புதியவாக்காளர் பட்டியல் வெளியிடா விட்டால் இடைத் தேர்தலை தள்ளிவைக்க வேண்டும்

 ஸ்ரீரங்கம் தொகுதியில் 9,000 போலி வாக் காளர்களை நீக்கி விட்டு, புதியவாக்காளர் பட்டியல் வெளியிடா விட்டால் இடைத் தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் என்று, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர ராஜன் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக் சேனாவை தலைமை செயலகத்தில் திங்கள் கிழமை சந்தித்த அவர் இது தொடர்பாக அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:

வரும் 13-ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ள ஸ்ரீரங்கம் சட்டப்பேரவை தொகுதியில் ஆளும் கட்சியினர் தேர்தல் நடத்தைவிதிகளை மீறி செயல்பட்டு வருகின்றனர்.

ஸ்ரீரங்கம் நகரில் விஸ்வேஸ்வரம் பகுதியில் பிரசாரம் செய்து கொண்டிருந்த பாஜக வேட்பாளர் எம். சுப்பிரமணியம், திருச்சி மாவட்டத் தலைவர் பார்த்திபன், மாவட்ட துணைத் தலைவர் கோவிந்தன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள்மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தேர்தல் நடத்தை விதிகளுக்கு மாறாக தமிழகம் முழுவதும் இருந்து அதிமுக, திமுகவை சேர்ந்த ஆயிரக் கணக்கானோர் ஸ்ரீரங்கம் தொகுதியில் குவிந்துள்ளனர்.

அனுமதிபெறாத நூற்றுக் கணக்கான வாகனங்கள் தொகுதிமுழுவதும் வலம்வந்து கொண்டிருக்கின்றன. இதனால் தொகுதி மக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அமைதியாக தேர்தல் நடைபெறுமா? என்ற அச்சமும் எழுந்துள்ளது.

இது குறித்து பாஜக சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டும் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. ஸ்ரீரங்கத்தில் தேர்தல் அமைதியாக நடைபெற நடத்தைவிதிகளை கண்டிப்புடன் நடை முறைப்படுத்த வேண்டும், அனுமதிபெறாத வாகனங்களை பறிமுதல் செய்யவேண்டும்.

பா.ஜ.க நிர்வாகிகளை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். ஸ்ரீரங்கம் தொகுதியில் உள்ள 9,000 போலி வாக்காளர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கி விட்டு புதியபட்டியல் வெளியிட வேண்டும்.

இல்லையெனில் வரும் 13-ம் தேதி நடைபெறவுள்ள இடைத்தேர்தலை தள்ளிவைக்க வேண்டும்.

வேட்பாளர்கள், கட்சி நிர்வாகிகள், வாக்குச்சாவடி முகவர்களுக்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும் என மனுவில் தமிழிசை சௌந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

‘11 ஆண்டு கால ஆட்சியில் வியத்தகு ...

‘11 ஆண்டு கால ஆட்சியில் வியத்தகு மாற்றங்கள்’ – பிரதமர் மோடி பெருமிதம் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் கீழ் கடந்த 11 ...

இந்திய மக்கள் ஒன்றிணைந்து இருப� ...

இந்திய மக்கள் ஒன்றிணைந்து இருப்பதை பார்ப்பது மகிழ்ச்சி நரேந்திர மோடி பிரதமராக மூன்றாவது முறை பதவியேற்று, ஓராண்டு ...

சமூகநீதி எப்படி சாத்தியமாகும்

சமூகநீதி எப்படி சாத்தியமாகும் திருமண ஆசை காட்டி பெண்களையும் குழந்தைகளையும் பாலியல் வன்கொடுமை ...

குற்றவாளிகளை கைது செய்வதில் தி. ...

குற்றவாளிகளை கைது செய்வதில் தி.மு.க., அரசு நாடகமாடுகிறதா: நயினார் நகேந்திரன் கேள்வி தமிழகத்தின் கொங்கு பகுதியில் பெருகி வரும் கொலை, கொள்ளை ...

பாதுகாப்புத்துறையில் தன்னிறைவ ...

பாதுகாப்புத்துறையில் தன்னிறைவு பெறுவதில் கவனம்; பிரதமர் மோடி பெருமிதம் ''கடந்த 11 ஆண்டுகளில் பாதுகாப்பு துறையில் பல்வேறு மாற்றங்கள் ...

நக்சல் ஒழிப்புக்கு கிடைத்த வெற� ...

நக்சல் ஒழிப்புக்கு கிடைத்த வெற்றி; இந்தியாவில் குறைந்தது நக்சல் வன்முறை இல்லாத இந்தியாவை உருவாக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைக்கு மத்தியில், ...

மருத்துவ செய்திகள்

அலரியின் மருத்துவக் குணம்

இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ...

முருங்கைக் காயின் மருத்துவ குணம்

முருங்கைக் காய் மலச்சிக்கலை சரி செய்யும் . வயிற்றுப் புண்ணை போக்கும் மேலும் ...

துளசியின் மருத்துவக் குணம்

எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ...