புனிதத்துவத்தை உணர்ந்த மனிதர்

இந்தமனிதன் நினைத்திருந்தால் நேரடியாக ஜனவரி 22 ஆம் தேதி “வந்து ப்ராண ப்ரதிஷ்டை” செய்து விட்டுச் சென்றிருக்கலாம். அரசியலுக்காக செய்கிறார் என்ற அனைத்து விமர்ச்சனங் களையும் தாண்டி இந்த வயதிலும் விரதம்இருந்து இராமனை இணைக்கும் ஶ்ரீரங்கம், ராமேஸ்வரம் வந்து புனித நீராடி தாம் செய்யப்போகும் இந்த செயலுக்காக தான் ஒரு நாட்டின் பிரதமர் என்பதைத் தாண்டி இவ்வளவு மெனக்கெடுகிறார் என்றால் அச்செயலின் “புனிதத்துவத்தை” முழுமையாக உணர்ந்து அதை மதித்து ஒவ்வொரு ராம பக்தர்களின் சார்பாகவே இதைச் செய்கிறார் என்று உணர முடிகிறது. இதைக் காண்கையில் இராஜராஜ சோழன் முதலான நமது பேரரசர்கள் கோவில்களைக்கட்டி இறைவனை பிரதிஷ்டை செய்தபோது எவ்வளவு பக்தியுடன், அற்பணிப்புடன் செய்திருப்பார்கள் என்பதை ஊகிக்க முடிகிறது.

இராமேஸ்வரத்தில் போருக்குப் பின் அன்னை சீதையால் உருவாக்கப்பட்ட சிவலிங்கம் உள்ளது. ஶ்ரீராமர் சீதையைமீட்க இங்கிருந்து தான் இலங்கை சென்று இராவண வதம் முடிந்த பின் இங்கு வந்து சிவபெருமானை வழிபட்டு அயோத்தி திரும்பினார் என்பது நம்பிக்கை. இதுகுறித்து திருநாவுக்கரச பெருமான்பாடியதை நமது பாரத பிரதமரும் அறிந்திருக்கக் கூடுமோ?!

“வீரமிக் கெயிறு காட்டி விண்ணுற நீண்டரக்கன் கூரமிக் கவனைச் சென்று கொன்றுடன்கடற்ப டுத்துத் தீரமிக் கானி ருந்த திருவிரா மேச்சுரத்தைக் கோரமிக் கார்த வத்தாற் கூடுவார்குறிப்பு ளாரே”

– திருநாவுக்கரசர் தேவாரம்.

பொருள் : கடலின் மீது சேதுபாலம் கட்டி, வீரமிக்க கோரைப் பற்களைக் காட்டிக் கொண்டு வானளவு உயர்ந்த கொடுமைமிக்க அரக்கனாகிய இராவணனை இலங்கைக்குசென்று அவனை அழித்து, பேராற்றலுடைய திருமால் சிவபெருமானுக்கு கோவில்செய்து வழிபட்ட இராமேஸ்வரத்தை அஞ்சத்தகும் பான்மையுள்ள தீவிர சாதனைகளால் சென்றடைபவர்கள் தம் குறிக்கோள் நிரம்பப் பெறுவர்.

-பா இந்துவன்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

கூந்தல் பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்க

வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் பளபளப்பாகவும், ...

வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்

வெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் பவர்கள் பருமனாகலாம். ...

திராட்சையின் மருத்துவக் குணம்

திராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, தோல், கண்களுக்கு ...