வாரணாசியில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதி

 நரேந்திரமோடி வெற்றிபெற்ற வாரணாசியில் தீவிரவாதிகள் தாக்குதலுக்கு சதி திட்டமிட்டு இருப்பதாக வந்த தகவலை தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திரமோடி போட்டியிட்டு வெற்றிபெற்ற தொகுதி வாரணாசி. இது ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த நகரமாகும். இங்குள்ள காசிவிஸ்வநாதர் ஆலயம் பிரசித்திபெற்றது. நாடுமுழுவதும் உள்ள இந்துக்கள் ஒருமுறையாவது இங்கு சென்று வழிபடவேண்டும் என்பது ஐதீகம்.

இந்நிலையில் உளவுத்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி தீவிரவாதிகள் வாரணாசியை தாக்க சதி திட்டம் தீட்டி இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. வாரணாசியில் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தி கண்காணிப்பு மேற்கொள்ளுமாறு மாநிலஅரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையடுத்து உ.பி. அரசு வாரணாசியில் பலத்தபாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முக்கிய இடங்களிலும் வழிபாட்டு தலங்களிலும் தீவிரகண்காணிப்பு போடப்பட்டுள்ளது. வாரணாசி தவிர மேலும் மதுரா, அயோத்தி நகரங்களுக்கும் தீவிரவாதிகள் மிரட்டல் இருப்பதால் அங்கும் பாதுகாப்பு பலப் படுத்தப்பட்டுள்ளது. மேலும் மாநிலத்தில் சமூக நல்லிணக்கத்துக்கு இடையூறு விளைவிக்கும் செயலில் விஷமிகள் ஈடுபடகூடும் என்பதால் மாநில அரசு விழிப்புடன் செயல்படுமாறும் பாதுகாப்பு படையினரை உஷார் படுத்துமாறும் உளவுத் துறை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மாதுளம் பூவின் மருத்துவக் குணம்

மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ...

விளையாட்டு வீரர்களுக்கான உணவு முறைகள்

விளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் மேற்கூறியபடி பல்வேறு ...

பேரீச்சம் பழத்தின் மருத்துவ குணம்

இயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் , சில ...