அதிமுக.வுடன் கூட்டணி அமைக்க மாட்டோம்

 தமிழகத்தில் வரும் சட்ட பேரவைத் தேர்தலில் அதிமுக.வுடன் கூட்டணி அமைக்க மாட்டோம் என மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் திட்டவட்டமாக தெரிவித்தார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் மேலும் அவர் கூறியதாவது.

தமிழகத்தில் பாஜக உத்வேகத்துடன் வளர்ந்து வருகிறது. கடந்த 5 மாதங்களில் 33 லட்சம் புதியஉறுப்பினர்கள் சேர்க்கப் பட்டுள்ளனர். 2016 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் ஒருமாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். அதற்கு ஏற்ப தேசிய ஜனநாயக கூட்டணி வலுவடைந்து வருகிறது.

தமிழகத்தில் எப்போது தேர்தல்வந்தாலும் அதை எதிர்கொள்ள தேசிய ஜனநாயக கூட்டணி தயாராக உள்ளது. கூட்டணி கட்சிகளுக்கு பலகருத்துகள் இருந்தாலும், தேர்தலை சந்திக்கும் போது அதில் இறுதிமுடிவு கிடைக்கும். ஆனால் அதிமுகவுடன் கூட்டணி அமைக்கும் எண்ணம் இல்லை.

ஆந்திராவில் தமிழக கூலித்தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில், மிகப்பெரிய கடத்தல் கும்பல்களும், அவர்களுக்கு பின்னால் இருக்கக் கூடிய கடத்தல் பேர்வழிகளையும் தப்பிக்க வைக்கவே இந்த துப்பாக்கிச் சூடு நடந்துள்ளதாக சந்தேகம் எழுகிறது. இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக ஆந்திர அரசு வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும்.

மோடியின் செல்வாக்கு குறைந்து வருவதாக கூறப்படும் கருத்துகள் அனைத்துமே உருவாக்கப்படுபவை. மோடி அரசு மக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் முனைப்புடன் இருக்கிறது. நிலம் கையக படுத்துதல் மசோதா என்பது மக்களுக்கு எதிரானது அல்ல.

அரசின் பயன்பாட்டுக்கும் பொதுத் துறை நிறுவனங்களுக்கும் பயன் படும் வகையில் தரிசு நிலங்களையும், புறம் போக்கு நிலங்களையும் பெறும் திட்டம்தான் அது.

இந்ததிட்டம் எந்த வகையிலும் தனியாருக்கு துணைபோகாது. விவசாயிகளின் ஒப்புதலுடன் அவர்களது நிலங்களை பெறவும், அவர்களுக்கு 4 மடங்கு இழப்பீடு கொடுக்கவும், வேறுவகையில் விவசாய உற்பத்தியை பெருக்கவும் இத்திட்டத்தில் பல்வேறு அம்சங்கள் உள்ளன.

உணவுப்பழக்கம் என்பது தனிநபர் உரிமை. ஆனால் பசுக்களை கொல்வது என்பது பொருளாதார வளர்ச்சிக்கும், விவசாயத்துக்கும் பெரும்தடை யாக இருக்கும். அதன் காரணமாகவே மகாராஷ்டிராவில் மாட்டி றைச்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பாஜக ஒரு போதும் மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்த முயற்சிக்காது என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு.க.,வினரின் கீழ்த்தரமான செயல்பாடு 'தி.மு.க.,வின் கீழ்த்தரமான செயல்பாடு, தி.மு.க.,வினர் ஈடுபடும் அனைத்து பாலியல் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் சிந்துார்: பிரதமர் மோடி ஆவேசம் ''என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் ...

நாடு முழுவதும் புதுப்பித்த 103 ரய ...

நாடு முழுவதும் புதுப்பித்த 103 ரயில் நிலையங்களை திறந்தார் பிரதமர் மோடி 'அம்ரித் பாரத்' திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக புதுப்பிக்கப்பட்ட 103 ...

ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து த� ...

ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து தீவிர விவாதம் ஒரே நாடு, ஒரே தேர்தல்' குறித்து தீவிர விவாதம் ...

இனியும் தப்பிக்க முடியாது: பயங் ...

இனியும் தப்பிக்க முடியாது: பயங்கரவாதிகளுக்கு இந்தியா அளித்த செய்தி பயங்கரவாதிகள் இனியும் தப்பிக்க முடியாது என்பதுதான் ஆபரேஷன் சிந்தூர் ...

3 நாளில் எதிரியை மண்டியிட வைத்த � ...

3 நாளில் எதிரியை மண்டியிட வைத்த இந்திய ராணுவம் பாகிஸ்தானில் 9 பயங்கரவாத தளங்களை அழித்து எதிரியை மண்டியிட ...

மருத்துவ செய்திகள்

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ...

அறிந்து கொள்வோம் : சிறுநீரகம்

மனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் மறைந்து இருப்பவை ...

கண்டங்கத்திரி இலையின் மருத்துவக் குணம்

கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.