பிரதமர் மன்மோகன்சிங் பொதுமன்னிப்பு கேட்கவேண்டும்

 பா.ஜ.க பிரதமர்வேட்பாளர் நரேந்திரமோடி மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்திய பிரதமர் மன்மோகன்சிங் பொதுமன்னிப்பு கேட்கவேண்டும் என்று பாஜக.,வின் ராஜஸ்தான் மாநிலபிரிவு வலியுறுத்தியுள்ளது.

ஜெய்ப்பூர் ராம்லீலா மைதானத்தில் வியாழக் கிழமை நடைபெற்ற பேரணியில் பிரதமர் மன்மோகன்சிங் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது, ஒருமாதத்திற்கு முன்பு ஜோத்பூர் பேரணியில் பேசிய பா.ஜ.க முதல்வர், சிறுபான்மையினரின் உரிமைகளை மீறியதாக ராஜஸ்தான் அரசுமீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறியதாக குறிப்பிட்டார். மேலும், சொந்தமாநில அரசின் நடவடிக்கைகளை சுய ஆய்வு நடத்த முன் வரவில்லை என்றும் நரேந்திரமோடியின் பெயரை குறிப்பிடாமல், பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்தார். இதுகுறித்து ராஜஸ்தான் மாநில பாஜக துணைத் தலைவர் ஓங்கார்சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பிரதமரின் குற்றச்சாட்டுகள் தவறான தகவலின் பேரில் அமைந்துள்ளன. பிரதமர் குறிப்பிடும் பேரணி, எப்போது எங்கு எந்தமுதல்வரின் முன்னிலையில் நடைபெற்றது என்பதை அவர் நிரூபிக்கவேண்டும்.

தவறான தகவலின்பேரில் பொய்யான குற்றச் சாட்டுகளை கூறிய பிரதமர், பா.ஜ.க.,விடமும் நாட்டு மக்களிடமும் அதற்காக மன்னிப்புகேட்க வேண்டும்.

உண்மைக்குப் புறம்பான தகவலின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட உரையை பொதுக்கூட்டத்தில் பிரதமர் வாசித்தது துரதிருஷ்டமானது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஓமவல்லியின் மருத்துவக் குணம்

வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது.

குழந்தை வளர்ப்பு முறை

குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ...

பிரண்டையின் மருத்துவக் குணம்

குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது.