அதிமுக.வுடன் கூட்டணி அமைக்க மாட்டோம்

 தமிழகத்தில் வரும் சட்ட பேரவைத் தேர்தலில் அதிமுக.வுடன் கூட்டணி அமைக்க மாட்டோம் என மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் திட்டவட்டமாக தெரிவித்தார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் மேலும் அவர் கூறியதாவது.

தமிழகத்தில் பாஜக உத்வேகத்துடன் வளர்ந்து வருகிறது. கடந்த 5 மாதங்களில் 33 லட்சம் புதியஉறுப்பினர்கள் சேர்க்கப் பட்டுள்ளனர். 2016 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் ஒருமாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். அதற்கு ஏற்ப தேசிய ஜனநாயக கூட்டணி வலுவடைந்து வருகிறது.

தமிழகத்தில் எப்போது தேர்தல்வந்தாலும் அதை எதிர்கொள்ள தேசிய ஜனநாயக கூட்டணி தயாராக உள்ளது. கூட்டணி கட்சிகளுக்கு பலகருத்துகள் இருந்தாலும், தேர்தலை சந்திக்கும் போது அதில் இறுதிமுடிவு கிடைக்கும். ஆனால் அதிமுகவுடன் கூட்டணி அமைக்கும் எண்ணம் இல்லை.

ஆந்திராவில் தமிழக கூலித்தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில், மிகப்பெரிய கடத்தல் கும்பல்களும், அவர்களுக்கு பின்னால் இருக்கக் கூடிய கடத்தல் பேர்வழிகளையும் தப்பிக்க வைக்கவே இந்த துப்பாக்கிச் சூடு நடந்துள்ளதாக சந்தேகம் எழுகிறது. இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக ஆந்திர அரசு வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும்.

மோடியின் செல்வாக்கு குறைந்து வருவதாக கூறப்படும் கருத்துகள் அனைத்துமே உருவாக்கப்படுபவை. மோடி அரசு மக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் முனைப்புடன் இருக்கிறது. நிலம் கையக படுத்துதல் மசோதா என்பது மக்களுக்கு எதிரானது அல்ல.

அரசின் பயன்பாட்டுக்கும் பொதுத் துறை நிறுவனங்களுக்கும் பயன் படும் வகையில் தரிசு நிலங்களையும், புறம் போக்கு நிலங்களையும் பெறும் திட்டம்தான் அது.

இந்ததிட்டம் எந்த வகையிலும் தனியாருக்கு துணைபோகாது. விவசாயிகளின் ஒப்புதலுடன் அவர்களது நிலங்களை பெறவும், அவர்களுக்கு 4 மடங்கு இழப்பீடு கொடுக்கவும், வேறுவகையில் விவசாய உற்பத்தியை பெருக்கவும் இத்திட்டத்தில் பல்வேறு அம்சங்கள் உள்ளன.

உணவுப்பழக்கம் என்பது தனிநபர் உரிமை. ஆனால் பசுக்களை கொல்வது என்பது பொருளாதார வளர்ச்சிக்கும், விவசாயத்துக்கும் பெரும்தடை யாக இருக்கும். அதன் காரணமாகவே மகாராஷ்டிராவில் மாட்டி றைச்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பாஜக ஒரு போதும் மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்த முயற்சிக்காது என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

உடல் பலம் பெற

100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ...

ஆப்பிளின் மருத்துவக் குணம்

ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ...

எள்ளுச் செடியின் மருத்துவக் குணம்

கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ...