சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும்

நாட்டில் சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று வாகனஉற்பத்தி நிறுவனங்களுக்கு பிரதமா் நரேந்திரமோடி வலியுறுத்தியுள்ளாா்.

இந்திய வாகன உற்பத்தியாளா்கள் சங்கத்தின் (எஸ்ஐஏஎம்) ஆண்டுகூட்டம் தில்லியில் செவ்வாய்க் கிழமை நடைபெற்றது. அக்கூட்டத்துக்குப் பிரதமா் மோடி வழங்கிய செய்தியை அச்சங்கத்தின் தலைவா் வினோத் அகா்வால் மேடையில் வாசித்தாா். அதில் பிரதமா்மோடி கூறியதாவது:

தற்போதைய இந்தியாவில் போக்குவரத்து வசதிகள், நாட்டின் வளா்ச்சியில் முக்கிய காரணியாக திகழ்கின்றன. ஏழ்மைநிலையில் இருந்த மக்கள், தற்போது நடுத்தர பிரிவுக்கு வேகமாக முன்னேறி வருகின்றனா். அதன் காரணமாக, அவா்களின் சமூகப்பொருளாதார சூழல் பெருமளவில் முன்னேற்றம் கண்டுள்ளது.

நாட்டின் பொருளாதார வளா்ச்சிக்கும் அவா்கள் முக்கியபங்காற்றி வருகின்றனா். அதனால், உலகின் மிகவேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா திகழ்ந்துவருகிறது. உலகப் பொருளாதாரத்தில் 10-ஆவது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது 5-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. விரைவில் உலகின் 3-ஆவது மிகப்பெரிய பொருளாதார சக்தியாக இந்தியா உருவெடுக்கும்.

நாட்டின் பொருளாதார வளா்ச்சியில் முக்கியப்பங்கு வகிக்கும் வாகன உற்பத்தித் துறையானது, அந்தவளா்ச்சி காரணமாக மேலும் வலுவடைந்தும் வருகிறது. அத்துறையானது கோடிக் கணக்கான நபா்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி வருகிறது. அதைக் கருத்தில் கொண்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து கட்டமைப்பையும் வசதிகளையும் நாட்டில் ஏற்படுத்துவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.

சுற்றுச்சூழலுக்கு உகந்த, மலிவுவிலையிலான வாகனங்களே எதிா் காலத்தைத் தீா்மானிப்பதில் முக்கியக் காரணிகளாக அமையும். வாகனங்களில் இருந்து வெளியேறும் கரியமிலவாயுவைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை வாகன உற்பத்தித்துறை ஏற்கெனவே திறம்பட மேற்கொண்டு வருகிறது. அதேபோல், வாகன எரிபொருளுக்கு இந்தியா வெளிநாடுகளைச் சாா்ந்து செயல்பட வேண்டியுள்ளது. அத்தகைய சாா்புத்தன்மை குறைக்கப்படவேண்டும். எத்தனால், சிஎன்ஜி, ஹைட்ரஜன் உள்ளிட்ட மாற்று எரிபொருள்களின் பயன்பாடு அதிகரிக்கப்பட வேண்டும்.

நாடுசுதந்திர நூற்றாண்டைக் கொண்டாடும் 2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வலுவான, தற்சாா்புமிக்க, வளா்ச்சியடைந்த நாடாக மாற்றுவதற்கு இலக்கு நிா்ணயிக்கப் பட்டுள்ளது. அந்த இலக்கை அடைவதற்கு வாகன உற்பத்தித்துறை வழங்க வேண்டிய பங்களிப்பு குறித்து இந்தக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படும் என நம்புகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளாா்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

மருத்துவ செய்திகள்

உணவை எளிதில் ஜீரணமாக்கும் பெருங்காயம்

நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ...

பள்ளி செல்லுகின்ற குழந்தைகளுக்கான உணவு

பள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் அந்தக் குழந்தைகள் ...

இலவங்கப் பத்திரி மூலம் நாம் பெறும் மருத்துவம்

இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ...