எவ்வளவு உயர்ந்த ஆன்மிக நிலையில் இருந்தாலும் ஜபம், பூஜை அவசியம்

 பகவான் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் குரு மகான் ஸ்ரீ தோத்தாபுரி ஸ்வாமிகள். இவர் எல்லா சித்திகளையும் பெற்றவர். கடவுளைக் கண்ட ஞானி. ஆனாலும்கூட இவர் தினசரி காலை, மாலை வேளைகளில் ஜபம், பூஜை, கிரியைகளை செய்து வந்தார்.

ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சருக்கு ஒரு சந்தேகம், கடவுள் காட்சி பெற்ற நம் குருவானவர் ஏன் தினசரி காலை, மாலை வேளைகளில் ஜபம், பூஜை புனஷ்காரங்கள் செய்கிறார். இதைத் தனது குருவிடமே நேரிடையாகவே கேட்கவும் செய்தார்.

"ஸ்வாமி, கடவுள் காட்சி கண்ட தாங்கள் ஏன் இன்னமும் ஜபம், பூஜை இவற்றில் ஈடுப்பட்டு வருகிறீர்கள்? இவையெல்லாம் ஆரம்பகால ஆத்மா சாதகர்களுக்கு தேவைப்படலாம். தாங்கள் ஏன் செய்கிறீர்கள் என்பதை அறிய விழைகிறேன்" என்றார்.

அதற்கு ஸ்ரீ தோத்தாபுரி, "ஒருநாள் செம்பில் பால் வாங்கிப் பயன்படுத்திவிட்டு கழுவாமல் மறுநாள் அதே செம்பில் பால் வாங்கினால் அந்தப் பால் எப்படி கெட்டு விடுமோ அதுபோல தினசரி பூஜை, கிரியைகளால் மனதிலுள்ள அழுக்கைக் களைய வேண்டும். ஒரு நாள் விட்டாலும் மனதில் அழுக்கு படிந்துவிடும், எனவே எவ்வளவு உயர்ந்த ஆன்மிக நிலையில் இருந்தாலும் ஜபம், பூஜை போன்ற கிரியைகளை அவசியம்மேற்கொள்ள வேண்டும்" என்று பதில் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மாற்றம் வேண்டும் என்பதில் மக்க ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்கள் உறுதி தமிழக பாஜக தலைவர் அண்ணா மலை என் மண், ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை த ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை தனது நண்பன் என கூறுகிறது ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை நண்பனாக கருதுகிறது’ என பிரதமா் ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வரு ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வருவது அசோக் சிங்ஹல் அயோத்தி என்றால் ஶ்ரீ ராமனுக்கு அடுத்து நினைவுக்குவருவது அசோக் ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்தநாடாக மாறும் என்று ...

111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணி ...

111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணிக்கை அல்ல ஆசியபாரா விளையாட்டில் இந்தியாபெற்ற 111 பதக்கங்கள் என்பது சிறிய ...

தேசியக் கொடி அவமதிப்பு திமுக ம ...

தேசியக் கொடி அவமதிப்பு  திமுக மன்னிப்பு கேட்க வேண்டும் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்கு இந்திய தேசியக் கொடியை கொண்டு ...

மருத்துவ செய்திகள்

காயகல்ப மூலிகைகள்

வல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, வில்வம், துளசி, ...

உளுந்தின் மருத்துவக் குணம்

இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ...

தலைவலி குணமாக

விரவி மஞ்சளை விளக் கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை ...