பா.ஜ.க விவசாயிகள் பேரணியை கலவரத்தை காரணம் காட்டி ரத்து செய்த சமாஜ்வாதி அரசு

 உபி மாநிலம், ஆக்ரா மாவட்டத்தில் இன்று நடைபெறுவதாக இருந்த பா.ஜ.க விவசாயிகள் அணிபேரணியை மதக்கலவரத்தை காரணம் காட்டி தந்த அனுமதியை ரத்து செய்து செப்டம்பர் 29ம் தேதிக்கு ஆளும் சமாஜ்வாதி அரசு தள்ளிவைத்து கருத்து சுதந்திரத்துக்கு இடையூரை ஏற்ப்படுத்தியுள்ளது

அகோலா கிராமத்தில் பா.ஜ.க விவசாயிகள் அணிபேரணி ஞாயிற்றுக்கிழமை(இன்று) நடைபெறவிருந்தது. இதனால், அதற்கான ஏற்பாடுகளை அந்தக்கட்சியினர் தீவிரமாக செய்துவந்தனர். இந்த பேரணியில் பா.ஜ.க மூத்த தலைவர் எல்கே.அத்வானி, தேசியசெயலர் வருண்காந்தி உள்ளிட்டோர் பங்கேற்க இருந்தனர். . இந்நிலையில், பேரணிக்கு வழங்கப்பட்ட அனுமதி திடீரென ரத்துசெய்யப்பட்டது. அதற்கு பதிலாக செப்டம்பர் 29ம் தேதி நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.. உத்தரபிரதேச மாநிலம் முசாபர் நகர் மாவட்டத்தில் ஏற்பட்ட கலவரம் மதகலவரமாக உருவெடுத்து முசாபர் நகர் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் பரவியது.

இதனால் சட்டம்-ஒழுங்கைக் கருத்தில்கொண்டு பேரணிக்கு வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளதாக அந்தமாநில அதிகாரிகள் தெரிவித்தனர் அகோலா கிராமத்தில் விவசாயிகள் அணிபேரணி நடத்த 8 வாரங்களுக்கு முன்னதாகவே அனுமதி பெறப்பட்டது. பேரணியில் மாநிலத்தின் பல்வேறுபகுதிகளில் இருந்து சுமார் 3 லட்சம் விவசாயிகள் பங்கேற்கவிருந்தனர். இந்நிலையில், பேரணிக்கு வழங்கப்பட்ட அனுமதியை மாவட்டநிர்வாகம் திடீரென ரத்துசெய்துள்ளது அந்த கட்சியினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம், கருத்து சுதந்திரத்தை அந்தமாநில அரசு நசுக்க முயற்சிக்கிறது என பா.ஜ.க கட்சி வட்டாரம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

கீரையில் இருக்கும் சத்துக்கள் வீணாகாமல் அப்படியே கிடைக்க

கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை ...

எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம்

எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த ...

உறக்கத்தின் முக்கியத்துவம்

மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ...