போர் பாதிப்பு பகுதிகளின் நலத்திட்டங்களுக்கு இந்தியா தொடர்ந்து உதவும்

 இலங்கை போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிறை வேற்றப்படும் நலத்திட்டங்களுக்கு இந்தியா தொடர்ந்து உதவிசெய்யும் என மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது .

இதுதொடர்பாக மாநிலங்களவையில் அ.தி.மு.க உறுப்பினர்கள் குழு தலைவர் டாக்டர் மைத்ரேயன் எழுப்பியிருந்த கேள்விக்கு வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.கே. சிங் அளித்த பதில் வருமாறு:

இலங்கை உள்நாட்டு போருக்குப் பிறகு, “போருக்கு பிந்தைய படிப்பினை மற்றும் நல்லிணக்கக்குழு (எல்எல்ஆர்சி) அளித்துள்ள பரிந்துரையின் படி பாதிக்கப்பட்டவடக்கு மாகாண மக்களுக்கு நிவாரணம், போரின்போது காணாமல் போனவர்களை தேடும் நடவடிக்கை, மக்கள் வசிப்பிடங்களில் நிறுத்தப்பட்ட படைகளை விலக்குதல், உயர்பாதுகாப்பு வலயத்தின் எல்லையை குறைத்தல், சந்தேகத்தின் பேரில் காவலில் வைக்கப்பட்டுள்ளவர்களை விடுவித்தல், இலங்கையில் தமிழர் வாழும் பகுதியில் அதிகாரப்பகிர்வு தொடர்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்தையில் ஈடுபடுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இலங்கை அரசை இந்தியா தொடர்ந்து வலியுறுத்திவருகிறது.

இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்சவிடம், இதை பிரதமர் நரேந்திரமோடி கடந்த 11ம் தேதி நேரில் வலியுறுத்தினார். இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டபகுதிகளில் வீட்டுவசதி, கண்ணிவெடி அகற்றுதல், கல்வி, வாழ் வாதாரம், தொலைத் தொடர்பு, சாலைவசதி, பொருளாதார புனரமைப்பு உள்ளிட்ட நலத்திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அவற்றுக்கு இந்தியா நிதி உதவி அளித்துவருகிறது.

அதைத்தொடர்ந்து வழங்குவதிலும் மத்திய அரசு உறுதியாக உள்ளது. இதன்விளைவாக போரினால் பாதிக்கப்பட்ட தமிழர் பகுதிகளில் இயல்புநிலை மெல்ல திரும்பி கொண்டிருக்கிறது’ என விகே. சிங் கூறியுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முருங்கை மரம், முருங்கை மரத்தின் மருத்துவ குணம்

மரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் கொடையான அனைத்து ...

ரோஜாப் பூவின் மருத்துவக் குணம்

ரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், மார்புச்சளி, காது ...

அதிமதுரத்தின் மருத்துவக் குணம்

இதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் உள்ள சுவகைகளை ...