இன்று இந்தியா வருகிறார் -அமெரிக்க துணை அதிபர்

4 நாள் பயணமாக அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் இன்று(ஏப்.,21) டில்லி வருகிறார். அப்போது இரு தரப்பு உறவுகள் மற்றும் வர்த்தக பேச்சுவார்த்தை தொடர்பாக ஆலோசனை செய்யப்பட உள்ளது.

அமெரிக்க துணை அதிபராக பதவியேற்ற பிறகு ஜேடி வான்ஸ் இன்று டில்லி வருகிறார். அவருடன் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அவரது மனைவி உஷா சிலிகுரி மற்றும் அவரது குழந்தைகள் உடன் வருகின்றனர். இதற்கு முன்னர், ஒபாமா அதிபராக இருந்த காலத்தில் துணை அதிபராக இருந்த ஜோ பைடன் 2013ம் ஆண்டு டில்லி வந்து இருந்தார். இதற்கு பிறகு, அந்நாட்டின் துணை அதிபர் தற்போது தான் டில்லி வர உள்ளார்.

இதனைத் தொடர்ந்து, இன்று மாலை , பிரதமர் மோடியை அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் ஜேடி வான்ஸ் சந்திக்க உள்ளார். அப்போது, இந்தியா அமெரிக்கா இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தை மற்றும் இரு தரப்பு பொருளாதார உறவு மற்றும் பிராந்திய உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. இந்த சந்திப்பின் போது, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் முக்கிய அதிகாரிகள் உடன் இருக்கின்றனர். வான்ஸ் உடன் 5 பேர் கொண்ட உயர் அதிகாரிகள் இருக்கின்றனர்.

ஜேடி வான்ஸ் பயணம் தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்த பயணத்தின் போது இரு தரப்பு உறவில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியை ஆய்வு செய்யவும், பிப்., 13 ல் பிரதமர் மோடி அமெரிக்க பயணத்தின் போது வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கையை அமல்படுத்துவதில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்தும் ஆய்வு செய்வதற்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்தும். பரஸ்பர நலன் சார்ந்த பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்தும் விவாதிக்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

டில்லி பயணத்தை முடித்துக் கொண்டு நாளையே ஜேடி வான்ஸ் ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூர் செல்கிறார். 24ம் தேதி வரை அங்கு தங்க உள்ளார்.

22ம் தேதி, அமீர் மாளிகைக்கு செல்லும் ஜேடி வான்சுக்கு, பாரம்பரிய ராஜஸ்தானிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. 2.5 மணி நேரம் அங்கு தங்கியிருக்கும், அவர் கலாசார நிகழ்ச்சிகளை பார்க்க உள்ளார்.

தொடர்ந்து ராஜஸ்தான் சர்வதேச மையத்தில் நடக்கும் அமெரிக்கா இந்தியா தொழில் மாநாட்டில் பங்கேற்று பேசுகிறார். இதில், இந்தியா மற்றும் அமெரிக்கா அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். அன்றைய தினம் ராஜஸ்தான் கவர்னர் ஹரிபாகு பகாடேவையும், முதல்வர் பஜன்லால் சர்மாவையும் ஜேடி வான்ஸ் சந்திக்கிறார்.

23ம் தேதி ஆக்ரா சென்று தாஜ்மஹாலை பார்வையிடுகிறார். 3 மணி நேரம் அங்கு தஙங்கியிருந்துவிட்டு மீண்டும் ராஜஸ்தான் வரும் அவர், 24ம் தேதி ஜெய்ப்பூரில் இருந்து அமெரிக்கா கிளம்பிச் செல்கிறார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

மருத்துவ செய்திகள்

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம ?

இரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களை பாதித்து ...

புளிப்பு

உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ...

சங்கிலையின் மருத்துவக் குணம்

சங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை வெந்நீரில் 20 ...