தமிழக பாஜக.,வில் இது வரை 22 லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தர ராஜன் தெரிவித்தார்.
உறுப்பினர் சேர்க்கை தொடர்பான ஆய்வுக்கூட்டம் தில்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு வெள்ளிக் கிழமை சென்னை திரும்பிய தமிழிசை நிருபரிடம் கூறியது:
கடந்த மக்களவை தேர்தலில் பெற்ற வாக்குகளை விட அதிக உறுப்பினர்களைச் சேர்க்கவேண்டும் என்ற இலக்குடன் நாடுமுழுவதும் பாஜக உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
தமிழக பாஜகவில் இது வரை 22 லட்சத்துக்கும் அதிகமானோர் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். இது கடந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி பெற்ற வாக்குகளை விட அதிகமாகும்.
இந்த அளவுக்கு உறுப்பினர்கள் சேர்ந்திருப்பதை அமித்ஷா பாராட்டினார். உறுப்பினர் சேர்க்கைக்காக கிராம கமிட்டி அளவில் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு அனைவரும் உற்சாகத்துடன் செயல் பட்டு வருகின்றனர். எனவே, 60 லட்சம் உறுப்பினர்களை சேர்க்கவேண்டும் என்ற இலக்கை வரும் மார்ச் 31-ம் தேதிக்குள் எட்டுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.
வரும் மார்ச் 5-ம் தேதி கோவையில் நடைபெறும் உறுப்பினர்சேர்க்கை தொடர்பான ஆய்வு கூட்டத்தில் தேசியத்தலைவர் அமித்ஷா பங்கேற்கிறார். அதில் ஒன்றிய அளவில் உள்ள பொறுப்பாளர்கள் பங்கேற்க உள்ளனர் என்றார் தமிழிசை.
செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும். |
இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். |
சர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு "இன்சுலின்" சுரப்பதாலோ அல்லது போதுமான இன்சுலின் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.