காங்கிரஸ்சில் இந்திரா காந்தி, சோனியா காந்தி, ராகுல் காந்தி என்ற நிலைதான் உள்ளது

 இந்தியாவில் 1975ல் கொண்டு வரப்பட்ட அவசரநிலையை கண்டித்து அதன் 40 ஆண்டு நிறைவையொட்டி பாஜக சார்பில் தாம்பரத்தில் பொதுக் கூட்டம் நடைபெற்றது.

பாஜக. மாநில தலைவர் தமிழிசை சவுந்திர ராஜன் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:–

காங்கிரஸ் ஆட்சியில் 1975–ல் இந்திரா காந்தி இந்தியா முழுவதும் அவசர நிலையை கொண்டு வந்தார். அவசர நிலை இந்தியாவில் கறுப்புநாட்களாக உள்ளது. அவசர நிலையில் இந்தியாவில் பாதிக்கப்பட்ட மக்களின் நிலைகுறித்து இன்றைய இளைய சமுதாயம் தெரிந்துகொள்ள வேண்டும்.

அவசர நிலையின் போது பிரதமர் நரேந்திர மோடி தலைமறைவு வாழ்க்கை நடத்தினார். அப்போது அவசர நிலையால் பாதிக்கப் பட்டவர்களின் குடும்பங்களுக்கு பொருளாதார உதவிகளை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டார்.

அவசரநிலை காரணமான ஆர்எஸ்எஸ். இயக்கத்தினரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பலர் வேலைகளையும் தொழிலையும் இழந்தனர்.

டெல்லியில் ஏராளமான கட்டிடங்கள் சஞ்சய்காந்தியால் இடித்து தள்ளப்பட்டது கட்டாய குடும்பகட்டுபாடு சட்டத்தை கொண்டுவந்து மக்களை கொடுமை படுத்தினர். இதற்கெல்லாம் எதிராக இந்தியா முழுவதும் பொதுமக்கள் போராடி அவசரகால நிலை முடிவுக்கு வந்தபின் நடைபெற்ற தேர்தலில் வரலாற்று சிறப்புமிக்க முடிவுகளை அளித்தனர். இதில் காங்கிரஸ் உபி, பீகார் போன்ற மாநிலங்களில் அனைத்து இடங்களிலும் தோல்வியுற்றது.

அப்போது இந்தியா என்றாலே இந்திரா என காங்கிரஸ் கட்சியினர் சொல்லிவந்தனர். இன்றைக்கு இந்தியா என்றால் இங்கு இருப்பவர்கள்தான் என்ற நிலை உள்ளது.

இந்திரா காந்தி காலத்தில் மூத்த காங்கிரஸ் கட்சியினர் புறக்கணிக்கபட்டு ஒரு நபர் ஆதிக்கம் இருந்தது அதே நிலைதான் இன்றும் தொடர்கிறது காங்கிரஸ் கட்சியில் உள்கட்சி ஜனநாயகம் இல்லை இன்றைக்கும் அந்த கட்சியில் சோனியா காந்தி அதற்குபின்பு ராகுல் காந்தி என்ற நிலைதான் உள்ளது.

நரேந்திர மோடியின் ஆட்சியில் மக்களின் ஆதரவோடு திட்டங்கள் நிறைவேற்றபட்டு வருகிறது. தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரமுடியும். பாஜக. தொண்டர்கள் அதற்காக பாடுபடவேண்டும் என்று அவர் பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சம்பங்கிப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, அரைத்த விழுதை ...

வாழையின் மருத்துவக் குணம்

வாழைப் பூவை ஆய்ந்து இடித்துப் பிழிந்த சாறு 100 மி.லி எடுத்து ஒரு ...

அலரியின் மருத்துவக் குணம்

இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ...