வெறும் 300 பேர் தாய்மதம் திரும்பியதற்காக தலையங்கம் எழுதும் நியூ யார்க் டைம்ஸ்

 நியூயார்க் டைம்ஸின் பாரத பிரதமர் மோடிக்கு எதிரான மதச்சார்பின்மை புகார் ஒன்று அணுசக்தி ஒப்பந்தத்தில் அமெரிக்காவின் எதிர்பார்ப்பு மோடியிடம் எடுபடாமல் போன எரிச்சலாக இருக்கலாம், அல்லது கிறிஸ்துவ மிஷனரிகளின் அழுத்தமாக இருக்கலாம்.

சமிபத்தில் இந்தியா வந்து சென்ற அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியாவின் மதச்சார்பிமை தொடர வேண்டும் என்று ஆருடம் கூறிச்சென்றார் , அவரது ஆருடத்தை ஆமோதிக்கும் விதமாகவும் , விளக்கம் தரும் விதமாகவும் "மதவாத சம்பவங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து கடைபிடிக்கும் மவுனம் மிகவும் அபாயகரமானது" என்ற தலைப்பில் தலையங்கம் தீட்டியுள்ளது. அதில் டெல்லியில் இரண்டு தேவாலயங்கள் தாக்கப்பட்டதாகவும் , 200 கிறிஸ்தவர்களும் 100 இஸ்லாமியர்களும் தாய்மதமான இந்து மதத்துக்கு இந்து அமைப்புகளால் மாற்றப்பட்டதாகவும், இத்தகைய மதவாத அமைப்புகள் நெருப்புடன் விளையாடுவதாகவும் , இது குறித்து பிரதமர் மோடி வாய் திறக்க மறுக்கிறார் என்றும், இவரது தொடர் மௌனம் இந்தியாவின் மதச்சார்பின்மைக்கு மிகவும் அபாயகரமானது என்றும் விமர்சித்துள்ளது.

பத்திரிக்கைகளில் விமர்சனம் என்பது சாதாரணமான ஒன்றே. இருப்பினும் நியூயார்க் டைம்ஸின் இந்த விமர்சனத்தை எதிர்க் கச்சிகளும் , குறிப்பாக அமெரிக்காவை எதற்கு எடுத்தாலும் கடுமையாக எதிர்க்கும் கட்சிகளும் கையிலெடுத்துக் கொண்டு தாம் தூம் என்று குதிப்பது வேடிக்கையாகவே உள்ளது.

இந்தியாவில் ஏதோ ஒரு மூலையில் மதவழிபாட்டு தளங்கள் அடிக்கடி சேதப்படுத்தப் படுவதும், உண்டியல் திருட்டு , சிலை கடத்தல் போன்றவையும் சாதாரண ஒன்றே. மேலும் மதமாற்றம் என்பதும் இந்தியாவில் காலம்,காலமாக தொடரும் நிகழ்சிகளே. இஸ்லாமிய மன்னர்கள் இந்துக்களை மிரட்டி மதம் மாற்றினார்கள் என்றால், ஆங்கிலேயர்களும் , அதனை தொடர்ந்து வந்த கிருஸ்துவ மிஷனரிகளும் கல்வி, வேலைவாய்ப்பு , மருத்துவ உதவிகளை காட்டியே மக்களை மதம் மாற்றினர். இப்படி இந்து மதத்திலிருந்து சென்றவர்களின் எண்ணிக்கை மட்டும் பல கோடியாக இருக்க , வெறும் 300 பேர் தாய்மதம் திரும்பியதற்காக தலையங்கம் எழுதுகிறது நியூ யார்க் டைம்ஸ் .

பலாயிரம் இந்துக்கோயில்கள் இடிக்கப்பட்ட போதும் , பல கோடி இந்துக்கள் மதம் மாற்றப்பட்ட போதும் அமைதியிலக்காத இந்தியா . மோடியின் அமைதியால் அமைதியிழந்து விடுமா?. 

தமிழ் தாமரை VM வெங்கடேஷ்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

புற்றுநோய்க்கான மருத்துவம்

பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய் ஏற்பட்டு ...

மாதுளம் பூவின் மருத்துவக் குணம்

மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ...

பொடுதலையின் மருத்துவக் குணம்

பற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி. ...