டொமினிகா விருதை பெரும் பிரதமர் நரேந்திர மோடி

காமன்வெல்த் ஆஃப் டொமினிகா, தனது உயரிய தேசியவிருதான டொமினிகா விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது.

COVID-19 தொற்றின்போது, 2021ஆம் ஆண்டு பிப்ரவரியில், இந்தியா, டொமினிகாவுக்கு 70,000டோஸ் ஆஸ்ட்ராஜெனிகா தடுப்பூசியை அன்பளிப்பாக வழங்கியது.
அத்துடன், டொமினிகாவின் சுகாதாரம், கல்வி மற்றும் தகவல்தொழில்நுட்ப வளர்ச்சிக்கு இந்தியா பல்வேறு உதவிகளை அளித்திருந்தது.

இந்த உதவிகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், டொமினிகா தனது நாட்டின் உயரியவிருதை பிரதமர் மோடிக்கு வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.

டொமினிக்காவின் பிரதமர் வெளியிட்ட அறிக்கை;

இது தொடர்பாக, டொமினிகாவின் பிரதமர் ரூஸ்வெல்ட் ஸ்கெர்ரிட் வெளியிட்ட அறிக்கையில், “பிரதமர் நரேந்திரமோடி, டொமினிகாவின் உண்மையான நண்பர். கோவிட் தொற்றின்போது, சரியானநேரத்தில் அவர் நமக்கு உதவிசெய்தார். இதுவரையிலான அவரது ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும், இருநாடுகளுக்கு இடையேயான உறவின் வலிமையை வெளிப்படுத்தும் விதமாகவும், நாங்கள் எங்கள் நாட்டின் உயரிய விருதை பிரதமர் மோடிக்கு வழங்க இருக்கின்றோம்” என்றார்.

மேலும், இருநாடுகளுக்கு இடையேயான உறவு மேலும் வலுப்பட வேண்டும் என்று அவர் விரும்புவதாகவும், நவம்பர் 19 முதல் 21 வரை கயானாவின் ஜார்ஜ்டவுனில் நடைபெறும் இந்தியா-காரிகாம் உச்சி மாநாட்டின் போது காமன்வெல்த் தலைவர் டொமினிகா சில்வானி பர்ட்டன், இந்த விருதை பிரதமர் மோடிக்கு வழங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி ச ...

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி சம்பாதித்தது மத்திய அரசு மத்திய அரசு கடந்த ஐந்துஆண்டுகளில் தனது அலுவலகங்களில் இருந்து ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வே ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வேரியண்ட்டை அறிமுகப்படுத்திய நிதின் கட்கரி ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) நிறுவனத்தின் துணைநிறுவனமான விடா ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத் ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத்தை வீணடிக்க வேண்டாம் வாக்குதிருட்டு தொடர்பாக ராகுல் காந்தி முன்வைத்த குற்றச் சாட்டுக்கு ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவ ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவதை மக்கள் விரும்ப வில்லை பிஹார் சட்டப் பேரவைத்தேர்தலை முன்னிட்டு ராஷ்ட்ரிய ஜனதா தளம் ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது மகளிர் உலகக் கோப்பையை வென்ற இந்திய பெண்கள் அணியை ...

விவசாயிகளைக் கிண்டல்செய்வது ப ...

விவசாயிகளைக் கிண்டல்செய்வது போல் இருக்கிறது பிரதமரின் பயிர்காப்பீடு திட்டத்தின் செயல்பாடு குறித்து மத்திய வேளாண் ...

மருத்துவ செய்திகள்

முகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க

வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ...

முடி உதிர்தல் குறைய

வேப்பிலை கிருமிநாசினி . இது சிரிது எடுத்து நீரில் வேகவைத்து . வேகவைத்த ...

அகத்திப் பூவின் மருத்துவக் குணம்

அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது.