தினசரி பூஜை ;நிச்சயமாக ஏராளமான நன்மையை கொடுக்க கூடியது

தினசரி பூஜை ;நிச்சயமாக ஏராளமான நன்மையை கொடுக்க கூடியது தினசரி வழிபாடு நிச்சயமாக ஏராளமான நன்மையை கொடுக்க
கூடியது. குடும்ப பிரச்சனைகள், தொழில் பிரச்சனைகள், குழந்தைககளின் படிப்பு,….போன்ற பல இடத்து பிரச்சனைகளை பிரார்த்தனை மூலம் வெகுவாக குறைக்க முடியும்.

பிரார்த்தனையின் பலனை அதிகரிக்க பல குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதில் சில முக்கியமான விஷயங்கள் உடலால், பேச்சால், மனதால்- தூய்மை அதாவது குளித்து முடித்தவுடன் பூஜைக்கு செல்ல வேண்டும், பூஜை முடியும் வரை உடலால் வேறு எதையும் தொடாமல், வேறு எதுவும் தன் உடலையும் தொடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

பேச்சினாலும் தெய்வ விஷயங்களை தவிர வேறு எதையும் பேசாமலும், வேறு யாரும் எதையும் பேசி கேட்க வேண்டிய நிலை இல்லாமலும் தன்னை வைத்துக் கொள்ள வேண்டும். மனதினாலும் வேறு எதையும் நினைக்க வேண்டிய, திட்டமிட வேண்டிய
அவசியம் இல்லாமல் வைத்துக் கொள்ள வேண்டும். இவையெல்லாம் 100% சரியாக இருந்தாக வேண்டும்,

இல்லையென்றால் தெய்வ குற்றம்-என்று எதுவும் கிடையது.
ஆனால் இதை கடைபிடிக்கும் அளவுக்கு நற்பலன்களும், அதில் குறைகள் வரும் அளவுக்கு பலனில் சற்றுக் குறைவும் இருக்கும். வழிபாட்டு இடமான பூஜை அறையில் பல தெய்வங்களின் படங்கள் இருப்பது நன்மையே, ஆனால் தினசரி அத்தனை படங்களையும் துடைத்து அலங்காரம் செய்வது சிரமம். அதனால் ஒரு இஷ்ட தெய்வத்தை முடிவு செய்து கொண்டு அதற்கு தினமும் அலங்காரம் செய்வது நல்லது.

அவர் அவர் மனம் விருப்பப் படி வழிபாடு செய்யலாம் தவறு இல்லை. தெய்வம் கோபித்துக் கொள்ளாது, என்றாலும் கூட கோவிலில் செய்யப்படும் வழிபாட்டு முறைகளை கவனித்து அதையே எளிமையாக வீட்டில் செய்வது நல்லது, ஏன் என்றால் அந்தப் படி முறைகள் நம் மனதை ஒருமுகப்படுத்தி பிரார்த்தனையில் மனதை லயிக்கச்செய்ய உதவுகிறது.

அதனால் பிரார்த்தனையின் பலனும் அதிகமாகிறது. ஆனாலும் கூட பூஜையின் முறைகளை தெரிந்தவர்களிடம் கேட்டுக் கற்றுக் கொண்டு செய்வது சிறப்பே.!

நன்றி ; ஆச்சார்யர் பாரத சைதன்யர் click more

One response to “தினசரி பூஜை ;நிச்சயமாக ஏராளமான நன்மையை கொடுக்க கூடியது”

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மாற்றம் வேண்டும் என்பதில் மக்க ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்கள் உறுதி தமிழக பாஜக தலைவர் அண்ணா மலை என் மண், ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை த ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை தனது நண்பன் என கூறுகிறது ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை நண்பனாக கருதுகிறது’ என பிரதமா் ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வரு ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வருவது அசோக் சிங்ஹல் அயோத்தி என்றால் ஶ்ரீ ராமனுக்கு அடுத்து நினைவுக்குவருவது அசோக் ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்தநாடாக மாறும் என்று ...

111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணி ...

111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணிக்கை அல்ல ஆசியபாரா விளையாட்டில் இந்தியாபெற்ற 111 பதக்கங்கள் என்பது சிறிய ...

தேசியக் கொடி அவமதிப்பு திமுக ம ...

தேசியக் கொடி அவமதிப்பு  திமுக மன்னிப்பு கேட்க வேண்டும் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்கு இந்திய தேசியக் கொடியை கொண்டு ...

மருத்துவ செய்திகள்

தோல் ; தெரிந்து கொள்வோம் மனித உறுப்புகளை

பொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்ப்பன்னர் என அழைக்கலாம் உடலின் ...

ஆவாரையின் மருத்துவ குணங்கள்

ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ...

நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள:

நீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் கொள்ளவும் உதவக்கூடிய ...