பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தரிசனத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள்

சபரிமலை சன்னிதானத்தில் நடைபெற்ற மகரசங்கரமபூஜை, தொடர்ந்து திருவாபரணம் சார்த்தி தீபாராதனை, பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தரிசனத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

மகரவிளக்கு தினமான இன்று உச்சபூஜை முடிந்து பகல்

இரண்டு மணிக்கு நடை அடைக்கப்பட்டது. பின்னர் சன்னிதானம் மற்றும் மாளிகைப்புறம் கோயில்கள் சுத்தம் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டது.

மாலை ஐந்து மணிக்கு மேல்சாந்தி சசிநம்பூதி நடைதிறந்து தீபம் ஏற்றினார். அதை தொடர்ந்து தந்திரி கண்டரரு ராஜீவரரு திருவாபரண பவனியை வரவேற்க செல்லும் தேவசம்போர்டு ஊழியர்களுக்கு மாலை அணிவித்து வழியனுப்பி வைத்தார்.

சூரியன் தனுசு ராசியில் இருந்து மகரரசிக்கு கடக்கும் வேளையில் ஐயப்பனுக்கு நடைபெறும் சிறப்பு மிக்க மகரசங்கரமபூஜை இன்று மாலை 6.44 மணிக்கு நடைபெற்றது. இந்த நேரத்தில் திருவிதாங்கூர் அரண்மனையில் இருந்து வந்த முத்திரை தேங்காய்களை உடைத்த தந்திரி நெய்யை பகவானின் விக்ரகத்தில் அபிஷேகம் செய்து பக்தர்களுக்கு பிராசதம் கொடுத்தார்.

இந்த பூஜை முடிந்த சிறிது நேரத்தில் திருவாபரணங்கள் சன்னிதானம் வந்து சேர்ந்தது. திருவாவபரணத்தை பெற்றுக்கொண்ட தந்திரியும், மேல்சாந்தியும் கோயில் நடை அடைத்து ஆபரணங்களை அணிவித்தனர். பின்னர் நடை திறக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. தீபாராதனை முடிந்ததும் இரவு மணிக்கு 7.06 மணிக்கு முதன் முறையாக ஜோதி தெரிந்தது. தொடர்ந்து சில வினாடிகள் இடைவெளியில் அடுத்த இரண்டு முறை ஜோதி காட்சியளித்தது. இந்த நிகழ்ச்சிகளை காண லட்சக்கணக்கான பக்தர்கள் சன்னிதானத்தில் குழுமியிருந்தனர். ஜோதி தரிசனம் நடத்திய பக்தர்கள் ஆனந்த களிப்புடன் மலை இறங்கினர்.

மகர ஜோதி தரிஷனம் காணொளி
 {qtube vid:=jhh5A-v6iGI}

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

உடற்பயிற்சியின் அவசியம்

கொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க வேண்டுமா? ஜிம்முக்கு ...

அலரியின் மருத்துவக் குணம்

இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ...

கரு கூடாமல் போவதற்கு யார் காரணம்?

கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ...