காங்கிரஸ்சில் இந்திரா காந்தி, சோனியா காந்தி, ராகுல் காந்தி என்ற நிலைதான் உள்ளது

 இந்தியாவில் 1975ல் கொண்டு வரப்பட்ட அவசரநிலையை கண்டித்து அதன் 40 ஆண்டு நிறைவையொட்டி பாஜக சார்பில் தாம்பரத்தில் பொதுக் கூட்டம் நடைபெற்றது.

பாஜக. மாநில தலைவர் தமிழிசை சவுந்திர ராஜன் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:–

காங்கிரஸ் ஆட்சியில் 1975–ல் இந்திரா காந்தி இந்தியா முழுவதும் அவசர நிலையை கொண்டு வந்தார். அவசர நிலை இந்தியாவில் கறுப்புநாட்களாக உள்ளது. அவசர நிலையில் இந்தியாவில் பாதிக்கப்பட்ட மக்களின் நிலைகுறித்து இன்றைய இளைய சமுதாயம் தெரிந்துகொள்ள வேண்டும்.

அவசர நிலையின் போது பிரதமர் நரேந்திர மோடி தலைமறைவு வாழ்க்கை நடத்தினார். அப்போது அவசர நிலையால் பாதிக்கப் பட்டவர்களின் குடும்பங்களுக்கு பொருளாதார உதவிகளை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டார்.

அவசரநிலை காரணமான ஆர்எஸ்எஸ். இயக்கத்தினரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பலர் வேலைகளையும் தொழிலையும் இழந்தனர்.

டெல்லியில் ஏராளமான கட்டிடங்கள் சஞ்சய்காந்தியால் இடித்து தள்ளப்பட்டது கட்டாய குடும்பகட்டுபாடு சட்டத்தை கொண்டுவந்து மக்களை கொடுமை படுத்தினர். இதற்கெல்லாம் எதிராக இந்தியா முழுவதும் பொதுமக்கள் போராடி அவசரகால நிலை முடிவுக்கு வந்தபின் நடைபெற்ற தேர்தலில் வரலாற்று சிறப்புமிக்க முடிவுகளை அளித்தனர். இதில் காங்கிரஸ் உபி, பீகார் போன்ற மாநிலங்களில் அனைத்து இடங்களிலும் தோல்வியுற்றது.

அப்போது இந்தியா என்றாலே இந்திரா என காங்கிரஸ் கட்சியினர் சொல்லிவந்தனர். இன்றைக்கு இந்தியா என்றால் இங்கு இருப்பவர்கள்தான் என்ற நிலை உள்ளது.

இந்திரா காந்தி காலத்தில் மூத்த காங்கிரஸ் கட்சியினர் புறக்கணிக்கபட்டு ஒரு நபர் ஆதிக்கம் இருந்தது அதே நிலைதான் இன்றும் தொடர்கிறது காங்கிரஸ் கட்சியில் உள்கட்சி ஜனநாயகம் இல்லை இன்றைக்கும் அந்த கட்சியில் சோனியா காந்தி அதற்குபின்பு ராகுல் காந்தி என்ற நிலைதான் உள்ளது.

நரேந்திர மோடியின் ஆட்சியில் மக்களின் ஆதரவோடு திட்டங்கள் நிறைவேற்றபட்டு வருகிறது. தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரமுடியும். பாஜக. தொண்டர்கள் அதற்காக பாடுபடவேண்டும் என்று அவர் பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பாஜக கூட்டணி வெற்றிக்கான காரணம ...

பாஜக கூட்டணி வெற்றிக்கான  காரணம் பீகார் சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் ...

பீகார் ஆட்சியைத் தக்கவைத்த தேச ...

பீகார் ஆட்சியைத் தக்கவைத்த தேசிய ஜனநாயகக் கூட்டணி பீகார் சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமை யிலான தேசிய ...

நான் தொழில் செய்வதில் என்ன தவறு

நான் தொழில் செய்வதில் என்ன தவறு "நான் தொழில் செய்வதில் என்ன தவறு இருக்கிறது? எனக்கு ...

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி ச ...

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி சம்பாதித்தது மத்திய அரசு மத்திய அரசு கடந்த ஐந்துஆண்டுகளில் தனது அலுவலகங்களில் இருந்து ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வே ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வேரியண்ட்டை அறிமுகப்படுத்திய நிதின் கட்கரி ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) நிறுவனத்தின் துணைநிறுவனமான விடா ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத் ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத்தை வீணடிக்க வேண்டாம் வாக்குதிருட்டு தொடர்பாக ராகுல் காந்தி முன்வைத்த குற்றச் சாட்டுக்கு ...

மருத்துவ செய்திகள்

அல்லிப் பூவின் மருத்துவக் குணம்

அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ...

தும்பையின் மருத்துவக் குணம்

தும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை டம்ளர் அளவு ...

பசி எடுக்கும்போது மட்டும் புசித்தால் போதும்

எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது ...