தென்மேற்கு பருவ மழை தீவிரம் வடமாநிலங்களில் வெள்ளம்

 தென்மேற்கு பருவ மழை தீவிரம் வடமாநிலங்களில் வெள்ளம் நாடுமுழுவதும் தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. குறிப்பாக உத்தரகாண்ட், இமாசலப் பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட வட மாநிலங்களில் இதன்பாதிப்பு அதிகமாக உள்ளது. ஆங்காங்கு ஏற்பட்ட காட்டாற்றுவெள்ளம், நிலச் சரிவு, வெள்ளப் பெருக்கு போன்றவற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 160 ஆக அதிகரித்துள்ளது . இதற்கிடையே

கேதர்நாத் ஆலயத்துக்கு அருகே மீட்பு பணிகளில் ஈடுபட்டிருந்த 50 காவல் துறையினரை காணவில்லை என தகவல் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.

மேலும், வெள்ளம்காரணமாக இமயமலை தொடரில் உள்ள கேதாரநாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி உள்ளிட்ட புண்ணிய தலங்களிலும், சமோலி, ருத்ரபிரயாக், உத்தரகாசியிலும் மொத்தம் 71,440 யாத்ரீகர்கள் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கத்தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.

மேலும் டெல்லியில் யமுனை ஆற்றிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது இது குறித்து டெல்லி அரசு செவ்வாய்க் கிழமை வெளியிட்ட செய்தி குறிப்பில்,” யமுனை ஆற்றின் நீர்மட்டம் தொடர்ந்து அபாயகட்டத்துக்கு மேல் உள்ளது.
வெள்ள அபாயம்குறித்து, அதிகாரிகளுடன் முதல்வர் ஷீலாதீட்சித் தொடர்ந்து பேசிவருகிறார். யமுனை ஆற்றின் கரையோரமக்கள் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர். அவர்கள் தங்குவதற்காக நான்குமாவட்டங்களில் 400 கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. படகுக்குழாமில் 62 படகுகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஜாதிக்காயின் மருத்துவ குணம்

ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் ...

முருங்கை மரம், முருங்கை மரத்தின் மருத்துவ குணம்

மரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் கொடையான அனைத்து ...

சர்க்கரை நோயால் ஏற்ப்படும் பாதிப்புக்கள்

உங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். உதாரணமாக, கண்பார்வை ...