இந்தியா -மலேசியா இருதரப்பு ஒத்துழைப்பை வேளாண்மை துறையில் அதிகரிக்க முடிவு

இந்தியா, மலேசியா ஆகிய இருநாடுகளும், வேளாண்மை துறையில் குறிப்பாக, எண்ணெய் பனை உற்பத்தி உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை அதிகரிக்க முடிவு செய்துள்ளன.  மத்திய வேளாண், உழவர் நலன், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான், மலேசியா நாட்டின் தோட்டப்பயிர்கள் துறை அமைச்சர்  டத்தோ ஸ்ரீ ஜொஹாரி அப்துல் கனியை சந்தித்த போது, இது குறித்து விவாதிக்கப்பட்டது.

2024 ஜூலை 16 முதல் 19 வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மலேசிய அமைச்சர், புதுதில்லியில் உள்ள க்ரிஷி பவனில் மத்திய வேளாண்துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகானை இன்று (18.07.2024) சந்தித்து பேசினார். அப்போது இந்தியா மற்றும் மலேசியா இடையேயான வேளாண்துறை ஒத்துழைப்புகளை மேலும் வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

சமையல் எண்ணெய் – எண்ணெய் பனை உற்பத்திக்கான தேசிய இயக்கத்தில் ஒத்துழைப்பை மேற்கொள்ள, இருதரப்பும் விருப்பம் தெரிவித்ததுடன், வேளாண் மற்றும் அதனைச் சார்ந்த பொருட்களுக்கான சந்தை அணுகுதலில் உள்ள பிரச்சனைகள் குறித்தும், வேளாண் துறை ஒத்துழைப்பை, அமைப்பு ரீதியாக்குவது குறித்தும், தோட்டக்கலைத் துறையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

மலேசிய அமைச்சர் இந்தியாவில் மேற்கொண்ட பயணம் வெற்றிகரமாக அமைந்ததற்கு நன்றி தெரிவித்த மத்திய வேளாண் அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான், வேளாண்மை மற்றும் பிற துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை தொடர விருப்பம் தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

வறுமை ஒழிப்புக்கு சொத்துரிமை அ ...

வறுமை ஒழிப்புக்கு சொத்துரிமை அவசியம் – பிரதமர் மோடி 'உலகம் முழுவதும் சொத்துரிமை ஒரு பெரிய சவாலாக உள்ளது, ...

ஒடிசா மாநில அரசுடன் சிங்கப்பூர ...

ஒடிசா மாநில அரசுடன் சிங்கப்பூர் அதிபர் ஒப்பந்தம் அரசு முறை பயணமாக சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னம் ...

பிப்ரவரி 1ம் தேதி மத்திய அமைச்ச ...

பிப்ரவரி 1ம் தேதி மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் பிப்.1ம் தேதி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய ...

இந்தியாவின் ஆட்டோ மொபைல் துறைய ...

இந்தியாவின் ஆட்டோ மொபைல் துறையின் வளர்ச்சி : ரத்தன் டாட்டாவை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி இந்தியாவின் ஆட்டோமொபைல் துறையின் வளர்ச்சிக்கு தொழிலதிபர் ரத்தன் டாடா ...

பெங்களூரில் அமெரிக்க தூதரகம் த ...

பெங்களூரில் அமெரிக்க தூதரகம் திறந்துவைப்பு பெங்களூருவில் அமெரிக்க துணை தூதரகம் திறக்கப்பட்டது. இப்போதைக்கு விசா ...

ஏழைகளுக்கு அதிகாரம் அளித்தவர் ...

ஏழைகளுக்கு அதிகாரம் அளித்தவர் எம்:ஜி:ஆர் – பிரதமர் மோடி புகழாரம் தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி ...

மருத்துவ செய்திகள்

கொய்யாவின் மருத்துவ குணம்

கொய்யா மரத்தின் இலைகளைக் கொண்டு வந்து லேசாக வதக்கி ஒரு டம்ளர் தண்ணீர் ...

குழந்தைகளின் மேனி பட்டுப்போல் இருக்க

பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ...

மாதுளையின் மருத்துவக் குணம்

மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ...