மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட 17 மொழிகளில், நுகர்வோர் தங்களது கோரிக்கைகளை பதிவு செய்யலாம் என மத்திய நுகர்வோர் விவகாரங்கள் உணவு மற்றும் பொது விநியோகத்துறை இணையமைச்சர் திரு பி எல் வர்மா தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனைத் தெரிவித்துள்ள அவர், மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தில், 2022 மற்றும் 2023-ம் ஆண்டுகளில், பதிவு செய்யப்பட்ட வழக்குகளுக்கு 100 சதவீதம் தீர்வு காணப்பட்டிருப்பதாக கூறியுள்ளார்.
மனுதாரர்கள் தங்களது வழக்குகளை இ-டாக்கிள் (e-Daakhil) வாயிலாக ஆன்லைனிலும், பதிவு செய்யலாம் என்று குறிப்பிட்டுள்ள மத்திய அமைச்சர், தேசிய மற்றும் மாநில அளவிலான நுகர்வோர் குறை தீர் ஆணையங்களில் காணொலி வசதி ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அகன்ற இலைகளையும், புனல் போன்ற நீண்ட மலர்களையும், முள் நிறைந்த காயையும் உடைய ... |
உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ... |
அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ... |