வெளிநாடுகளில் பிரதமரின் பேச்சுரிமைக்குத் தடையேதும் இல்லை

 ஐரோப்பிய நாடுகளில் பிரதமர் மோடி அண்மையில் ஆற்றிய உரையின் போது, "இந்தியாவின் 60 ஆண்டுகால கறையைத் துடைப்போம்' என பேசியதைக் கண்டித்து மாநிலங்களவையில் எதிர் கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.

எதிர்க் கட்சிகளின் புகாருக்கு பதிலளித்துப் பேசிய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, "வெளிநாடுகளில் பிரதமரின் பேச்சுரிமைக்குத் தடையேதும் இல்லை'

ஊழலால் இந்தியாவுக்கு தலைகுனிவு ஏற்பட வில்லை; ஆனால், அதைச் சுட்டிக்காட்டி வெளிநாடுகளில் பேசுவதால்தான் நாட்டுக்கு தலைகுனிவு ஏற்படுகிறது' என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூறுகிறது. இந்த புதிய கொள்கையை பார்த்து ஆச்சரிய மடைகிறேன். தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்துள்ள நிலையில், ஊழலைப்பற்றி இந்தியாவில் பேசினாலும், அல்லது பெர்லினில் பேசினாலும், அதை இணைய தளங்கள் உலகெங்கும் கொண்டு சேர்த்துவிடும்.

ஆக, நாம் இங்கே விவாதிப்பதையும் கூட, உலகெங்கிலும் உள்ள மக்கள் பார்க்கமுடியும் என்பதை அனைவரும் உணரவேண்டும். எனவே, குறிப்பிட்ட ஒரு விவகாரத்தை வெளிநாட்டில் பேசியது தவறு எனக்கூற முடியாது. வெளிநாடுகளில் பிரதமரின் பேச்சுரிமைக்கு தடையேதும் இல்லை .

கடந்த 60 ஆண்டுகளில் காங்கிரஸ் ஆட்சியின்போது நடைபெற்ற ஊழல்கள் குறித்து விரிவான விவாதம் நடத்த அரசு தயாராக உள்ளது என்றார் ஜேட்லி. பின்னர், பேசிய நாடாளுமன்ற விவகார துறை இணையமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வியும், "காங்கிரஸ் ஊழல்கள் குறித்து விவாதிக்க அரசு தயாராக உள்ளது' என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பீட்ரூட்டின் மருத்துவக் குணம்

பீட்ரூட் சாறு புற்றுநோய்க்கு கொடுத்தால் குணமாகிவிடும். பீட்ரூட்டில் மேலும் பல மருத்துவ பயன்கள் ...

“தாழ்நிலை சர்க்கரை” – சில செய்திகள் (HYPOGLYCEMIA)

நீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு குறைந்து விடும். ...

இந்தியாவில் முன்றில் ஒருவருக்கு எலும்பு தேய்மான நோய்

ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த ...