சமீபத்தில் 475 உறுப்பினர்களை கொண்ட ஜப்பான் பாராளுமன்ற கீழ்சபைக்கு தேர்தல் நடந்தது. இதில் சின்சோ அபே தலைமையிலான விடுதலை ஜனநாயக கட்சி கூட்டணியும், பிரதான எதிர்கட்சியான ஜப்பான் ஜனநாயக கட்சி கூட்டணியும் அதிகாரத்தை கைப்பற்றப் போட்டியிட்டன.
இன்று தேர்தல் முடிவுகள் வெளியானது. இதில் மூன்றில் இரண்டுபகுதி தொகுதிகளைக் கைப்பற்றி சின்சோ அபே தலைமை யிலான விடுதலை ஜனநாயக கட்சி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் 2வது முறையாக பிரதமர் பொறுப்பேற்கும் சின்சோ அபே 2018ம் ஆண்டுவரை தொடர்ந்து பிரதமராக நீடிப்பார்.
இந்நிலையில் தேர்தலில் வெற்றிபெற்ற அபேக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் "தேர்தலில் நீங்கள் அடைந்தவெற்றிக்கு வாழ்த்துக்கள், தகுதிவாய்ந்த உங்கள் தலைமையில் ஜப்பான் வளர்ச் சியின் புதிய உயரங்களை அடையும்" என மோடி தனது டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் சத்துக்களும் உள்ளன. ... |
காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ... |
முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.