ஜெயலலிதா குறித்த அவதூறு கட்டுரை: இலங்கைக்கு இந்தியா கண்டனம்

 இலங்கை பாதுகாப்பு துறை அமைச்சகத்தின் அதிகாரப் பூர்வ இணையதளத்தில், இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி, தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் குறித்து வெளியான அவதூறு கட்டுரை விவகாரத்தில், தில்லியில் உள்ள இலங்கைத்தூதர் சுதர்ஸன் சேன விரத்னேவை திங்கள்கிழமை நேரில் அழைத்து மத்திய வெளியுறவுத் துறை கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

முன்னதாக, இந்த விவகாரம் குறித்து மாநிலங்களவையில் பதிலளித்துப் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், “தமிழக முதல்வர் – இந்திய பிரதமர் இடையிலான கடிதப்பரிமாற்றங்களை இழிவுபடுத்தி இலங்கை பாதுகாப்புத் துறை இணையதளத்தில் வெளியான கட்டுரை கண்டிக்கத்தக்கது. இது தொடர்பாக தில்லியில் உள்ள இலங்கைத்தூதரை அழைத்து கடும்கண்டனம் தெரிவிக்கப்படும்’ என உறுதியளித்தார்.

அதன்படியே, இலங்கைத் தூதர் சுதர்ஸன் சேனவிரத்னே, வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு திங்கள்கிழமை மாலையில் வரவழைக்கப்பட்டார். அப்போது அவரிடம் இலங்கை விவகாரங்களை கவனிக்கும் மத்திய வெளியுறவுத்துறை இணைச் செயலர் சுசித்ரா துரை, இந்தியாவின் சார்பில் கண்டனத்தைத் தெரிவித்தார்.

“இந்திய நாடாளுமன்றத்தில் இலங்கை பாதுகாப்புத்துறை இணையதள விவகாரம் தொடர்பாகத் தெரிவிக்கப்பட்ட கடும்அதிருப்தி, கண்டனம் ஆகியவற்றை உங்களிடம் முறைப்படி மத்திய அரசு பதிவுசெய்கிறது. இத்தகைய செயல்களில் இனி ஈடுபடக்கூடாது என்று உங்கள் நாட்டு அரசிடம் கூறுங்கள்’ என்று அவர் தெரிவித்தார்.

இத்தகவலை பின்னர் செய்தியாளர்களிடம் வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் சையது அக்பருதீனும் உறுதிப்படுத்தினார். “இலங்கைத் தூதரை நேரில் அழைத்து மிகவும் கடுமையான முறையில் இந்தியாவின் எதிர்ப்பையும், கண்டனத்தையும் மத்திய அரசு பதிவுசெய்துள்ளது’ என்று அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கோவிட் 19 பற்றிய சந்தேகங்கள்

*கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்துசெல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 ...

அலரியின் மருத்துவக் குணம்

இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ...

சர்க்கரை நோயால் ஏற்ப்படும் பாதிப்புக்கள்

உங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். உதாரணமாக, கண்பார்வை ...