புனிதத்துவத்தை உணர்ந்த மனிதர்

இந்தமனிதன் நினைத்திருந்தால் நேரடியாக ஜனவரி 22 ஆம் தேதி “வந்து ப்ராண ப்ரதிஷ்டை” செய்து விட்டுச் சென்றிருக்கலாம். அரசியலுக்காக செய்கிறார் என்ற அனைத்து விமர்ச்சனங் களையும் தாண்டி இந்த வயதிலும் விரதம்இருந்து இராமனை இணைக்கும் ஶ்ரீரங்கம், ராமேஸ்வரம் வந்து புனித நீராடி தாம் செய்யப்போகும் இந்த செயலுக்காக தான் ஒரு நாட்டின் பிரதமர் என்பதைத் தாண்டி இவ்வளவு மெனக்கெடுகிறார் என்றால் அச்செயலின் “புனிதத்துவத்தை” முழுமையாக உணர்ந்து அதை மதித்து ஒவ்வொரு ராம பக்தர்களின் சார்பாகவே இதைச் செய்கிறார் என்று உணர முடிகிறது. இதைக் காண்கையில் இராஜராஜ சோழன் முதலான நமது பேரரசர்கள் கோவில்களைக்கட்டி இறைவனை பிரதிஷ்டை செய்தபோது எவ்வளவு பக்தியுடன், அற்பணிப்புடன் செய்திருப்பார்கள் என்பதை ஊகிக்க முடிகிறது.

இராமேஸ்வரத்தில் போருக்குப் பின் அன்னை சீதையால் உருவாக்கப்பட்ட சிவலிங்கம் உள்ளது. ஶ்ரீராமர் சீதையைமீட்க இங்கிருந்து தான் இலங்கை சென்று இராவண வதம் முடிந்த பின் இங்கு வந்து சிவபெருமானை வழிபட்டு அயோத்தி திரும்பினார் என்பது நம்பிக்கை. இதுகுறித்து திருநாவுக்கரச பெருமான்பாடியதை நமது பாரத பிரதமரும் அறிந்திருக்கக் கூடுமோ?!

“வீரமிக் கெயிறு காட்டி விண்ணுற நீண்டரக்கன் கூரமிக் கவனைச் சென்று கொன்றுடன்கடற்ப டுத்துத் தீரமிக் கானி ருந்த திருவிரா மேச்சுரத்தைக் கோரமிக் கார்த வத்தாற் கூடுவார்குறிப்பு ளாரே”

– திருநாவுக்கரசர் தேவாரம்.

பொருள் : கடலின் மீது சேதுபாலம் கட்டி, வீரமிக்க கோரைப் பற்களைக் காட்டிக் கொண்டு வானளவு உயர்ந்த கொடுமைமிக்க அரக்கனாகிய இராவணனை இலங்கைக்குசென்று அவனை அழித்து, பேராற்றலுடைய திருமால் சிவபெருமானுக்கு கோவில்செய்து வழிபட்ட இராமேஸ்வரத்தை அஞ்சத்தகும் பான்மையுள்ள தீவிர சாதனைகளால் சென்றடைபவர்கள் தம் குறிக்கோள் நிரம்பப் பெறுவர்.

-பா இந்துவன்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

இயற்கையான வாழ்வு சில நியதிகள்

பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ...

அறிந்து கொள்வோம் : சிறுநீரகம்

மனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் மறைந்து இருப்பவை ...

வயிற்றுப்புண் குணமாக

நன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை மட்டும் எடுத்து ...