கோவை அடுக்கு மாடி தீவிபத்து திட்டக்குழும அதிகாரிகள் தண்டீக்கப்பட வேண்டும்

 கோவை அடுக்கு மாடி தீவிபத்து திட்டக்குழும அதிகாரிகள்  தண்டீக்கப்பட வேண்டும் கோவை அடுக்கு மாடி தீவிபத்து—அனுமதி அளித்த கோவை மாநகராட்சி—உள்ளூர் திட்டக்குழும அதிகாரிகள்—உடனடியாக தண்டீக்கப்படவேண்டும்—பாஜக.கோரிக்கை

கோவை அவினாசி ரோடு லெட்சுமி மில் சந்திப்பு அருகே அடுக்குமாடி கட்டிடம் நேற்று தீக்கிரையானதும், அதில நால்வர் மரணமடைந்ததும் வருத்தததிற்குரியது..இற்ந்தவர்கள் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமைடைய..வாழ்த்துக்களையும் பாஜக தெரிவித்துக்கொள்கிறது.

தீவிபத்துக்கு காரணம் மின்கசிவு என்று சொல்லப்பட்டாலும், “அவசர வழி ” இல்லை—போதிய பாதுகாப்பு வசதிகள் கட்டடத்தில் இல்லை—கட்டிடத்தின் இரண்டு மாடிகள் அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ளது—எனபன அதிர்ச்சி அளிக்கக்கூடியதாக உள்ளது..

கோவை மாநகராட்சி ஏற்கன்வே அனுமதி மீறிய கட்டிடங்களை இடிக்க சென்னை உய்ர்நீதிமன்றத்தில் உத்தரவு பெற்று..சில பெரும்புள்ளிகளின் கட்டிடத்தைக்கூட இடித்ததும், அதற்காக “இடிக்கும் குழு ” ஒன்று உருவாக்கப்பட்டதும், முந்தைய மாநகராட்சி ஆணையர் திரு அன்சுல் மிஸ்ரா காலத்தில் நடைபெற்றது..

உய்ர்நீதி மன்ற உத்தரவு இன்னும் தொடரும் போது ஏன் அனுமதி மீறிய—சட்டவிரோத கட்டிடங்கள் இடிப்பது நிறுத்திவைக்கப்பட்டது என்று தெரியவில்லை..

நேற்றைய தீவிபத்து கட்டிடத்திற்கு அனுமதி வழங்கிய மாநகராட்சி மற்றும் உள்ளூர் திட்டக்குழும அதிகாரிகள் உடனடியாக கைது செய்யப்பட்டு அவர்கள் மீது சட்டபூர்வ விசாரணைகள் நடத்தப்படவேண்டும் என்று தமிழக அரசை பாஜக கோருகிறது..

ஏற்கனவே இடிக்காமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ள விதிமுறை மீறிய கட்டடங்கள் உடனடியாக இடிக்கப்பட வேண்டும் என மாநகராட்சியை பாஜக கோருகிறது..

பொது கட்டடங்கள்—அடுக்கு மாடி குடியிருப்புக்கள்—கல்யாண மண்டபங்கள்—ஓட்டல்கள்..சினிமா மற்றும் ஷாப்பிங்மால்கள்…இவைகளை உடனடியாக மீண்டும் அதிகாரிகள் ஆய்வு செய்து விதிமுறை மீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டால் தயவு தாட்சண்யமிண்றி…நடவடிகை எடுக்க வேண்டும் என்று பாஜக கொருகிறது..

விதிமுறை மீறல் கட்டடங்களுக்கு அனுமதி அளிக்கும் அதிகாரிகளை “குண்டர் ” சட்டத்தில் கைது செய்யவேண்டும் என்று பாஜக கோருகிறது.

எஸ்.ஆர்.சேகர் எம்.ஏ.பி.எல்.
மாநில பொருளாளர் பா.ஜ.க.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ர� ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ரயில் நிலையங்களை மோடி மே 22-ல் திறந்து வைக்கிறார் 'அம்ரித் பாரத்' திட்டத்தில் சீரமைக்கப்பட்ட பரங்கிமலை, ஸ்ரீரங்கம் ...

உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்ப� ...

உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்படுத்த வேண்டும் தமிழகத்தில் உள்ள உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்படுத்த வேண்டும் ...

மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்ப� ...

மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்பு முறை வாக்குறுதி என்ன ஆனது: தி.மு.க.,வுக்கு நயினார் நகேந்திரன் கேள்வி மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்பு முறை வாக்குறுதி என்ன ...

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் உறுத� ...

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் உறுதி ஹோண்டூராசுக்கு ஜெய்சங்கர் பாராட்டு அனைத்து வடிவங்களிலும் பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் ஹோண்டூராஸ் உறுதியுடன் இருப்பதை, ...

மாலத்தீவு படகு சேவையை மேம்படுத� ...

மாலத்தீவு படகு சேவையை மேம்படுத்த இந்தியா உதவி அதிவிரைவு படகு சவாரியை மேம்படுத்தவும், கடல்சார் இணைப்பை விரிவுபடுத்தவும், ...

மெய்சிலிர்க்க வைத்த இந்திய ராண� ...

மெய்சிலிர்க்க வைத்த இந்திய ராணுவம் பாகிஸ்தானின் ஏவுகணைத் தாக்குதலில் இருந்து பொற்கோவிலை பாதுகாத்தது எப்படி ...

மருத்துவ செய்திகள்

முருங்கை விதை | முருங்கை விதையின் மருத்துவ குணம்

முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ...

காக்கை வலிப்பு குணமாக

சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ...

டீ யின் மருத்துவ குணம்

டீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் ...