சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும்

நாட்டில் சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று வாகனஉற்பத்தி நிறுவனங்களுக்கு பிரதமா் நரேந்திரமோடி வலியுறுத்தியுள்ளாா்.

இந்திய வாகன உற்பத்தியாளா்கள் சங்கத்தின் (எஸ்ஐஏஎம்) ஆண்டுகூட்டம் தில்லியில் செவ்வாய்க் கிழமை நடைபெற்றது. அக்கூட்டத்துக்குப் பிரதமா் மோடி வழங்கிய செய்தியை அச்சங்கத்தின் தலைவா் வினோத் அகா்வால் மேடையில் வாசித்தாா். அதில் பிரதமா்மோடி கூறியதாவது:

தற்போதைய இந்தியாவில் போக்குவரத்து வசதிகள், நாட்டின் வளா்ச்சியில் முக்கிய காரணியாக திகழ்கின்றன. ஏழ்மைநிலையில் இருந்த மக்கள், தற்போது நடுத்தர பிரிவுக்கு வேகமாக முன்னேறி வருகின்றனா். அதன் காரணமாக, அவா்களின் சமூகப்பொருளாதார சூழல் பெருமளவில் முன்னேற்றம் கண்டுள்ளது.

நாட்டின் பொருளாதார வளா்ச்சிக்கும் அவா்கள் முக்கியபங்காற்றி வருகின்றனா். அதனால், உலகின் மிகவேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா திகழ்ந்துவருகிறது. உலகப் பொருளாதாரத்தில் 10-ஆவது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது 5-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. விரைவில் உலகின் 3-ஆவது மிகப்பெரிய பொருளாதார சக்தியாக இந்தியா உருவெடுக்கும்.

நாட்டின் பொருளாதார வளா்ச்சியில் முக்கியப்பங்கு வகிக்கும் வாகன உற்பத்தித் துறையானது, அந்தவளா்ச்சி காரணமாக மேலும் வலுவடைந்தும் வருகிறது. அத்துறையானது கோடிக் கணக்கான நபா்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி வருகிறது. அதைக் கருத்தில் கொண்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து கட்டமைப்பையும் வசதிகளையும் நாட்டில் ஏற்படுத்துவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.

சுற்றுச்சூழலுக்கு உகந்த, மலிவுவிலையிலான வாகனங்களே எதிா் காலத்தைத் தீா்மானிப்பதில் முக்கியக் காரணிகளாக அமையும். வாகனங்களில் இருந்து வெளியேறும் கரியமிலவாயுவைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை வாகன உற்பத்தித்துறை ஏற்கெனவே திறம்பட மேற்கொண்டு வருகிறது. அதேபோல், வாகன எரிபொருளுக்கு இந்தியா வெளிநாடுகளைச் சாா்ந்து செயல்பட வேண்டியுள்ளது. அத்தகைய சாா்புத்தன்மை குறைக்கப்படவேண்டும். எத்தனால், சிஎன்ஜி, ஹைட்ரஜன் உள்ளிட்ட மாற்று எரிபொருள்களின் பயன்பாடு அதிகரிக்கப்பட வேண்டும்.

நாடுசுதந்திர நூற்றாண்டைக் கொண்டாடும் 2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வலுவான, தற்சாா்புமிக்க, வளா்ச்சியடைந்த நாடாக மாற்றுவதற்கு இலக்கு நிா்ணயிக்கப் பட்டுள்ளது. அந்த இலக்கை அடைவதற்கு வாகன உற்பத்தித்துறை வழங்க வேண்டிய பங்களிப்பு குறித்து இந்தக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படும் என நம்புகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளாா்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

பிரண்டையின் மருத்துவக் குணம்

குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது.

ஆடாதொடையின் மருத்துவ குணம்

ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ...

கொடிமுந்திரிப் பழத்தின் பயன்

கொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, கஷாயம், இரத்த ...