துவாரகை கதையல்ல நிஜம்

துவாரகை  ராமரால் கட்டப்பட்ட சேதுபாலம் எப்படி 17,50,000 ஆண்டுகளாக இராமேசுவரம் அருகில் உள்ளதோ அதேபோன்று மகாபாரதத்தில் ஸ்ரீகிருஷ்ண பகவான் வாழ்ந்த அரசாண்ட துவாரகா புரியும் 5200 ஆண்டுகளாக கடலுக்குள் மூழ்கிக்கிடக்கிறது. கலியுகம் தொடங்கி இப்போது 5100 ஆண்டுகளாகின்றன என்பதை கவனிக்க வேண்டும்.

இந்திய தேசியகடல் ஆராய்ச்சிக் கழகம் 1983 முதல் 1990வரை 18 ஆராய்சிகளை மேற்கொண்டது. ஆராய்ச்சிக் குழுவின் தலைவரான எஸ்ஆர்.ராவ் தனது ஆராய்ச்சி முடிவுகளை ஒருபுத்தகமாக எழுதிவெளியிட்டுள்ளார். அந்த புத்தகத்தின் பெயர் The Lost City of Dwarka.

புராண அல்லது சரித்திர முக்கியத்துவம்வாய்ந்த கண்டு பிடிப்பு அகழ்வாராய்ச்சியின் மூலம் வெளிப்பட்டுள்ளது. இது மகா பாரதக்கதை நிஜத்தில்நிகழ்ந்த நிகழ்வு என்பதை துவாரகை இருந்ததையும் உறுதி படுத்துகிறது. கி.மு.1500 ஆம் ஆண்டுவாக்கில் தற்போதையதுவாரகை மற்றும் அதன்அருகில் உள்ள பெட் துவாரகை ஆகியபகுதிகளில் கிருஷ்ணன் வாழ்ந்ததற்கான ஆதாரம் உள்ளது.

கடற் கரையிலிருந்து சுமார் அரைமைல் தூரம் நன்கு வடிவமைக்கப்பட்ட ஒருநகரம் இருந்திருக்கிறது. ஒவ்வொன்றும் 18மீட்டர் அகலமுள்ள இரண்டுபிரதான சாலைகள், ஒன்றுக்கொன்ரு தொடர்புடைய ஆறுகுடியிருப்புகள், மூன்று பிரம்மாண்டமான கட்டடத் தொகுப்புகளை கொண்டு துவாரகை விளங்கியிருக்கிறது.

அந்நகரின் சுவர் கல் 3600 ஆண்டுகளுக்கு முந்தைய தொன்மை வாய்ந்ததாக இருக்கின்றன. கடலில்மூழ்கிய இந்த நகரம், வடக்குநோக்கி விரிவடைந்திருக்கிறது.இப்படி விரிவாக்கமானபகுதி 'பெட்துவாரகை' என்றழைக்கப்படுகிறது. இந்த தீவுப்பகுதி கிருஷ்ணர் மற்றும் அவர் மனைவியரான சத்ய பாமா மற்றும் ஜாம்ப வதிக்கான பொழுது போக்குதலமாகவும் அமைந்திருக்கிறது. மேலும்  தென்னிந்தியாவின் ஒகமதி என்ற இடம் வரையிலும், கிழக்கு இந்தியாவில் பிந்தாராபகுதியில் 'பிந்த்ரா-தாரகா' என்ற இடத்தில் துர்வாசரின் குடில் இருந்ததாக மகாபாரதத்தில் வர்ணிக்கப் பட்டுள்ளது.

துவாரகையின் நிர்மாணம் பிரமிப்பூட்டக் கூடியது.மேற்கு கடலிலிருந்து நிலம்பெறப்பட்டு நகரம் திட்டமிட்டு கட்டப்பட்டுள்ளது. இது கோமதி நதிக் கரையில் அமைந்துள்ளது. த்வாரமதி, குசஸ்தலை என துவாரகை அழைக்கப்பட்டது. எல்லா அடிப்படைவசதிகளும் நிறைந்த ஆறுபகுதிகள், குடியிருப்புகள், வியாபாரஸ்தலங்கள், அகன்ற சாலைகள், பொதுஇடங்கள், 'சுதர்மாசபா' என்ற பொதுக்கூட்ட அரங்கம் மற்றும் அழகான துறைமுகம் ஆகியவற்றைக் கொண்டு விளங்கியது துவாரகை.

மகா பாரதயுத்தம் முடிந்து 36 ஆண்டுகள்கழித்து துவாரகையை கடல்கொண்டது.இதை முன்கூட்டியே அறிந்த கிருஷ்ணர், யாதவர்களை ப்ரபாஸ் என்ற உயரமான மலைப் பிரதேசத்திற்கு (தற்போதைய சோம்நாத்) அழைத்துச்சென்று காத்தார்.
இந்த துவாரகையை நீர்மூழ்கிக் கப்பல் மூலமாக எல்லோரும் சென்று பார்ப்பதற்கு இந்திய கடல் அகழ்வாராய்ச்சி கழகம் ஏற்பாடுகள் செய்துவருகிறது.

 

Tags; துவாரகா. துவாரகை,

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

‘11 ஆண்டு கால ஆட்சியில் வியத்தகு ...

‘11 ஆண்டு கால ஆட்சியில் வியத்தகு மாற்றங்கள்’ – பிரதமர் மோடி பெருமிதம் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் கீழ் கடந்த 11 ...

இந்திய மக்கள் ஒன்றிணைந்து இருப� ...

இந்திய மக்கள் ஒன்றிணைந்து இருப்பதை பார்ப்பது மகிழ்ச்சி நரேந்திர மோடி பிரதமராக மூன்றாவது முறை பதவியேற்று, ஓராண்டு ...

சமூகநீதி எப்படி சாத்தியமாகும்

சமூகநீதி எப்படி சாத்தியமாகும் திருமண ஆசை காட்டி பெண்களையும் குழந்தைகளையும் பாலியல் வன்கொடுமை ...

குற்றவாளிகளை கைது செய்வதில் தி. ...

குற்றவாளிகளை கைது செய்வதில் தி.மு.க., அரசு நாடகமாடுகிறதா: நயினார் நகேந்திரன் கேள்வி தமிழகத்தின் கொங்கு பகுதியில் பெருகி வரும் கொலை, கொள்ளை ...

பாதுகாப்புத்துறையில் தன்னிறைவ ...

பாதுகாப்புத்துறையில் தன்னிறைவு பெறுவதில் கவனம்; பிரதமர் மோடி பெருமிதம் ''கடந்த 11 ஆண்டுகளில் பாதுகாப்பு துறையில் பல்வேறு மாற்றங்கள் ...

நக்சல் ஒழிப்புக்கு கிடைத்த வெற� ...

நக்சல் ஒழிப்புக்கு கிடைத்த வெற்றி; இந்தியாவில் குறைந்தது நக்சல் வன்முறை இல்லாத இந்தியாவை உருவாக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைக்கு மத்தியில், ...

மருத்துவ செய்திகள்

அமுக்கிரா கிழங்கு

இதன் இலையை உண்டால், உடல் வெப்பம் நீங்கும், காய் உண்டால் சிறு நீர் ...

நல்லெண்ணெய் நல்ல மருந்தாகும்

எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ...

அறுகம்புல்லின் மருத்துவ குணம்

அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல்  நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ...