வெளிநாடுகளில் பிரதமரின் பேச்சுரிமைக்குத் தடையேதும் இல்லை

 ஐரோப்பிய நாடுகளில் பிரதமர் மோடி அண்மையில் ஆற்றிய உரையின் போது, "இந்தியாவின் 60 ஆண்டுகால கறையைத் துடைப்போம்' என பேசியதைக் கண்டித்து மாநிலங்களவையில் எதிர் கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.

எதிர்க் கட்சிகளின் புகாருக்கு பதிலளித்துப் பேசிய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, "வெளிநாடுகளில் பிரதமரின் பேச்சுரிமைக்குத் தடையேதும் இல்லை'

ஊழலால் இந்தியாவுக்கு தலைகுனிவு ஏற்பட வில்லை; ஆனால், அதைச் சுட்டிக்காட்டி வெளிநாடுகளில் பேசுவதால்தான் நாட்டுக்கு தலைகுனிவு ஏற்படுகிறது' என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூறுகிறது. இந்த புதிய கொள்கையை பார்த்து ஆச்சரிய மடைகிறேன். தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்துள்ள நிலையில், ஊழலைப்பற்றி இந்தியாவில் பேசினாலும், அல்லது பெர்லினில் பேசினாலும், அதை இணைய தளங்கள் உலகெங்கும் கொண்டு சேர்த்துவிடும்.

ஆக, நாம் இங்கே விவாதிப்பதையும் கூட, உலகெங்கிலும் உள்ள மக்கள் பார்க்கமுடியும் என்பதை அனைவரும் உணரவேண்டும். எனவே, குறிப்பிட்ட ஒரு விவகாரத்தை வெளிநாட்டில் பேசியது தவறு எனக்கூற முடியாது. வெளிநாடுகளில் பிரதமரின் பேச்சுரிமைக்கு தடையேதும் இல்லை .

கடந்த 60 ஆண்டுகளில் காங்கிரஸ் ஆட்சியின்போது நடைபெற்ற ஊழல்கள் குறித்து விரிவான விவாதம் நடத்த அரசு தயாராக உள்ளது என்றார் ஜேட்லி. பின்னர், பேசிய நாடாளுமன்ற விவகார துறை இணையமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வியும், "காங்கிரஸ் ஊழல்கள் குறித்து விவாதிக்க அரசு தயாராக உள்ளது' என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

நல்லெண்ணெய் நல்ல மருந்தாகும்

எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ...

மாதுளம் பூவின் மருத்துவக் குணம்

மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ...

கல்லீரல் நோய்கள் (கல்லீரல் அழற்சி)

பல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது வைரஸ் கிருமியால் ...