“உலகின் திறமைமிக்க மனித வளத்தின் தலைநகரமாக இந்தியா திகழ்கிறது” வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான இந்த கருத்தரங்கம் பலவகைகளில் சிறப்பு பெற்றுள்ளது. சிலமாதங்களுக்கு முன்புதான் நாம் நமது 75-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடினோம். இதையடுத்து அமிர்தகாலம் தொடங்கி இருக்கிறது. இந்தியாவின் உலகப்பார்வை தற்போது வலுப்பெற்றுள்ளது.
வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் அனைவருமே நமதுநாட்டுக்கான தூதர்கள்தான். நான் அவர்களை அவ்வாறு அழைக்கவே விரும்புகிறேன். ஒருதூதராக உங்கள் பங்களிப்பு பலவகைகளைக் கொண்டுள்ளது. இந்தியாவில் தயாரிப்போம் எனும் அரசின் முன்னெடுப்புக்கான தூதர் நீங்கள், யோகா, கைவினை பொருட்கள், சிறுதானியங்கள் ஆகியவற்றுக்கும் நீங்கள் தான் தூதர்.
நம்பிக்கையுடனும் ஆர்வத்துடனும் இன்று இந்தியா பார்க்கப்படுகிறது. உலகரங்கில் இந்தியாவின் குரல் ஓங்கிஒலிக்கிறது. இந்த ஆண்டு ஜி-20 அமைப்புக்கு இந்தியா தலைமை தாங்குகிறது. வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான கருத்தரங்கத்தை ஒருதூதரக நிகழ்வாக ஆக்க வேண்டும் என்பது மட்டும் அரசின் விருப்பவில்லை, மக்கள்பங்கேற்கும் நிகழ்வாக இதை மாற்ற விரும்புகிறோம். இந்தியா ஓர்அறிவு மையமாக மட்டும் திகழவில்லை; திறமைமிக்க மனித வளத்திற்கான தலைநகராகவும் திகழ்கிறது.
நமது இந்திய இளைஞர்களின் திறன்கள், மதிப்பீடுகள், நேர்மை, கடமை உணர்வு ஆகியவை உலகின் கவனத்தை ஈர்த்துவருகிறது. இந்தியாவின் இந்தத்திறமை மிக்க மனிதவளம் உலகின் வளர்ச்சி இயந்திரமாக மாறும்”
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான 17-வது ஆண்டு கருத்தரங்கம் மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் நகரில் நடைபெற்று வருகிறது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்தக் கருத்தரங்கு நேற்று தொடங்கியது. எனினும், பிரதமர் நரேந்திர மோடி அதனை இன்று முறைப்படி தொடங்கிவைத்து. நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியது.
நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ... |
நீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு குறைந்து விடும். ... |