மோகன் பகவத் நலமுடன் உள்ளார்

 மோகன் பகவத்தின் பாதுகாப்புபணியில் சென்ற கார் தான் விபத்துக்குள்ளானது என்றும், அவருக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் ஆர்.எஸ்.எஸ். விளக்கம் தந்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத் நேற்று மதியம் டெல்லி பரேட் சாலையில் தனது காரில் சென்று கொண்டிருந்த போது, அவரது பாதுகாப்பு பணிக்காக உடன்சென்ற கார் மீது மற்றொரு கார் மோதி விபத்துள்ளானது.

இதில், மோகன் பகவத்துக்கு எந்தகாயமும் ஏற்படவில்லை என்றும், அவர் நலமுடன் இருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன்பகவத் நலமுடன் இருப்பதாக அந்த அமைப்பின் செய்தித்தொடர்பாளர் ராம் மாதவும் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் மோகன் பகவத்தின் பாதுகாப்பில் சென்று கொண்டிருந்த கார் மீதுதான் ஹரியாணா அரசு பதிவு எண் கொண்டகார் மோதியது.

மோகன் பகவத் பயணம்செய்த கார் மீது மோதவில்லை. இதனால், மோகன் பகவத் நலமுடன் உள்ளார். அவரது பயணத்திட்டத்தில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஓமம் ஒப்பற்ற ஒரு மருந்தாகும்

குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், ...

இரத்த அழுத்த நோய்

கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் ...

வேப்பம் பூவின் மருத்துவக் குணம்

வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் ...