நீங்கள் ஆற்றிய உரை, உன்னதமான சொற்பொழிவாகும்

 பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடியை, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சந்தித்த போது, மோடியின் பேச்சையும், ப.சிதம்பரத்தை அவர் விமர்சனம்செய்த விதத்தையும் வைகோ பாராட்டினார். நரேந்திரமோடி கூட்டத்திற்கு நேற்று வைகோ போகவி்ல்லை. ஆனால் இரவில் மோடி தங்கியிருந்த ஹோட்டலுக்கு போய் மோடியை சந்தித்துப்பேசினார்.

இது குறித்து மதிமுக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிய வருவதாவது; இந்தியில் நீங்கள் உரையாற்றும் நிமிடங்களில் அம்மொழியை புரிந்து கொள்ளாதவர்களைக்கூட நீங்கள் எழுப்பும் உணர்ச்சிமிக்க குரல், அதன் தொனி, உங்களுடைய கரங்களும் முகமும் வெளிப்படுத்தும்பாவனை மக்களை வசீகரித்தது.

நீங்கள் ஆற்றிய உரை, உன்னதமான சொற்பொழிவாகும்" என்று வைகோ கூறியதற்கு மோடி, "மிகச்சிறந்த பேச்சாளரான நீங்களே பாராட்டுவது மகிழ்ச்சி தருகிறது" என்று கூறியுள்ளார்

"உங்கள்பேச்சில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மாநில உரிமைகளை நசுக்குவதை கண்டித்ததும், கூட்டாட்சி தத்துவத்தின் அவசியத்தை வலியுறுத்தியும் பேசியது நாட்டுக்கு மிக அவசியமான கருத்தாகும்" என்று வைகோ கூறியபோது, "தமிழ்நாட்டுக்கு இந்தக்கருத்து மிகவும் அவசியமாயிற்றே" என்று மோடி கூறியுள்ளார்.

"தமிழக மீனவர்கள் சிங்கள கடற்படையால் கொல்லப் படுவதையும், அதைத்தடுக்காத மத்திய அரசின் கையாலாகாத தன்மையைப் பற்றிச்சாடியதும், நதிகள் இணைப்பின் அவசியத்தை வலியுறுத்தியதும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் பங்கேற்றகட்சிகள் ஊழல்செய்து அதனால் பலன் பெற்றதை பற்றியும் நீங்கள் கூறியதோடு, தன்னை மேதையாகக் கருதிக்கொள்ளும் மறுவாக்கு எண்ணிக்கை அமைச்சர் ப.சிதம்பரத்தை கிண்டல் செய்த முறையும் பேச்சின் சிறப்பான முத்திரைகள்'' என வைகோ தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

இலந்தையின் மருத்துவ குணம்

ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ...

மகிழம் பூவின் மருத்துவக் குணம்

மகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் கிருமியும் இல்லாமல் ...

கீரையில் இருக்கும் சத்துக்கள் வீணாகாமல் அப்படியே கிடைக்க

கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை ...