ஆந்திராவுக்கு உடனடி நிவாரண தொகையாக ரூ.1000 கோடி

 ஆந்திரா, ஒடிஸா மாநிலங்களில் 'ஹுத்ஹுத்'புயலால் பாதிப்புக்குள்ளான பகுதிகளை பிரதமர் நரேந்திர மோடி நேற்று பார்வையிட்டார். அப்போது ஆந்திராவுக்கு உடனடி நிவாரண தொகையாக ரூ.1000 கோடி வழங்குவதாக அவர் அறிவித்துள்ளார்.

கடலோர ஆந்திரா, ஒடிஸா மாநிலங்களில் சில மாவட்டங்களை கடந்த ஞாயிற்றுக் கிழமை 'ஹுத்ஹுத்' புயல் பெரும் சேதத்தை உண்டாக்கியது. குறிப்பாக விசாகப்பட்டினம், விஜய நகரம், ஆகிய கடலோர மாவட்டங்கள் பெரும் பதிப்புக்குள்ளாகின . புயல் கரையைக்கடந்து 3 நாட்களான பின்னரும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இயல்பு நிலை திரும்பவில்லை. கடலோர ஆந்திராவில் தொடர்ந்து சீரமைப்புப்பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நேற்று மதியம் 1.05 மணிக்கு டெல்லியில் இருந்து தனிவிமானம் மூலம் புறப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி, 1.35 மணிக்கு விசாகப் பட்டினத்துக்கு வந்தார். வழியில் புயல்சேதத்தை பார்வையிட்டார். விமான நிலையத்தில் அவரை மாநில ஆளுநர் நரசிம்மன், முதல்வர் சந்திரபாபுநாயுடு, மத்திய அமைச்சர்கள் வெங்கய்ய நாயுடு, கஜபதிராஜு மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் அவர் புயலால் சீர்குலைந்துள்ள விசாகப்பட்டினம் விமான நிலையத்தை பார்வையிட்டார். பிறகு காரில் விசாகப்பட்டினம் பீச்ரோடு, துறைமுகம், எம்.வி. பி. காலனி உள்ளிட்ட பகுதிகளை முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் ஒரேகாரில் சென்று பார்வையிட்டார்.

அதைத்தொடர்ந்து விசாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரிகளுடன் புயல் சீரமைப்பு பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த புயல்பாதிப்பு புகைப்படங்களை பார்வையிட்டார். அதன்பின் செய்தியாளர்களிடம் பிரதமர் மோடி கூறியதாவது:

ஹுத்ஹுத் புயல் ஆந்திராவில் பெரும்பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளது. முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை விரைந்து மேற்கொண்டதால் பெரும் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. தகவல்தொழில் நுட்பத்தை ஆந்திர அரசு நன்றாக உபயோகப்படுத்தி கொண்டுள்ளது. இந்தபுயல் தாக்கத்தை சமாளித்ததில் மத்திய, மாநில அரசுகளின் கூட்டு நடவடிக்கை முக்கிய காரணமாகும். அரசு கேட்டு கொண்டதற்கு இணங்க விசாகப்பட்டின மக்களும் வெளியேவராமல் சாமர்த்தியமாக செயல்பட்டனர். அவர்களை பாராட்டுகிறேன்.

உரியசமயத்தில் மாநில, மத்திய அரசுகள் தகவல்களை பரிமாறிக் கொண்டு பரஸ்பரம் மேற்கொண்ட நடவடிக்கைகளால் உயிர் சேதங்களை நாங்கள் பெருமளவில் தடுத்து விட்டோம் என கூறலாம். ஆனால் புயல் என்பது பயங்கரமானது. இதனை நீங்கள் தைரியமாக எதிர்கொண்டீர்கள். உங்களுக்கு என் சல்யூட். கடலோர ஆந்திரா, ஒடிஸா ஆகியபகுதிகளை ஆய்வுசெய்தேன். இந்த தருணத்தில் மத்திய அரசு உங்களுக்கு முதுகெலும்பாக செயல்படும். தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும்.

உரியசமயத்தில் மாநில, மத்திய அரசுகள் தகவல்களை பரிமாறிக் கொண்டு பரஸ்பரம் மேற்கொண்ட நடவடிக்கைகளால் உயிர் சேதங்களை நாங்கள் பெருமளவில் தடுத்து விட்டோம் என கூறலாம். ஆனால் புயல் என்பது பயங்கரமானது. இதனை நீங்கள் (பொது மக்கள்) தைரியமாக எதிர்கொண்டீர்கள். உங்களுக்கு என் சல்யூட். கடலோர ஆந்திரா, ஒடிஸா ஆகிய பகுதிகளை ஆய்வு செய்தேன். இந்த தருணத்தில் மத்திய அரசு உங்களுக்கு முதுகெலும்பாக செயல்படும். தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும்.

துறை முகங்கள், விமான நிலையங்கள்,தேசிய நெடுஞ் சாலைகள், கடலோர பகுதிகள், ரயில் வழித்தடங்கள் ஆகியவற்றின் சேதங்கள் குறித்தும், விவசாயசேதங்கள் குறித்தும் விரைவில் கணக்கெடுப்பு நடத்தி அதற்கு தேவையான நிதி உதவிகள் உடனுக்குடன் செய்யப் படும். தற்போது ஆந்திர மாநிலத்துக்கு உடனடி நிவாரண நிதியின்கீழ் ரூ.1,000 கோடி வழங்கப்படும். மேலும் புயலால் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு பிரதமர்நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சமும், காயமடைந்த வர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி கூறினார். பின்னர் தனிவிமானம் மூலம் மாலையில் டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

குப்பைமேனியின் மருத்துவ குணம்

குப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் சிறிதளவு உப்புச் ...

சிறுகுறிஞ்சாவின் மருத்துவ குணம்

சிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை வெய்யிலில் காயவைத்து ...

வேம்புவின் மருத்துவக் குணம்

நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ...