சீனா மீது உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்

 இந்திய எல்லைக்குள் தொடர்ந்துவரும் சீன ஊடுருவல்களை தடுக்க இந்தியா கடும்நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் பல்வேறுகட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

மாநிலங்களவையில் இதுதொடர்பாக பாஜக உறுப்பினர் ஜகத் பிரகாஷ் நத்தா பேசும் போது, அருணாசல பிரதேசத்தில் சக்லகாம் பகுதியில் சீனராணுவத்தினர் ஊடுருவியுள்ளனர். இந்திய எல்லைப்பகுதிக்கும் 20 கிலோமீட்டர் வரை இவர்கள் ஊடுருவியிருக்கின்றனர்.

ஆகஸ்ட் மாதம் 11ஆம் தேதி நடைபெற்ற மற்றொருசம்பவத்தில், 25 சீனராணுவத்தினர் இந்தியபகுதிக்குள் நுழைந்துள்ளனர். இந்தசம்பவம் ஆகஸ்ட் 13ஆம் தேதிதான் நமதுகவனத்துக்கு வந்துள்ளது. ஆகஸ்ட் 15-ஆம் தேதி அப்பகுதியில் அதிக அளவில் இந்திய ராணுவவீரர்கள் குவிக்கப்பட்டதை தொடர்ந்து, சீனவீரர்கள் வெளியேறினர்.

இந்நிலையில், ஆகஸ்ட் 19-இல் அதேபகுதியில் சீனர்கள் மீண்டும் ஊடுருவி கூடாரமிட்டுள்ளனர். கடந்த 3 ஆண்டுகளில் சீனராணுவத்தினர் 600முறை இந்திய எல்லைக்குள் நுழைந்துள்ளனர். இதில் கடந்த 8 மாதங்களில்மட்டும் 150 முறை ஊடுருவியுள்ளனர். இதுமிகவும் தீவிரமான பிரச்னையாகி வருகிறது. சீனாமீது அரசு உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்.

திரும்ப திரும்ப நடைபெற்றுவரும் ஊடுருவல்களைத் தடுக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்து வருகிறது என்று அவர் கேள்வி எழுப்பினார்.

இந்த விஷயம் தொடர்பாக அரசு அவசர கால நடவடிக்கை எடுக்கவேண்டும் என பாஜக உறுப்பினர் ரவிசங்கர்பிரசாத் கூறினார்.

இந்தவிவகாரத்தில் இந்திய நிலைப்பாடு, கொள்கை என்ன என்பதை வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் விளக்கவேண்டுமென சமாஜ்வாதி கட்சி உறுப்பினர் நரேஷ் அகர்வால் கூறினார்.

சீன ஊடுருவல் விவகாரத்தை அவையில் விவாதிக்கவேண்டும் என உறுப்பினர்கள் கோரிய போது, அதுதொடர்பாக நோட்டீஸ் அளிக்குமாறு அவையின் துணைத்தலைவர் பிஜே.குரியன் தெரிவித்தார்.

சீனா மீது அரசு உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என பா.ஜ.க உறுப்பினர் ஜகத்பிரகாஷ் நத்தா தெரிவித்த கருத்துக்கு பல்வேறு கட்சிகளைச்சேர்ந்த உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ர� ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ரயில் நிலையங்களை மோடி மே 22-ல் திறந்து வைக்கிறார் 'அம்ரித் பாரத்' திட்டத்தில் சீரமைக்கப்பட்ட பரங்கிமலை, ஸ்ரீரங்கம் ...

உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்ப� ...

உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்படுத்த வேண்டும் தமிழகத்தில் உள்ள உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்படுத்த வேண்டும் ...

மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்ப� ...

மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்பு முறை வாக்குறுதி என்ன ஆனது: தி.மு.க.,வுக்கு நயினார் நகேந்திரன் கேள்வி மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்பு முறை வாக்குறுதி என்ன ...

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் உறுத� ...

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் உறுதி ஹோண்டூராசுக்கு ஜெய்சங்கர் பாராட்டு அனைத்து வடிவங்களிலும் பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் ஹோண்டூராஸ் உறுதியுடன் இருப்பதை, ...

மாலத்தீவு படகு சேவையை மேம்படுத� ...

மாலத்தீவு படகு சேவையை மேம்படுத்த இந்தியா உதவி அதிவிரைவு படகு சவாரியை மேம்படுத்தவும், கடல்சார் இணைப்பை விரிவுபடுத்தவும், ...

மெய்சிலிர்க்க வைத்த இந்திய ராண� ...

மெய்சிலிர்க்க வைத்த இந்திய ராணுவம் பாகிஸ்தானின் ஏவுகணைத் தாக்குதலில் இருந்து பொற்கோவிலை பாதுகாத்தது எப்படி ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவுநோய் உடையவர்களுக்குத் தேவைப்படும் உடற்பயிற்சிகள்

நீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் உடையவர்கள் தொடர்ந்து ...

முசுமுசுக்கையின் மருத்துவக் குணம்

வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ...

சிறுநீரகக் கோளாறுகள்

உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ...