று பிரதமர் மன்மோகன்சிங் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது; எல்லைபகுதியில், போர்நிறுத்த ஒப்பந்த விதிமுறைகளை மீறி, பாகிஸ்தான் ராணுவம் நடந்துகொண்ட விதம், ஈவு இரக்க மற்றது; காட்டு மிராண்டி தனமானது. இந்திய வீரர்களின் தலைகளை துண்டித்ததை, ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

இதற்கு காரணமானவர்களை , சட்டத்தின் முன்நிறுத்தி, கடும்தண்டனை பெற்றுத் தரவேண்டும். பாகிஸ்தான் அரசு இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என நம்பிக்கை உள்ளது. இது போன்ற காட்டுமிராண்டி தனமான நடவடிக்கைகளை, பாகிஸ்தான் இராணுவம் மேற்கொண்ட பிறகும் , அந்த நாட்டுடன், இயல்பான உறவை வைத்துக்கொள்வது, இயலாதகாரியம். பாகிஸ்தான் ராணுவத்துடன் உறவை நீட்டிப்பதில், இனி எந்த_அர்த்தமும் இல்லை. தங்கள் மீதான குற்றச்சாட்டை பாகிஸ்தான் ராணுவம், தொடர்ந்து மறுத்துவருகிறது. இதை, அவர்களுக்கு புரியவைக்க, முயற்சி மேற்கொள்ளப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முருங்கை இலைக் காம்பு | முருங்கை இலை காம்பின் மருத்துவ குணம்

முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன ...

துவர்ப்பு

உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் ...

அறிந்து கொள்வோம் : சிறுநீரகம்

மனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் மறைந்து இருப்பவை ...