சட்ட்டசபை நெருங்கும் நேரத்தில் தி.மு.க , பைல்ஸ்-3 வெளியிடப்படும் -அண்ணாமலை

 ‘சட்டசபை நெருங்கும் நேரத்தில் தி.மு.க., பைல்ஸ்-3 வெளியிடப்படும். தி.மு.க., கூட்டணிக் கட்சிகள் எடுத்த டெண்டர்கள், சம்பாதித்த லாபங்கள் அம்பலப்படுத்தப்படும்’ என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

திருச்சி விமான நிலையத்தில், அண்ணாமலை நிருபர்களுக்கு அளித்த பேட்டி: டங்ஸ்டன் சுரங்க விவகாரம் தொடர்பாக வரும் டிச., 12ம் தேதி மத்திய அமைச்சர் எல்.முருகனும், நானும் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியை சந்திக்க உள்ளோம். நல்ல முடிவோடு தமிழகம் வருவோம். விவசாயிகளுக்கு சாதகமான தகவலுடன் வருவோம். டங்ஸ்டன் விவகாரத்தில் சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் நாடகம் ஆடுகிறார். தி.மு.க,., பைல்ஸ் 1 மற்றும் 2 வெளியிட்டுள்ளோம். தேர்தல் வரட்டும் அப்போது தி.மு.க., பைல்ஸ் 3 வெளியிடப்படும்.

பைல்ஸ்-3ல் கூட்டணி கட்சிகள் குறித்து கவர் பண்ணலாம் என்று இருக்கிறோம். கூட்டணி கட்சிகளும் தப்பித்து போக கூடாது. தமிழகத்தில் வரும் பல டெண்டர்கள் கூட்டணி கட்சிகள் எடுத்து கொள்கிறார்கள். தமிழகத்தில் தி.மு.க., ஆட்சி வந்த பிறகு, 3 ஆண்டுக்கால டெண்டர் குறித்து ஆய்வு செய்து கொண்டு இருக்கிறோம். இது குறித்து 2025ம் ஆண்டு மக்கள் மன்றத்தில் வைக்க போகிறோம். பைல்ஸ் 1 மற்றும் 2ஐ விட பைல்ஸ் 3 தான் மிகப்பெரிய விஷயமாக இருக்கும். இதை மக்கள் பார்த்தாலே தெரிந்துவிடும். இவ்வளவு கோடி டெண்டரை உள்ளூர் அமைச்சரின் மச்சான் எடுத்து இருப்பது தெரிந்துவிடும்.

கூட்டணிக் கட்சிகள் எடுத்த டெண்டர்கள், சம்பாதித்த லாபங்கள் அம்பலப்படுத்தப்படும். மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டத்தை மாற்று பெயரில் தமிழக அரசு அமல்படுத்துகிறது. ஆதி திராவிடர் நலத்துறை தொழிற்பயிற்சியில் முடி திருத்துதல் உள்ளிட்டவை கற்றுத் தரப்படுகின்றன. முடி திருத்துதல் குலக்கல்வி இல்லையா? திருமாவளவனுக்கு திடீரென்று கோபம் வந்துருச்சி. விடுதலை சிறுத்தைக் கட்சியை வழிநடத்துவது யார் என்று கேட்டேன்?

கட்சியின் கண்ட்ரோல் கடந்த 15 நாட்களாக திருமாவளவன் கையில் இல்லை. நீங்கெல்லாம் எங்கள பத்தி பேசலாமா? இந்தியாவின் மிகப்பெரிய கட்சி பா.ஜ., இதனால் விடுதலை சிறுத்தைக் கட்சியோடு பா.ஜ.,வை கம்பேர் பண்ணி பேசும் அளவுக்கு கீழே போகவில்லை. 18 கோடி உறுப்பினர்கள் இருக்கும் கட்சி பா.ஜ.,. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழா ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழாவை உலகம் உற்று நோக்குகிறது தேர்தல் ஆணையத்தின் சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள் திட்டமான (IEVP) ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறி ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” – பிரதமர் மோடி திரிணமூல் காங்கிரஸ் அரசின் ஊழல்கள் மீது நடவடிக்கை எடுப்பதை ...

தொரிய அணுமின் நிலையம்

தொரிய அணுமின் நிலையம் இன்று உலகம் முழுவதும் அமெரிக்க-ஈரான் யுத்த நிறுத்த செய்திக்கு ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடி ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடித்து இந்தியா முன்னேறி வருகிறது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மகிழ்ச்சி உல​களா​விய நெருக்​கடிகளை முறியடித்து இந்தியா முன்​னேறி வரு​கிறது என்று ...

மருத்துவ செய்திகள்

கரு கூடாமல் போவதற்கு யார் காரணம்?

கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ...

காட்டாமணக்கு இலையின் மருத்துவக் குணம்

இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ...

செம்பரத்தையின் மருத்துவக் குணம்

செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும்.