பா.ஜ.க வேட்பாளர் தமிழ்ச் செல்வனை ஆதரித்து தலைவர்கள் பிரச்சாரம்

 சயான் கோலி வாடா தொகுதி பா.ஜ.க வேட்பாளர் தமிழ்ச் செல்வனை ஆதரித்து தமிழ்நாடு பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

மும்பை சயான் கோலிவாடா சட்ட சபை தொகுதியில் பா.ஜ'க சார்பில் தமிழரான தமிழ்ச்செல்வன் போட்டியிடுகிறார். அவர் தனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜ.க தேசிய பொதுச்செயலாளர் எச்.ராஜா உள்ளிட்டோர் சயான் கோலி வாடாவில் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர்.

இந்நிலையில் பா.ஜ.க வேட்பாளர் தமிழ்ச் செல்வனை ஆதரித்து நேற்று காலை சயான் கோலிவாடாவில் பிரமாண்ட தேர்தல்பிரசார பேரணி நடந்தது. இந்தபேரணி காலை 9 மணிக்கு சயான் கோலிவாடா விருந்தாவன் சொசைட்டி பகுதியில் இருந்து தொடங்கியது. பேரணியை பா.ஜ.க தேசிய பொதுச் செயலாளர் எச்.ராஜா, தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர்.

பேரணியில் பா.ஜனதா கட்சி தொண்டர்கள் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

சயான் கோலிவாடா முழுவதும் முக்கியவீதிகள் வழியாக சென்று வேட்பாளர் தமிழ்ச் செல்வன் அலுவலகத்தை சென்றடைந்தது. பேரணியில் தமிழ்நாடு பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பேசினார். அப்போது அவர் பேசியதாவது :-

மராட்டிய சட்ட சபை தேர்தலில் பா.ஜ.,கட்சி சார்பில் சயான் கோலிவாடா தொகுதியில் போட்டியிட எங்களது கட்சி ஒருதமிழரை வேட்பாளராக நிறுத்தி உள்ளது. இது மும்பை தமிழர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான செய்தியாகும்.

வேட்பாளர் தமிழ்ச் செல்வன் ஏற்கனவே மும்பை மாநகராட்சி உறுப்பினராக இருந்து இப்பகுதிமக்களுக்கு எண்ணற்ற பணிகள்செய்துள்ளார். அவர் எம்.எல்.ஏ. ஆனால் நிச்சயமாக சயான் கோலி வாடா தொகுதி மக்களுக்கு நிறைய சேவைகள் செய்துதர முடியும். காலநேரம் பார்க்காமல் உழைக்க கூடியவர் தமிழ்ச் செல்வன். எனவே நீங்கள் அவரை அதிகவாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யவேண்டும் என்று அவர் பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முருங்கையின் மருத்துவக் குணம்

மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது.

முருங்கை வேர் | முருங்கை வேரின் மருத்துவ குணம்

முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ...

எலும்பு மஜ்ஜை குறைபாடு நீங்க

நோய் எதிர்ப்புச்  சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது  எலும்பு மஜ்ஜை ...