நாட்டின் நடப்புகணக்கு பற்றாக் குறை மிகவும் ஆபத்தான பரிமாணங்களைதொடும்

 உணவு பாதுகாப்பு சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு, நாட்டின் நடப்புகணக்கு பற்றாக் குறை மிகவும் ஆபத்தான பரிமாணங்களைதொடும் என்று பாஜக தலைவர் ராஜ்நாத்சிங் கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் இது குறித்து அவர் தெரிவித்ததாவது; ஒருநாட்டின் மொத்த ஏற்றுமதியானது, மொத்தபொருட்களின் இறக்குமதி, சேவைகள் மற்றும் பண்ட மாற்றுகளை காட்டிலும் அதிகமாக இருக்கிற போது, நடப்புகணக்கில் இந்த பற்றாக் குறை அதிகரிக்கும்.

பணப் பற்றாக்குறை அதிகரிக்கிற போது, அரசின் மொத்த செலவுத் தொகையானது அது உருவாக்கிற வருமானத்தைவிட அதிகரிக்கும். உணவுப் பாதுகாப்பு மசோதாவை பாரதீய ஜனதா ஆதரித்தாலும், இத்திட்டத்தில் சிலமாற்றங்களை விரும்புகிறது.

காங்கிரஸ் தலைமையிலான ஆளும் ஐ.மு., கூட்டணி அரசின் தவறான கொள்கைகளால் உள்நாட்டு, வெளிநாட்டுமுதலீடுகள் குறைந்துள்ளது. இதை மீண்டும் நிலை நிறுத்துவது ஒரு இமாலாயப் பணி ஆகும்.

இந்தியாவின் பொருளாதார நிலை இதுவரைக்கும் இல்லாத ஒருமோசமான நிலையை எட்டியிருப்பது சுதந்திரத்திற்கு பிறகு இதுவே முதல் முறையாகும். பன்னாட்டு தர வரிசை நிறுவனங்களும் இதையே பட்டியலிடுகின்றன.

இந்திய ரூபாயின்மதிப்பு தொடர்ந்து குறைந்துவருவதால் நாட்டின் ஏற்றுமதி மிகவும் கவலை தருவதாகவே உள்ளது. பல்வேறு துறைகளில் உற்பத்தி பெரிதும்பாதிக்கப்படுகிற போது முரன்பாடாக இறக்குமதிவிலையும் அதிகரிக்கும்.

காங்கிரஸ் தலைமையிலான அரசு உள்நாட்டு, வெளிநாட்டுபாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து முனைகளிலும் தோல்வியடைந்துள்ளது என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் அடுத்த ஆண்டு தேர்த� ...

தமிழகத்தில் அடுத்த ஆண்டு தேர்தலுக்கு பின் … கூட்டணி ஆட்சி :மதுரை கூட்டத்தில் அமித் ஷா உறுதி மதுரை, ஜூன் 9- ''தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் ...

தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப ...

தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப மக்கள் காத்திருக்கிறார்கள்: அமித் ஷா தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப மக்கள் காத்துக் கொண்டு ...

பா.ஜ.,வின் 11 ஆண்டு கால ஆட்சி பொற்க ...

பா.ஜ.,வின் 11 ஆண்டு கால ஆட்சி பொற்காலம்; அமித் ஷா பெருமிதம் பிரதமர் மோடி தலைமையிலான இந்த 11 ஆண்டு கால ...

நல்லாட்சி நடத்துவதில் கவனம்: பி ...

நல்லாட்சி நடத்துவதில் கவனம்: பிரதமர் மோடி உறுதி ''நல்லாட்சி, மாற்றத்தில் தெளிவான கவனம் செலுத்தப்படுகிறது'' என பிரதமர் ...

பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை � ...

பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை மத்திய அரசு மறுவரையறை செய்துள்ளது 'கடந்த 11 ஆண்டுகளில் பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை, தேசிய ...

போர் நிறுத்தத்தில் யாருடைய தலை� ...

போர் நிறுத்தத்தில் யாருடைய தலையீடும் இல்லை; எல்லாம் பிரதமரின் முடிவு ஆபரேஷன் சிந்தூர் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் ...

மருத்துவ செய்திகள்

உப்பு

'உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்பது பழமொழி. அளவான உப்பு சுவையுள்ளது. அளவுக்கு அதிகமான ...

இஞ்சியின் மருத்துவ குணங்கள்

வயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு சட்டியில் போட்டு, ...

வெற்றிலையின் மருத்துவக் குணம்

செரிமானமூட்டியாகவும், கப அகற்றியாகவும் செயல்படுகிறது.