தேசத்தைக் கட்டியெழுப்புவதில் முயற்சிகளில் உறுதியான பங்காளியாக இருந்தார்

மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடாவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, பிரதமர் நரேந்திரமோடி ஒரு கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அதில், இந்திய தொழில்துறைக்கு ரத்தன் டாடாவின் பங்களிப்பு என்றென்றும் ஊக்கமளிக்கும் என புகழாரம் சூட்டியுள்ளார்.

டெல்லி : பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா(86) கடந்த அக்டோபர் 9ஆம் தேதியன்று காலமானார். அவரது உடலுக்கு அக்டோபர் 10-ஆம் தேதியன்று முழுஅரசு மரியாதை செலுத்தபட்டது. இந்நிலையில், அவர் பிரிந்து ஒருமாதங்கள் கடந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, கட்டுரை வடிவில் தொழிலதிபர் ரத்தன் டாடாவை பற்றி நினைவூட்டியுள்ளார்.

அதில், “ரத்தன் டாடா நம்மைவிட்டு பிரிந்து ஒரு மாதமாகி விட்டது. பெரிய நகரங்கள் முதல் கிராமங்கள் வரை சமுதாயத்தில் ரத்தன் டாடா இல்லாதது பெரும் வருதத்தை ஏற்படுத்தியுள்ளது. தொழிலதிபர்கள், வளர்ந்துவரும் தொழில்முனைவோர் மற்றும் கடின உழைப்பாளிகள் அவரது இழப்பிற்கு இன்றுவரை இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ரத்தன் டாடா மறைவு இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுவதும் மிக வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

இளைஞர்களுக்கு ரத்தன்டாடா ஒரு உத்வேகமாக இருந்தார். அவரது தலைமையின் கீழ் செயல்பட்ட டாடா குழுமம் உலகளவில், நேர்மை மற்றும் நன்பகத் தன்மை கொண்ட புதிய உயரங்களை தொட்டது. சமீபத்திய ஆண்டுகளில், அவர் இந்தியாவின் ஸ்டார்ட்ஆப் சுற்றுச்சூழல் அமைப்பிற்கு வழிகாட்டியாக அறியப்பட்டார். இளம் தொழில் முனைவோரின் நம்பிக்கைகளையும், அவர்களிடம் இருக்கும் திறமையையும் அறிந்துகொண்டார்.

உலகளாவிய அளவுகோல்களை அமைக்க, இந்திய நிறுவனங்களை வலியுறுத்தினார். இவரது தொலை நோக்குப் பார்வை, நமது வருங்காலத் தலைவர்களை உலகத்தரத்திற்கு ஒத்ததாக மாற்றுவதற்கு ஊக்கமளிக்கும்.

அவரது கருணை அனைத்து உயிர்களிடத்திலும் பரவியது. விலங்குகள் மீதான அவரது ஆழ்ந்தஅன்பு மற்றும் விலங்குகள் நலனில் தனிக்கவனம் செலுத்தும் ஒவ்வொரு முயற்சியையும் ஆதரித்தார். மேலும், தனது நாய்களின் புகைப்படங்களை பகிர்ந்து கொண்டார்.

உண்மையான தலைமை என்பது ஒருவரின் சாதனைகளால் மட்டுமல்ல, மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களைக் கவனித்துக் கொள்ளும் திறனால் அளவிடப்படுகிறது என்பதை அவரது வாழ்க்கை நமக்கு நினைவூட்டுவதாக இருக்கிறது.

நெருக்கடி காலங்களில் ரத்தன்டாடாவின் தேச பக்தி பிரகாசமாக பிரகாசித்தது. பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு மும்பையில் உள்ள தாஜ்ஹோட்டலை அவர் விரைவாக திறந்தது; தேசத்திற்கு ஒரு ஊக்கமாக இருந்தது. பலஆண்டுகளாக அவரை மிக நெருக்கமாக அறிந்து கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. நாங்கள் குஜராத்தில் நெருக்கமாகப் பணி புரிந்தோம். அங்கு அவர் அதிகளவில் முதலீடு செய்தார். பலதிட்டங்களில் மிகவும் ஆர்வமாக இருந்தார்.

கடந்த சிலவாரங்களுக்கு முன்பு, நான் ஸ்பெயின் குடியரசுத்தலைவர் பெட்ரோ சான்செஸ் உடன் வதோதராவில் இருந்தேன். நாங்கள் கூட்டாக C-295 விமானங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படும் ஒரு விமான வளாகத்தை திறந்து வைத்தோம். இதற்கான பணிகளை ரத்தன்டாடா தான் தொடங்கினார்.

ரத்தன் டாடா ஒரு கடித மனிதராகதான் என் நினைவில் இருக்கிறார். அவரது ஆளுமை, அரசாங்கத்தின் ஆதரவை பாராட்டுதல் அல்லது தேர்தல் வெற்றிகளுக்குப்பிறகு வாழ்த்துக்களை அனுப்புதல் போன்ற பல்வேறு பிரச்னைகள் குறித்து எனக்கு அடிக்கடி கடிதம்எழுதுவார். மேலும், அவர் நமது தேசத்தைக் கட்டியெழுப்பும் முயற்சிகளில் உறுதியான பங்காளியாக இருந்தார்.

ஸ்வச் பாரத் மிஷனுக்கு ரத்தன்டாடாவின் ஆதரவு மிக நெருக்கமானது. தூய்மை, சுகாதாரம் ஆகியவை இந்தியாவின் முன்னேற் றத்திற்கு இன்றியமை யாதவை என்பதைப் புரிந்து கொண்டு, இந்த வெகுஜன இயக்கத்தின் குரலாக இருந்தார். சமீபத்தில் ஸ்வச்பாரத் மிஷனின் பத்தாம் ஆண்டு விழாவிற் கான அவரது வீடியோ செய்தி இன்னும் எனக்கு நினைவிருக்கிறது. இது அவரது இறுதி காணொளிகளில் ஒன்றாகும்.

அவரது இதயத்திற்கு நெருக்கமான மற்றொன்று நாட்டுமக்களின் உடல்நலம்தான்; குறிப்பாக புற்றுநோய்க்கு எதிராக அவர் முன்னெடுத்த போராட்டம். கடந்த இரண்டு ஆண்டுகளுக்குமுன்பு அசாமில் பல்வேறு புற்றுநோய் மருத்துவமனைகளை நாங்கள் கூட்டாகத்திறந்து வைத்தநிகழ்ச்சி எனக்கு நினைவிருக்கிறது. அந்த நேரத்தில் அவர் தனது கருத்துகளில், தனது இறுதி ஆண்டுகளை சுகாதாரத் திற்காக அர்ப்பணிக்க விரும்புவதாக திட்டவட்டமாக கூறியிருந்தார்.

நாம் அவரை இன்று நினைவுக் கூரும்போது, ​​​​அவர் கற்பனைசெய்த சமுதாயத்தை நாம் நினைவுக் கூருகிறோம். அங்கு ஒவ்வொரு நபரின் திறன்கள் மதிப்பிடப் படுகின்றன. அவர் தொட்ட வாழ்விலும், அவர் வளர்த்த கனவுகளிலும் உயிருடன்இருக்கிறார். இந்தியாவை சிறந்த, கனிவான மற்றும் நம்பிக்கையான இடமாக மாற்றியதற்காக தலைமுறைகள் அவருக்கு நன்றியுடன் இருக்கும்,” எனக் குறிப்பிட்டிருந்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மே 2-ல் விழிஞ்சம் சர்வதேச துறைமு ...

மே 2-ல் விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி கேரளமாநிலம் திருவனந்தபுரம் விழிஞ்சத்தில் பொது-தனியார் கூட்டாண்மைமாதிரியின் கீழ் ரூ.8 ...

இயேசு கிறிஸ்துவின் தியாகத்தை ந ...

இயேசு கிறிஸ்துவின் தியாகத்தை நினைவு கூறுகிறோம் புனித வெள்ளி குறித்து மோடியின் பதிவு கிறிஸ்தவ மக்களின் புனித நாள்களில் ஒன்றாக கருதப்படும் புனித ...

தொழில்நுட்பத்துறையில் இணைந்து ...

தொழில்நுட்பத்துறையில் இணைந்து செயலாற்ற எலான் மஸ்குடன் பிரதமர் மோடி பேச்சு மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தில் அமெரிக்காவுடன் இணைந்து செயல்படுவதில் இந்தியா உறுதியாக ...

தேவைற்ற கருத்துக்களை சொல்லாதீ ...

தேவைற்ற கருத்துக்களை சொல்லாதீர்கள் – வங்க தேசத்திற்கு இந்தியா கண்டனம் மேற்குவங்கத்தில் வக்ப் திருத்த சட்டத்திற்கு எதிராக நடந்த வன்முறை ...

வக்ப் திருத்த சட்டம் : பிரதமர் ம ...

வக்ப் திருத்த சட்டம் : பிரதமர் மோடிக்கு  நன்றி தெரிவித்த தாவூதி போஹ்ரா சமூகத்தினர் வக்ப் திருத்தச் சட்டத்திற்கு நன்றி தெரிவிக்க தாவூதி போஹ்ரா ...

பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு இந் ...

பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு இந்தியா கண்டனம் காஷ்மீர் குறித்து பேசிய பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் ...

மருத்துவ செய்திகள்

அருகம்புல்லின் மருத்துவக் குணம்

காய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது அருகம்புல்லாகும். இது ...

எலுமிச்சையின் மருத்துவக் குணம்

உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ...

கோவையின் மருத்துவக் குணம்

கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ...