உலகளாவிய அமைதி மற்றும் செழுமைக்கு பங்களிக்க இந்தியா தயாராக உள்ளது – நிர்மலா சீதாராமன்

‘உலகளாவிய அமைதி மற்றும் செழுமைக்கு பங்களிக்க இந்தியா தயாராக இருக்கிறது’ என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

இது தொடர்பாக, அவர் ஆங்கில செய்தி சேனலுக்கு அளித்த பேட்டி: உலக அளவில் இந்தியாவின் பங்கு அதிகரித்து வருகிறது. நமது கண்டுபிடிப்புகளை பகிர்ந்து கொள்கிறோம். உலகளாவிய அமைதி மற்றும் செழுமைக்கு பங்களிக்க இந்தியா தயாராக இருக்கிறது. கோவிட் 19 தடுப்பூசி இந்தியா உருவாக்கிய போது, உலகம் முழுவதும் உள்ள நாடுகளுக்கு வழங்கியது. 2013ம் ஆண்டில் 10வது பொருளாதார நாடாக இந்தியா இருந்தது. தற்போது 5வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. 2047ம் ஆண்டில், இந்தியா சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடைகிறது.

அப்போது நமது சொந்த குடிமக்களுக்கு மட்டுமல்ல, உலக சமூகத்திற்கும் செழுமையை உருவாக்க முடியும். த்திய கிழக்கு நாடுகள் மற்றும் ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான மோதல் போன்ற பல சவால்களுடன் இன்று உலகம் போராடுகிறது. பணவீக்கம், போர்கள் உள்ளிட்ட உலகளாவிய பிரச்னைகள் ஏற்பட்டுள்ளது.

உள்நாட்டு உற்பத்தியைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க இந்தியா பல்வேறு நடவடிக்கை எடுத்துள்ளது. புதிய வளர்ச்சி வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதில் இந்தியா சிறந்த நிலையில் உள்ளது. இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழா ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழாவை உலகம் உற்று நோக்குகிறது தேர்தல் ஆணையத்தின் சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள் திட்டமான (IEVP) ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறி ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” – பிரதமர் மோடி திரிணமூல் காங்கிரஸ் அரசின் ஊழல்கள் மீது நடவடிக்கை எடுப்பதை ...

தொரிய அணுமின் நிலையம்

தொரிய அணுமின் நிலையம் இன்று உலகம் முழுவதும் அமெரிக்க-ஈரான் யுத்த நிறுத்த செய்திக்கு ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடி ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடித்து இந்தியா முன்னேறி வருகிறது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மகிழ்ச்சி உல​களா​விய நெருக்​கடிகளை முறியடித்து இந்தியா முன்​னேறி வரு​கிறது என்று ...

கல்பாக்கம் அணுசக்தி விஞ்ஞானிக ...

கல்பாக்கம் அணுசக்தி விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு கல்பாக்கத்தில் உள்நாட்டிலேயே வடிவமைத்து உருவாக்கப்பட்ட முன்மாதிரி வேக ஈனுலை, ...

“மக்கள் தொகையை கட்டுக்குள் வைத ...

“மக்கள் தொகையை கட்டுக்குள் வைத்த மாநிலங்கள் மக்களவை தொகுதிகளை இழக்காது” – பிரதமர் மோடி மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்கள் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை ...

மருத்துவ செய்திகள்

முட்டைக்கோசுவின் மருத்துவக் குணம்

முட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு சாறு குடித்தாலே ...

நன்னாரியின் மருத்துவ குணம்

நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ...

மாதுளம் பூவின் மருத்துவக் குணம்

மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ...