இந்திய உணவுபாதுகாப்பு துறை அமைச்சகத்தின் முயற்சிகளை ஜே பி நட்டா பார்வையிட்டார்

ஆதார அடிப்படையிலான தகவல்கள் மூலம் பல்வேறு உணவு பாதுகாப்புப்பிரச்சினைகள் குறித்து நுகர்வோருக்கும் குடிமக்களுக்கும் அதிகாரம் அளிப்பது முக்கியம் என்றும் அப்போதுதான் நமது பணி முழுமையடையும் என்றும் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணைய தலைமையகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் மத்திய சுகாதாரம், குடும்ப நலத்துறை அமைச்சர் திரு ஜெகத் பிரகாஷ் நட்டா தெரிவித்தார்.

குடிமக்களின் நலவாழ்வில் உணவுப் பாதுகாப்பின் முக்கிய பங்கை சுட்டிக் காட்டிய அவர், நுகர்வோர்கள், தொழில்துறை மற்றும் தொடர்புடையவர்களுக்கு ஒழுங்குமுறை விவகாரம் மட்டுமல்லாமல், ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை ஏற்படுத்துவதற்கான நடத்தை மாற்றத்தை எடுத்துரைக்குமாறும்  இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தை வலியுறுத்தினார். ஒழுங்குமுறை விவகாரங்கள் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் முக்கிய அம்சமாக இருக்கும் போது, உணவுப் பாதுகாப்பின்  நோக்கத்தை அதன் பல்வேறு அம்சங்களில் நுகர்வோர்களுக்கு தெரியப்படுத்துதல்  மூலம் மட்டுமே நிறைவேற்ற முடியும் என்று அவர் சுட்டிக்காட்டினார். இந்தியா போன்ற ஒரு பெரிய நாட்டில், பல்வேறு பிராந்தியங்கள், மாறுபட்ட உணவுப்பழக்கவழக்கங்களையும்  விருப்பங்களையும் கொண்டுள்ளன. அவர்களுடைய நடத்தைகளை நாம் விரிவாக புரிந்து கொள்ளவேண்டும். இது பன்முகத்தன்மை உடையோருக்கு நமது கொள்கைகளை உருவாக்க  உதவும் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் தலைமைச் செயல் அதிகாரி திரு. ஜி. கமலா வர்தன ராவ், மத்திய சுகாதார அமைச்சரிடம் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தால் மேற்கொள்ப்பட்ட பல்வேறு முன்முயற்சிகள் குறித்து விளக்கினார். 2016-ம் ஆண்டு இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்திற்கு, தான் வந்த போது இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அனைத்து அம்சங்களிலும் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளதை உணர்ந்தேன் என்று கூறினார். ஒட்டு மொத்த வளர்ச்சி, உணவுப் பாதுகாப்புச் சூழலை வலுப்படுத்துதல், நடத்தை மாற்றத்தை ஊக்குவித்தல், தொடர்புடையவர்களை அறிந்து கொள்ளுதல் ஆகியவற்றுக்காக இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்திற்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நித ...

பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது- அர்ஜுன் ராம் மேக்வால் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழுமையாக ...

நாடாளுமன்றத்தின் கண்ணியத்தையு ...

நாடாளுமன்றத்தின் கண்ணியத்தையும் புனிதத்தையும் பாதுகாப்பதில் பாஜக அக்கறை- கிரண் ரிஜிஜூ மக்களவையில் காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் போராட்ட வீடியோவை ஒன்றிய ...

ரயில்வே திட்டங்களின் பின்னைடை ...

ரயில்வே திட்டங்களின் பின்னைடைவுக்கு காரணம் தமிழக அரசுதான் – அஸ்வின் வைஷ்ணவ் தமிழகத்​தில் நிலம் கையகப்​படுத்​து​வ​தில் நில​வும் தாமதத்​தால் தான் பல ...

எ ஐ க்கு மாணவா்கள் அடிமையாகக் க ...

எ ஐ க்கு மாணவா்கள் அடிமையாகக் கூடாது: பிரதமா் மோடி அறிவுரை கைப்பேசி, செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்கள் ...

செஷல்ஸ் வளர்ச்சிக்கு ரூ.1,575 கோடி ...

செஷல்ஸ் வளர்ச்சிக்கு ரூ.1,575 கோடி அறிவித்தார் பிரதமர் மோடி 'செஷல்ஸ் வளர்ச்சிக்காக 1,575 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்' ...

2024-25-ம் நிதியாண்டில் மீன் உற்பத் ...

2024-25-ம் நிதியாண்டில் மீன் உற்பத்தி 197 லட்சம் டன்னாக அதிகரிப்பு இந்தியா உலகின் இரண்டாவது மிகப் பெரிய மீன் உற்பத்தியாளராகவும், ...

மருத்துவ செய்திகள்

இலவங்கப் பத்திரி மூலம் நாம் பெறும் மருத்துவம்

இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ...

உடற்பயிற்சியின் அவசியம்

கொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க வேண்டுமா? ஜிம்முக்கு ...

ஆடுதீண்டாப்பாளையின் மருத்துவக் குணம்

சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ...