புனிதத்துவத்தை உணர்ந்த மனிதர்

இந்தமனிதன் நினைத்திருந்தால் நேரடியாக ஜனவரி 22 ஆம் தேதி “வந்து ப்ராண ப்ரதிஷ்டை” செய்து விட்டுச் சென்றிருக்கலாம். அரசியலுக்காக செய்கிறார் என்ற அனைத்து விமர்ச்சனங் களையும் தாண்டி இந்த வயதிலும் விரதம்இருந்து இராமனை இணைக்கும் ஶ்ரீரங்கம், ராமேஸ்வரம் வந்து புனித நீராடி தாம் செய்யப்போகும் இந்த செயலுக்காக தான் ஒரு நாட்டின் பிரதமர் என்பதைத் தாண்டி இவ்வளவு மெனக்கெடுகிறார் என்றால் அச்செயலின் “புனிதத்துவத்தை” முழுமையாக உணர்ந்து அதை மதித்து ஒவ்வொரு ராம பக்தர்களின் சார்பாகவே இதைச் செய்கிறார் என்று உணர முடிகிறது. இதைக் காண்கையில் இராஜராஜ சோழன் முதலான நமது பேரரசர்கள் கோவில்களைக்கட்டி இறைவனை பிரதிஷ்டை செய்தபோது எவ்வளவு பக்தியுடன், அற்பணிப்புடன் செய்திருப்பார்கள் என்பதை ஊகிக்க முடிகிறது.

இராமேஸ்வரத்தில் போருக்குப் பின் அன்னை சீதையால் உருவாக்கப்பட்ட சிவலிங்கம் உள்ளது. ஶ்ரீராமர் சீதையைமீட்க இங்கிருந்து தான் இலங்கை சென்று இராவண வதம் முடிந்த பின் இங்கு வந்து சிவபெருமானை வழிபட்டு அயோத்தி திரும்பினார் என்பது நம்பிக்கை. இதுகுறித்து திருநாவுக்கரச பெருமான்பாடியதை நமது பாரத பிரதமரும் அறிந்திருக்கக் கூடுமோ?!

“வீரமிக் கெயிறு காட்டி விண்ணுற நீண்டரக்கன் கூரமிக் கவனைச் சென்று கொன்றுடன்கடற்ப டுத்துத் தீரமிக் கானி ருந்த திருவிரா மேச்சுரத்தைக் கோரமிக் கார்த வத்தாற் கூடுவார்குறிப்பு ளாரே”

– திருநாவுக்கரசர் தேவாரம்.

பொருள் : கடலின் மீது சேதுபாலம் கட்டி, வீரமிக்க கோரைப் பற்களைக் காட்டிக் கொண்டு வானளவு உயர்ந்த கொடுமைமிக்க அரக்கனாகிய இராவணனை இலங்கைக்குசென்று அவனை அழித்து, பேராற்றலுடைய திருமால் சிவபெருமானுக்கு கோவில்செய்து வழிபட்ட இராமேஸ்வரத்தை அஞ்சத்தகும் பான்மையுள்ள தீவிர சாதனைகளால் சென்றடைபவர்கள் தம் குறிக்கோள் நிரம்பப் பெறுவர்.

-பா இந்துவன்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

இலந்தையின் மருத்துவ குணம்

ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ...

எட்டியின் மருத்துவ குணம்

எட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ஆரஞ்சுப்பழ நிறத்தில் ...

ஆளிவிரையின் மருத்துவக் குணம்

இதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ...