முதல்வர் பதவிக்கு நான், நீ என்று போட்டிபோடுவது கூட்டணி தர்மத்துக்கு எதிரானது

 தேர்தல் அறிவிப்புக்கு முன்பே முதல்வர் பதவிக்கு நான், நீ என்று போட்டிபோடுவதும், வேட்பாளர் அறிவிப்பதும் கூட்டணி தர்மத்துக்கு எதிரானது என தமிழிசை சவுந்தர ராஜன் கூறினார்.

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் பா.ஜ.க., பிரமுகர் இல்ல திருமண விழாவுக்கு மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வந்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "எந்ததேர்தலாக இருந்தாலும் கூட்டணி கட்சிகள் இணைந்து பணியாற்றவேண்டும். ஊழலுக்கு எதிரான ஆட்சி பா.ஜ.க ஆட்சி. நடைபெற்ற சட்ட சபை கூட்டத்தில் தே.மு.தி.க.வினர் தாக்கப்பட்டதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

தேர்தலுக்கு முன்னதாகவே முதல்வர் வேட்பாளர் என அறிவிப்பு வெளியிடுவது கூட்டணி தர்மத்துக்கு எதிரானது. அது கூட்டணியின் வெற்றியை பாதிக்கும். திராவிடகட்சிகளுக்கு மாற்று சக்தியை பாஜக கூட்டணி உருவாக்கும். சட்டமன்ற தேர்தல் வரும் போது நல்ல கூட்டணி அமைந்து 2016-ல் தமிழகத்தில் பா.ஜ.க கூட்டணி ஆட்சிஅமைக்கும்.

தற்போது தமிழகத்தில் பல லட்சம் உறுப்பினர்கள் விரும்பி சேர்ந்துள்ளனர். பிரதமர் மோடி இலங்கை தமிழர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய நடவடிக்கை எடுத்துவருகிறார். மீனவர்கள் பிரச்சினை இல்லாமல் மீன்பிடிக்க நிரந்தரதீர்வு காணப்படும்," என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்ட� ...

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச சிகிச்சை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச ...

இந்தியாவின் சுகாதார திட்டங்கள� ...

இந்தியாவின் சுகாதார திட்டங்களை பகிர்ந்து கொள்ள தயார் இந்தியாவின் பல்வேறு சுகாதார திட்டங்களின் நடைமுறைகளை உலக நாடுகளுடன் ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்� ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் அனைத்து கட்சிகளும் பாகுபாடு இன்றி தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு ஒன்றிணைய ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா ம� ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா முதல்வர் மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்துக்கு எந்த ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு.க.,வினரின் கீழ்த்தரமான செயல்பாடு 'தி.மு.க.,வின் கீழ்த்தரமான செயல்பாடு, தி.மு.க.,வினர் ஈடுபடும் அனைத்து பாலியல் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் சிந்துார்: பிரதமர் மோடி ஆவேசம் ''என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் ...

மருத்துவ செய்திகள்

தியானம் செய்யும் நேரம்

முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ...

ஜலதோஷம் குணமாக

கடுகு, திப்பிலி, சீரகம், மிளகு மற்றும் சுக்கு இவற்றில் சிறிதளவு எடுத்து கொள்ள ...

முருங்கை இலைக் காம்பு | முருங்கை இலை காம்பின் மருத்துவ குணம்

முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன ...