சட்ட்டசபை நெருங்கும் நேரத்தில் தி.மு.க , பைல்ஸ்-3 வெளியிடப்படும் -அண்ணாமலை

 ‘சட்டசபை நெருங்கும் நேரத்தில் தி.மு.க., பைல்ஸ்-3 வெளியிடப்படும். தி.மு.க., கூட்டணிக் கட்சிகள் எடுத்த டெண்டர்கள், சம்பாதித்த லாபங்கள் அம்பலப்படுத்தப்படும்’ என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

திருச்சி விமான நிலையத்தில், அண்ணாமலை நிருபர்களுக்கு அளித்த பேட்டி: டங்ஸ்டன் சுரங்க விவகாரம் தொடர்பாக வரும் டிச., 12ம் தேதி மத்திய அமைச்சர் எல்.முருகனும், நானும் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியை சந்திக்க உள்ளோம். நல்ல முடிவோடு தமிழகம் வருவோம். விவசாயிகளுக்கு சாதகமான தகவலுடன் வருவோம். டங்ஸ்டன் விவகாரத்தில் சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் நாடகம் ஆடுகிறார். தி.மு.க,., பைல்ஸ் 1 மற்றும் 2 வெளியிட்டுள்ளோம். தேர்தல் வரட்டும் அப்போது தி.மு.க., பைல்ஸ் 3 வெளியிடப்படும்.

பைல்ஸ்-3ல் கூட்டணி கட்சிகள் குறித்து கவர் பண்ணலாம் என்று இருக்கிறோம். கூட்டணி கட்சிகளும் தப்பித்து போக கூடாது. தமிழகத்தில் வரும் பல டெண்டர்கள் கூட்டணி கட்சிகள் எடுத்து கொள்கிறார்கள். தமிழகத்தில் தி.மு.க., ஆட்சி வந்த பிறகு, 3 ஆண்டுக்கால டெண்டர் குறித்து ஆய்வு செய்து கொண்டு இருக்கிறோம். இது குறித்து 2025ம் ஆண்டு மக்கள் மன்றத்தில் வைக்க போகிறோம். பைல்ஸ் 1 மற்றும் 2ஐ விட பைல்ஸ் 3 தான் மிகப்பெரிய விஷயமாக இருக்கும். இதை மக்கள் பார்த்தாலே தெரிந்துவிடும். இவ்வளவு கோடி டெண்டரை உள்ளூர் அமைச்சரின் மச்சான் எடுத்து இருப்பது தெரிந்துவிடும்.

கூட்டணிக் கட்சிகள் எடுத்த டெண்டர்கள், சம்பாதித்த லாபங்கள் அம்பலப்படுத்தப்படும். மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டத்தை மாற்று பெயரில் தமிழக அரசு அமல்படுத்துகிறது. ஆதி திராவிடர் நலத்துறை தொழிற்பயிற்சியில் முடி திருத்துதல் உள்ளிட்டவை கற்றுத் தரப்படுகின்றன. முடி திருத்துதல் குலக்கல்வி இல்லையா? திருமாவளவனுக்கு திடீரென்று கோபம் வந்துருச்சி. விடுதலை சிறுத்தைக் கட்சியை வழிநடத்துவது யார் என்று கேட்டேன்?

கட்சியின் கண்ட்ரோல் கடந்த 15 நாட்களாக திருமாவளவன் கையில் இல்லை. நீங்கெல்லாம் எங்கள பத்தி பேசலாமா? இந்தியாவின் மிகப்பெரிய கட்சி பா.ஜ., இதனால் விடுதலை சிறுத்தைக் கட்சியோடு பா.ஜ.,வை கம்பேர் பண்ணி பேசும் அளவுக்கு கீழே போகவில்லை. 18 கோடி உறுப்பினர்கள் இருக்கும் கட்சி பா.ஜ.,. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கும் அர்ப் ...

140 கோடி இந்தியர்களுக்கும் அர்ப்பணிக்கிறேன்; சைப்ரஸ் நாட்டின் விருது பெற்ற மோடி பேச்சு இதை 140 கோடி இந்தியர்களுக்கும் அர்ப்பணிக்கிறேன் என சைப்ரஸ் ...

கற்பனை திறனை பலப்படுத்த சர்ச்ச ...

கற்பனை திறனை பலப்படுத்த சர்ச்சையை உருவாக்கும் முதல்வர் முதல்வர் ஸ்டாலின் கற்பனை திறனை பலப்படுத்தி கொள்வதற்காக, தேவையில்லாத ...

தேர்வு செய்த இடத்தில் தடுப்பணை; ...

தேர்வு செய்த இடத்தில் தடுப்பணை; நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல் கடந்த 2017ம் ஆண்டு, நாகப்பட்டினம் மாவட்டம், உத்தமசோழபுரத்தில் கடல்நீர் ...

10 ஆண்டுகளில் தொழில்துறையில் பல ...

10 ஆண்டுகளில் தொழில்துறையில் பல்வேறு சீர்திருத்தங்கள்; சைப்ரஸில் தொழிலதிபர்கள் மத்தியில் பிரதமர் பேச்சு கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா மேற்கொண்ட பொருளாதார மற்றும் ...

இது போருக்கான சகாப்தம் அல்ல – ...

இது போருக்கான சகாப்தம் அல்ல – பிரதமர் மோடி இது போருக்கான சகாப்தம் அல்ல என்று பிரதமர் நரேந்திர ...

போரின் நடுவே ரிஸ்க் எடுத்த பிரத ...

போரின் நடுவே ரிஸ்க் எடுத்த பிரதமர்.. வரலாற்றில் இதுவே முதல் முறை மோடியை திரும்பி பார்த்த உலக நாடுகள் பிரதமர் நரேந்திர மோடி சைப்ரஸ், கனடா, குரோஷியா உள்ளிட்ட ...

மருத்துவ செய்திகள்

முருங்கையின் மருத்துவக் குணம்

மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது.

சர்க்கரை வியாதி

சர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு "இன்சுலின்" சுரப்பதாலோ அல்லது போதுமான இன்சுலின் ...

துளசியின் மருத்துவக் குணம்

எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ...