4 மாநிலங்களிலும் பா.ஜ.க.,வே ஆட்சிக்கு வரும்; நிபுணர்கள் கணிப்பு

 ம.பி., டெல்லி, ராஜஸ்தான், சத்தீஷ்கர், மிசோரம் உளிட்ட மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் மோடி அலையால் 4 மாநிலங்களில் பா.ஜ.க ஆட்சிக்குவரும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.

பாஜக சார்பில் பிரதமர்வேட்பாளராக குஜராத் முதல்வர் நரேந்திரமோடி அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் பேசும் பொதுக்கூட்டங்களில் மோடி அலை வீசுவதாக நிபுணர்கள் கணித்துள்ளனர். 5 மாநில தேர்தல் என்பது அடுத்தாண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக அமையும் என கருதப்படுகிறது. இதையடுத்து இந்த 5 மாநிலங்களிலும் பா.ஜ.க.,வும், காங்கிரஸூம் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றன. தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் நடந்த கருத்துக்கணிப்பில் 4 மாநிலங்களில் பாஜக ஆட்சியை பிடிக்கும் என்று தெரியவந்துள்ளது.

230 தொகுதிகளை கொண்ட ம.பி.,யில் தற்போது பா.ஜ.க ஆட்சி நடந்து வருகிறது. இந்தமாநிலத்தில் ஆட்சியை தக்கவைக்க பா.ஜ.க.,வும், ஆட்சியை பிடிக்க காங்கிரஸ்சும் தீவிரமுயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்தத்தேர்தலில் 150 இடங்களை பிடித்து பாஜக ஆட்சி அமைக்கும் என்று கருத்துகணிப்புகள் தெரிவிக்கின்றன.

சத்தீஷ்கரில் தற்போது பாஜக ஆட்சிநடக்கிறது. இந்ததேர்தலிலும் பாஜக வெற்றிபெறும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்தமாநிலத்தில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் பாஜக 46 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றி ஆட்சியை பிடிக்கும் என்று கருத்துகணிப்பு தெரிவிக்கிறது. ராஜஸ்தானில் மொத்தமுள்ள 200 தொகுதிகளில் பாஜக 105 இடங்களை கைப்பற்றும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் காங்கிரஸ் கட்சி 20 தொகுதிகளை இழந்து 76 தொகுதிகளை மட்டும் கைப்பற்றும் என்று கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.
டெல்லியில் காங்கிரஸ்கட்சி ஆட்சிநடக்கிறது. இங்கு முதல்வராக ஷீலாதீட்ஷித் உள்ளார். ஆனால் இந்தமுறை டெல்லியில் தாமரை மலரும், அதாவது பா.ஜ.க ஆட்சிக்குவரும் என்று கருதப்பசுகிறது. இங்கு பாஜக 36 இடங்களையும். காங்கிரஸ் 22 இடங்களையும் கைப்பற்றும் என கருத்துகணிப்பு தெரிவிக்கிறது. ஆக மொத்தத்தில் 4 மாநிலங்களில் பா.ஜ.க ஆட்சிக்குவரும் வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பாகிஸ்தான் ஏவியது ஷாஹீன் ஏவுகண� ...

பாகிஸ்தான் ஏவியது ஷாஹீன் ஏவுகணை; இந்திய ராணுவம் ஆய்வில் அம்பலம் அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறன் கொண்ட ஷாஹீன் ...

இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்� ...

இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தம்; இன்று பார்லி., குழுவிடம் விளக்கம் அளிக்கிறார் விக்ரம் மிஸ்ரி இந்தியா-பாகிஸ்தான் மோதல், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மற்றும் போர் ...

உலக நலனுக்காக இந்தியா சக்தி வாய ...

உலக நலனுக்காக இந்தியா சக்தி வாய்ந்த நாடாக இருக்க வேண்டும் – மோகன் பகவத் ''உலகின் நலனுக்காக இந்தியா சக்திவாய்ந்த நாடாக இருக்க வேண்டும்,'' ...

பாகிஸ்தானில் 100 கி . மீ தூரம் நுழை ...

பாகிஸ்தானில் 100 கி . மீ தூரம் நுழைந்து பதிலடி – அமித்ஷா பெருமிதம் 'சுதந்திரத்திற்குப் பிறகு நமது ராணுவம் பாகிஸ்தானுக்குள் 100 கி.மீ. ...

பாகிஸ்தானுக்கு காரியம் செய்தவ� ...

பாகிஸ்தானுக்கு காரியம் செய்தவர் பிரதமர் மோடி – நயினார் நாகேந்திரன் ''பஹல்காம் தாக்குதலுக்காக பாகிஸ்தானுக்கு காரியம் செய்தவர் பிரதமர் மோடி,'' ...

மத்திய அரசு எடுக்கும் ஒவ்வொரு ந ...

மத்திய அரசு எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையையும் காப்பியடிக்கும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆப்ரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையின் மூலம் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் ...

மருத்துவ செய்திகள்

ஆடாதொடையின் மருத்துவ குணம்

ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ...

முருங்கை வேர் | முருங்கை வேரின் மருத்துவ குணம்

முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ...

சிசுவின் வளர்ச்சியில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என்று அறியமுடியுமா ?

சிசுவின் வள்ர்ச்சி குறைபாட்டை இருவகையாக பிரிக்கலாம் - (1) உடல் குறைபாடு ( ...