வாரணாசியில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதி

 நரேந்திரமோடி வெற்றிபெற்ற வாரணாசியில் தீவிரவாதிகள் தாக்குதலுக்கு சதி திட்டமிட்டு இருப்பதாக வந்த தகவலை தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திரமோடி போட்டியிட்டு வெற்றிபெற்ற தொகுதி வாரணாசி. இது ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த நகரமாகும். இங்குள்ள காசிவிஸ்வநாதர் ஆலயம் பிரசித்திபெற்றது. நாடுமுழுவதும் உள்ள இந்துக்கள் ஒருமுறையாவது இங்கு சென்று வழிபடவேண்டும் என்பது ஐதீகம்.

இந்நிலையில் உளவுத்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி தீவிரவாதிகள் வாரணாசியை தாக்க சதி திட்டம் தீட்டி இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. வாரணாசியில் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தி கண்காணிப்பு மேற்கொள்ளுமாறு மாநிலஅரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையடுத்து உ.பி. அரசு வாரணாசியில் பலத்தபாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முக்கிய இடங்களிலும் வழிபாட்டு தலங்களிலும் தீவிரகண்காணிப்பு போடப்பட்டுள்ளது. வாரணாசி தவிர மேலும் மதுரா, அயோத்தி நகரங்களுக்கும் தீவிரவாதிகள் மிரட்டல் இருப்பதால் அங்கும் பாதுகாப்பு பலப் படுத்தப்பட்டுள்ளது. மேலும் மாநிலத்தில் சமூக நல்லிணக்கத்துக்கு இடையூறு விளைவிக்கும் செயலில் விஷமிகள் ஈடுபடகூடும் என்பதால் மாநில அரசு விழிப்புடன் செயல்படுமாறும் பாதுகாப்பு படையினரை உஷார் படுத்துமாறும் உளவுத் துறை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ர� ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ரயில் நிலையங்களை மோடி மே 22-ல் திறந்து வைக்கிறார் 'அம்ரித் பாரத்' திட்டத்தில் சீரமைக்கப்பட்ட பரங்கிமலை, ஸ்ரீரங்கம் ...

உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்ப� ...

உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்படுத்த வேண்டும் தமிழகத்தில் உள்ள உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்படுத்த வேண்டும் ...

மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்ப� ...

மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்பு முறை வாக்குறுதி என்ன ஆனது: தி.மு.க.,வுக்கு நயினார் நகேந்திரன் கேள்வி மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்பு முறை வாக்குறுதி என்ன ...

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் உறுத� ...

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் உறுதி ஹோண்டூராசுக்கு ஜெய்சங்கர் பாராட்டு அனைத்து வடிவங்களிலும் பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் ஹோண்டூராஸ் உறுதியுடன் இருப்பதை, ...

மாலத்தீவு படகு சேவையை மேம்படுத� ...

மாலத்தீவு படகு சேவையை மேம்படுத்த இந்தியா உதவி அதிவிரைவு படகு சவாரியை மேம்படுத்தவும், கடல்சார் இணைப்பை விரிவுபடுத்தவும், ...

மெய்சிலிர்க்க வைத்த இந்திய ராண� ...

மெய்சிலிர்க்க வைத்த இந்திய ராணுவம் பாகிஸ்தானின் ஏவுகணைத் தாக்குதலில் இருந்து பொற்கோவிலை பாதுகாத்தது எப்படி ...

மருத்துவ செய்திகள்

ஆல்பொகாடா பழம்

இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ...

தியானம் செய்யும் நேரம்

முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ...

சாத்துக்குடியின் மருத்துவக் குணம்

சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ...