தலைநகரின் உச்சத்தை தொட்ட மோடியின் புகழ்

 தலைநகரின் உச்சத்தை தொட்ட மோடியின் புகழ் டெல்லி ஸ்ரீராம் கல்லூரி மாணவர்களிடையே நடந்த வாக்கெடுப்பின் மூலம் குஜராத் முதல்வர் நரேந்திரமோடியின் புகழ் பாரதத்தின் தலைநகரிலேயே உச்சத்தை தொட்டுவிட்டது

ஸ்ரீராம் கல்லூரி வருடம் வருடம் வர்த்தக மாநாட்டை நடத்துவதும், அதில் கலந்துகொள்ள உள்ள முக்கிய விருந்தினரை மாணவர்களிடையே வாக்கெடுப்பை நடத்தி தேர்ந்தெடுப்பதும் வாடிக்கை.

இந்நிலையில் இந்த வருடத்துக்கான கூட்டத்துக்கு யாரை அழைக்கலாம் என மாணவர்களிடையே வாக்கெடுப்பு நடத்தப் பட்டது. இந்த வாக்கெடுப்பு பட்டியலில் நரேந்திர மோடி. மத்திய அமைச்சர்கள் ஐந்து பேர் மேலும் ராகுல் காந்தி, ரத்தன் டாட்டா உள்ளிட்டவர்களின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன.

இதில் நரேந்திர மோடி பெருவாரியான மாணவர்களின் ஆதரவை பெற்று முதலிடத்தையும் . ரத்தன் டாட்டா இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளார். இதில் ராகுல் காந்தி மற்றும் மத்திய அமைச்சர்கள் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை.

"கல்லூரி மாணவர்கள் அமைப்பு 10-15 முக்கிய நபர்களுக்கு அழைப்பு கடிதத்தை அனுப்பியது. இதில் குஜராத் முதல்வரே முதலில் தொடர்புகொண்டு சம்மதம் தெரிவித்தார், அதுவும் கடிதம் அனுப்பிய மூன்றாம் நாளே. பேச்சாளர்களுக்கான தேர்வுகள் அனைத்தும் ஜனநாயக முறைப்படியே நடந்தது" கல்லூரி முதல்வர் பி.சி.ஜெய்ன்

எது எப்படியோ இந்தியாவின் தலைநகரில் அமைந்துள்ள தலைசிறந்த கல்லூரிகளில் ஒன்றான ஸ்ரீராம் கல்லூரிக்குள் பெருவாரியான மாணவர்களின் ஆதரவை பெற்று நுழையும் நரேந்திர மோடி, சற்றே கொஞ்சம் அருகில் அமைந்துள்ள பாராளுமன்றத்துக்குள் பிரதமராக நுழையும் காலம் வெகு தூரத்தில் இல்லை. பெருவாரியான மாணவர்களின் எண்ணங்களும் , பெருவாரியான பாரத மக்களின் எண்ணங்களும் ஒன்றாக இருக்கும் என்றே நம்ம்புவோம்.

தமிழ் தாமரை VM .வெங்கடேஷ்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

உளுந்தின் மருத்துவக் குணம்

இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ...

நெல்லியின் மருத்துவ குணம்

நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ...

இளநீரின் மருத்துவ குணம்

காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ...