குஜராத்தில் தவறான தகவல்களை பரப்பும் என்.ஜி.ஓ.க்கள்

குஜராத்தில் தவறான தகவல்களை பரப்பும்  என்.ஜி.ஓ.க்கள் குஜராத் மாநிலத்தில் பிப்ரவரி 28- வந்து விட்டாலே போதும்.. என்ஜிஓக்களின் கோஷம் காதை பிளக்கும்.. இந்நிலையில் இவர்களை அனுமதிக்க வேண்டாம் என்று அரசுக்கு குல்பெர்க் சொசைட்டி வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது குறித்து சமூகவியலாளர் கிஷோர் திரிவேதி எழுதியிருக்கும் கட்டுரையில் தெரிவித்திருப்பதாவது , வருடம் தோறும் பிப்ரவரி 28ந் தேதி குஜராத்தில் எதிர் பாராத விதமாக நிகழ்ந்த கலவரத்தில் உயிரிழந்தோருக்கு அஞ்சலிசெலுத்திருக்கிறோம் என்ற பெயரில் தன்னார்வ நிறுவனங்கள் (என்.ஜி.ஓ.க்கள்) அகமதாபாத்தில் குவிந்துவிடுகின்றன.

இந்த தன்னார்வ நிறுவனங்களை அனுமதிக்க கூடாது என குல்பெர்க் சொசைட்டியினர் அகமதாபாத் போலீஸ்கமிஷனருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர் . பல தன்னார்வ நிறுவனங்கள் குஜராத்கலவரத்தை முன்வைத்து வெளிநாட்டிலிருந்து நிதிசேகரித்து வருகின்றன. அண்மையில் மத்திய திட்டக்குழு உறுப்பினர் சயீதாஹமீத் தமது வீட்டையே என்ஜிஓ ஒன்றுக்கு சட்ட விரோதமாக ஒதுக்கீடு செய்திருப்பதை பாஜக தேசிய துணைத் தலைவரும் ராஜ்யசபா எம்பி.யுமான பர்ஷோத்தம் ரூபலா அம்பலப்படுத்தியிருந்தார்.

இந்த என்ஜிஓவை நடத்தி வருபவர் ஷப்னாஹாஸ்மி. இதே போல் டீஸ்டாஸ்டல்வாட் என்ற மற்றொரு என்ஜிஓ. நிர்வாகி எப்படி தேசவிரோத மனோ பாவம் கொண்டவர் என்பதையும் அவருடன் இருந்தவரே அம்பலப்படுத்தி யிருக்கிறார். அவர் எப்பொழுதும் குஜராத்அரசுக்கு எதிராகத்தான் பேசக்கூடியவர்.

குஜராத் மாநிலத்தைப் பொறுத்த வரையில் கடந்த 3 சட்ட சபை தேர்தல்களிலும் பாஜக தான் வென்றுள்ளது. அம்மாநிலத்தில் உள்ளாட்சிதேர்தலில் பல இஸ்லாமியர்கள் பா.ஜ.க.,வில் இணைந்து வெற்றியும்பெற்றிருக்கின்றனர். ஆனால் இந்த என்ஜிஓக்கள்தான் தவறான தகவல்களைப் பரப்பிவருகின்றன என அவர் குறைகூறியுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

துத்தியின் மருத்துவக் குணம்

இதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் உடைய செடி. ...

குடல்வால் தேவையா?

மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ...

சின்னம்மை ( நீர்க்கோளவான் )

சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. ...