திமுக எரிந்து கொண்டிருக்கிற வீடு

 திமுக எரிந்து கொண்டிருக்கிற வீட்டின் நிலையில் இருப்பதாகவும், எனவே உயிர் தப்பிக்க தொண்டர்கள் பலர் அக்கட்சியில் இருந்து வெளியேறிக் கொண்டிருப்பதாகவும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

திமுக.வை பொறுத்தவரை எரிகிற வீட்டுக்கு சமம். எரிகிற வீட்டில் இருந்து உயிர்தப்பிக்க பலரும் குதித்து ஓடுவார்களே அதேபோல் வெளியேறி கொண்டிருக்கிறார்கள். இந்தநேரத்தில் வீட்டின் உரிமையாளர் போடும் கூச்சல் பொருள் நிறைந்ததாக இருக்குமா?.

மோடியின் மீது மக்கள்வைத்துள்ள நம்பிக்கை நாடுமுழுவதும் எழுச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதே எழுச்சி தமிழகத்திலும் உருவாகி இருப்பதை உணர்ந்த காரணத்தால் ஏற்பட்டவெறுப்பின் வெளிப்பாடுதான் இது. ஒருகாலத்தில் பா.ஜ.க கொடி ஊன்ற விடமாட்டேன் என்றவர் தான் கலைஞர். 1999-ம் ஆண்டு அரசியலில் தங்கள் இடத்தை தக்கவைத்து கொள்ள எங்களோடு கூட்டணி வைத்தார்கள்.

மத்திய மந்திரி சபையிலும் முக்கிய இலாகாக்களை வாங்கினார்கள். அப்போது இனித்தது. மதவாதம் தெரியவில்லை. நான் தனிப்பட்டமுறையில் திமுக. தலைவர்கள் பலரை பல முறை சந்தித்து பேசி இருக்கிறேன். அவர்களது கருத்துக்களும், கட்சியின் கருத்துக்களும் எனக்கு நன்றாகவே தெரியும்.

ஆனால் அதை எக்காலத்திலும் வெளியேபேச முடியாது. பேசுவது நாகரீகமாகவும் இருக்காது. காங்கிரசுக்கு அரசியல்பிழைப்பு நடத்த மதவாதம் என்ற ஒரே மந்திர சொல்தான் உண்டு. மக்களை பிரித்தாளுவதில் காங்கிரசும், திமுக.வும் கைதேர்ந்தவை என்பதை தமிழகமக்கள் உணர்ந்து விட்டார்கள். இனி இந்த மாயவார்த்தை ஜாலங்கள் மக்களிடம் எடுபடாது. 2004 மற்றும் 2009-ல் காங்கிரசும், திமுக.வும் கூட்டுசேர்ந்தது. அதன் விளைவாக இலங்கையில் தமிழர்களுக்கு அழிவு ஏற்பட்டது. மீண்டும் கூட்டுசேர்ந்தால் தமிழக மக்களை அழிக்கும் திட்டமாகத் தான் அமையும்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கர்ப்பிணிகளுக்கு DHA கூடிய பால் மாவு அவசியமா?

அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ...

வாய் துர்நாற்றம் குணமாக

எலுமிச்சை அளவு கொத்தமல்லி தழைகளை சுத்தம் செய்து வாயில் போட்டு மென்று 5 ...

ஆவாரம் பூ | ஆவாரம் பூவின் மருத்துவக் குணம்

உடல் பொன்னிறமாக ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் பாகத்தில் கூட்டு ...