அடுத்த முறையும் மோடி பிரதமராக வரவேண்டும் என்று கூட்டணி கட்சி தலைவர்கள் வாழ்த்து

 நரேந்திர மோடிக்கு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர். அடுத்த முறையும் அவர் பிரதமராக வரவேண்டும் என்று வாழ்த்தினர்.

சிரோமணி அகாலி தளம் தலைவர் பிரகாஷ் சிங் பாதல் கூறுகையில், “நாட்டின் நாட்குறிப்பில் மோடி பிரதமராக தேர்ந்தெடுக்கப்படும் இந்நாளை பொன்னெழுத்துக்களால் பொறிக்கவேண்டும். சிரோமணி அகாலிதளம், பாரதிய ஜனதாவின் நம்பிக்கைக்குரிய கூட்டணி கட்சி . அடுத்த முறையும் பிரதமராக மோடியை தேர்ந்தெடுப்பதற்கு எங்களின் ஆதரவு என்றும் உண்டு என்று சிரோமணி அகாலி தளம் தலைவர் பிரகாஷ் சிங் பாதல் கூறினார்

“பல வருடங்களாகக் கண்டகனவு இன்று நனவாகி இருக்கிறது. பாஜகவின் கூட்டணியில் 25 ஆண்டுகளாக உள்ளோம் . பெரும்பாலான ஆண்டுகள் போராட்ட அரசியலில் மட்டுமே ஈடுபட்டுவந்தோம். எனது தந்தை பால்தாக்கரே இப்போது உயிருடன் இருந்திருந்தால் மிகவும் மகிழ்ச்சியடைந்திருப்பார். நம் நாட்டிற்கு துவங்கிவிட்ட நல்ல காலத்தின் முதல் நாள் இது. மோடி தொடர்ந்து பிரதமராக இருக்க எங்கள் ஆதரவு என்றும் தொடரும் என்று ” சிவசேனைக் கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே கூறினார்.

லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் பாஸ்வான் கூறுகையில், “மோடியை பிரதமராக முன்னிறுத்தியதால், தே.ஜ.,கூட்டணிக்கு வெற்றி கிடைத்துள்ளது. இது ஒன்றும் சாதாரணவெற்றி அல்ல. முட்கள் நிறைந்த கிரீடம் இது. மக்கள் மலர் மாலைகளாக அளித்தாலும் அதை முட்கள் நிறைந்த கிரீடமாக ஏற்று மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டும். நாட்டின் 84 தனித்தொகுதிகளில் 62-ல் பாஜகவிற்கு வெற்றி கிடைத்துள்ளது. தலித்துகள் பெயரில் அரசியல் நடத்தும் தலைவர்களின் முகத்திரை கிழிந்துவிட்டது. அடுத்து வரும் காலங்களிலும் மோடியே பிரதமராக இருக்கவேண்டும் என்று லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் பாஸ்வான் கூறினார்

நாகா மக்கள் முன்னணியின் தலைவர் நெய்பியூ ரியோ பேசுகையில், ‘நாடு இனி வடகிழக்குப் பகுதி மக்களின் பிரச்சினைகளை கவனிக்கும் என நம்புகிறேன்” என்று  நாகா மக்கள் முன்னணியின் தலைவர் நெய்பியூ ரியோ கூறினார்

‘இந்திய நாட்டின் சரித்திரத்தில் இப்படி ஒரு வெற்றி யாருக்குமே கிடைத்ததில்லை. காங்கிரஸ் கட்சி குப்பைத்தொட்டியில் துடைத்து எறியப்பட்டுவிட்டது. இந்திராகாந்தி அம்மையார் தோற்றபோதுகூட குறிப்பாக தென் இந்தியாவில் 157 இடங்கள் கிடைத்தன. ஆனால், இப்போது அக்கட்சிக்கு 2 இலக்க எண்ணிக்கையிலான தொகுதிகள் மட்டுமே கிடைத்துள்ளன என்று மதிமுக தலைவர் வைகோ தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முட்டைகளின் மருத்துவக் குணம்

கோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் வேகவைத்தால் கெட்டியாய்விடும்; ...

அரத்தையின் மருத்துவக் குணம்

இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டு வகையும் ...

ஓமம் ஒப்பற்ற ஒரு மருந்தாகும்

குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், ...