புதுவை இளைஞன் கனகலிங்கம் “ப்ரோக்ரஷ்ஷிவ் யூனியன் கிரிக்கெட் கிளப்”பில் நிர்வாக உறுப்பினர். 1921ல் அதன் ஆண்டு விழாவிற்கு யாரை அழைப்பது என்று உறுப்பினர்கள் கலந்து ஆலோசித்தபோது – பாரதியாரை அழைக்கலாம் என்று முடிவாகியது. பாரதியார் இந்த ஆண்டு விழாவில் ‘ஜாதி பேதங்கள்’ என்ற தலைப்பில் பேசினார். இந்த நிகழ்ச்சி மூலம் கனகலிங்கம் பாரதிக்கு இன்னும் நெருங்கி வந்தார். இதனிடையே ஒரு
நாள் பாரதி கனகளிங்கத்திடம் “பாண்டியா! உனக்கு நான் பூணூல் அணிவித்து காயத்ரி மந்திர உபதேசம் செய்ய விரும்புகிறேன்” என்றார். “நாளைக் காலை உனக்கு யக்ஞோபவீத தாரணம் செய்ய முடிவு செய்துள்ளேன். காலையில் குளித்து மடி வஷ்த்ரம் அணிந்து – மேல் சட்டை இல்லாமல் வந்து சேர்.” கர்ஜனைக் குரலில் கட்டளை பிறந்தது.
மறுநாள் காலை பாரதியின் வீட்டிற்குள் பாரதி கட்டளையிட்டிருந்த தோற்றப் பொலிவில் கல்லூரி மாணவன் கனகலிங்கம் நுழைந்தான்.
வ.வே.சு.ஐயர், ஸ்ரீநிவாஷாச்சாரியார், நாகஷ்வாமி ஐயர், குவளைக் கண்ணன், கோவிந்தராஜூலு நாயுடு ஆகியோரும் அங்கு இருந்தனர்.
லக்ஷ்மி, சரஸ்வதி, கிருஷ்ணர் ஆகிய தெய்வங்களின் படங்கள் வைக்கப்பட்டிருந்தன. படங்களுக்குப் புஷ்பங்களைச் சாத்தினார் பாரதி. கிருஷ்ணன் படத்திற்கு அடியில் பிச்சுவா என்ற வளைவான கத்தியொன்று மாட்டியிருந்தது. அந்தக் கத்திக்கும் குங்குமப் பொட்டு இட்டார்.
தேவி ஸ்துதி ஒன்றைப் பாடிய பாரதி கனகலிங்கதைக் கிழக்கு நோக்கி அமரும்படி கூறினார். கனகலிங்கம் குந்திட்டு உட்கார, பாரதி தனது கரங்களில் பூணூலை எடுத்துக் கொண்டு சூரியனை தியானித்தார். சில வினாடிகள் கழிந்தன. பின் கனகலிங்கத்திற்குத் தன் கையாலேயே பூணூலை அணிவித்தார் பாரதி.
“இன்று முதல் நீ ஒரு பிராம்மணன். யாராவது உனது ஜாதி என்னவென்று கேட்டால் சற்றும் பயமில்லாமல் ‘நான் ஒரு பிராம்மணன்’ என்று சொல்!என? பறையன் பிராம்மணன் ஆவதா என்று யாராவது புருவங்களை உயர்த்தினால், எனக்கு இதெல்லாம் தெரியாது. அவர் உங்கள் சந்தேகத்தைத் தீர்த்து வைப்பார்.” இப்படிச் சொல்லும்படி பாரதி கட்டளையிட்டார்.
நன்றி : விஜய பாரதம்
இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ... |
வயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் கோளாறுகளையும், சிறுநீர்ப்பைக் ... |
மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ... |
Leave a Reply
You must be logged in to post a comment.