நாட்டை சுத்தமாக்க, சுகாதாரமாக்க ரூ.2 லட்சம்கோடி

 நாட்டை சுத்தமாக, சுகாதாரமாக வைத்திருப் பதற்கான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.2 லட்சம்கோடி நிதி ஒதுக்கப்படும் என்று மத்திய நகர்ப் புற வளர்ச்சித்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறினார்.

ரோட்டரி கிளப் சார்பில் ' சென்னை கிண்டியில் நடந்த தூய்மை இந்தியா' உறுதியேற்பு நிகழ்ச்சியில் மத்திய நாடாளுமன்ற விவகாரம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசியதாவது:

பிரதமர் நரேந்திர மோடி அறிமுகப்படுத்திய 'தூய்மை இந்தியா' திட்டத்தில் பாமர விவசாயிகள் முதல் நடிகர்கள் வரை பலரும் இணைந்து வருகின்றனர். ஒவ்வொரு இந்தியரும் இத்திட்டத்தில் பங்கேற்று, வாரத்துக்கு 2 மணி நேரம் என ஆண்டுக்கு 100 மணி நேரத்தை நாட்டின் தூய்மைப் பணிக்கு செலவிட வேண்டும்.

நகர்ப்புறங்களில் ஆண்டுக்கு 68.8 மில்லியன் டன் திடக்கழிவுகள் சேருகின்றன. இது 2041-ல் 160.5 டன்னாக உயரும் என்று கூறப்படுகிறது. நகர்ப்புறங்களில் மூன்றில் ஒரு பங்கு கழிவுகள் முறையாக மேலாண்மை செய்யப்படுவதில்லை. 27 மில்லியன் டன் குப்பைகள் நகரின் வெளிப்புறங்களில் நிலத்தில் கொட்டப்படுகின்றன. இதனால் நிலத்தடி நீர் மாசுபடுகிறது. கிராமப்புறங்களில் ஒரு நாளுக்கு 0.4 மில்லியன் டன் அளவில் திடக்கழிவுகள் உற்பத்தியாகின்றன.

இந்தியாவில் 68 சதவீத கிராமங்கள் இன்னமும் கழிப்பிட வசதிகளை பெறாமல் உள்ளன. கிராமப்புறங்களில் வரும் 88 சதவீத நோய்களுக்கு சுத்தமின்மையே காரணம். சுத்தமின்மையால் ஏற்படும் பிரச்சினைகளுக்காக ஒருவர் மாதம் ரூ.6500 செலவழிக்க வேண்டியுள்ளது என்று உலக சுகாதார மையம் கூறுகிறது. இதை கருத்தில் கொண்டே, 'தூய்மை இந்தியா' திட்டத்தை பிரதமர் அறிமுகப்படுத்தியுள்ளார். அரசியல் விடுதலையைவிட நாட்டின் சுகாதாரம்தான் முக்கியம் என்று சொன்ன காந்தியடிகளின் 150-வது பிறந்தநாளுக்குள் (2019 அக்டோபர் 2) இந்தியாவை தூய்மையான நாடாக்க வேண்டும்.

சுத்தமான இந்தியாவை உருவாக்கும் பணிகளில் ஈடுபட மத்திய அரசு அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.2 லட்சம் கோடி செலவிட உள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் 1.34 லட்சம் கோடி செலவில் கழிப்பறைகள் கட்டப்படும். கிராமப்புறங்களில் 11.11 கோடி கழிப்பறைகள் கட்டப்படும். அடுத்த 5 ஆண்டுக்குள் நாட்டின் 2.47 லட்ச கிராம பஞ்சாயத்துகளுக்கு தலா ரூ.20 லட்சம் தரவுள்ளோம். இதுமட்டுமன்றி 1.04 கோடி வீடுகளில் கழிப்பறையும், 5.08 லட்சம் பொது மற்றும் சமுதாய கழிப்பறைகளும் கட்டப்படவுள்ளன.

இவ்வாறு வெங்கய்ய நாயுடு கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில� ...

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நீதி ஆயோக் நிா்வாகக் குழு கூட்டம் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நீதி ஆயோக் நிா்வாகக் ...

பிரதமர் மோடி எந்த நாட்டுக்கும் ...

பிரதமர் மோடி எந்த நாட்டுக்கும் மிரட்டலுக்கும் அடிபணிபவர் இல்லை “பிரதமர் மோடி எந்தவொரு நாட்டுக்கும், எந்தவொரு மிரட்டலுக்கும் அடிபணிபவர் ...

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர� ...

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர்கள் பாகிஸ்தானுக்கே சென்று விடலாம் ஆபரேஷன் சிந்தூரை பாரட்டி தமிழ்நாடு பாஜக சார்பில் தேசியக்கொடி ...

நீதி வழங்க நீதிமன்றத்துக்கும் � ...

நீதி வழங்க நீதிமன்றத்துக்கும் வரையறைகள் உள்ளன அ.தி.மு.க.,வுடனான கூட்டணியை இறுதி செய்வதற்காக அமித் ஷா தமிழகம் ...

முதல்வரை குறை சொல்ல அதிகாரம் தே ...

முதல்வரை குறை சொல்ல அதிகாரம் தேவையில்லை – அண்ணாமலை ''தமிழக முதல்வரை சாமானியராக இருந்து குறை சொல்லலாம். அதற்கு ...

ஆப்கன் அரசுடன் முதல்முறையாக அம� ...

ஆப்கன் அரசுடன் முதல்முறையாக அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசுக்கு ...

மருத்துவ செய்திகள்

வெற்றிலையின் மருத்துவக் குணம்

செரிமானமூட்டியாகவும், கப அகற்றியாகவும் செயல்படுகிறது.

ஜலதோஷம் குணமாக

கடுகு, திப்பிலி, சீரகம், மிளகு மற்றும் சுக்கு இவற்றில் சிறிதளவு எடுத்து கொள்ள ...

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ...